Saturday 26 August 2017


கொல்கத்தா

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது. 

இந்த் வழக்கு தொடர்ந்தவர்களில்  மேற்குவங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணும் ஆவார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம் இவருக்கு விடிவு கிடைத்து விடும் என நினைத்தால் அது நடக்கவில்லை. மீண்டும் அவருடைய துன்பம் தொடருகிறது.

இஷ்ரத்தின்   குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பக்கத்தில் உள்ளவர்கள் , நீதிமன்றத்தில் வழக்கு எதிராக போராடி அவளை கோபமாக பார்க்கிறார்கள்  அவளை ஊரைவிட்டே ஒதுக்கிவைக்க  முடிவு செய்து உள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததில் இருந்து, எனது சொந்தங்கள் மற்றும் அண்னை வீட்டாரிடம் இருந்து என்மீது அவமதிக்கும் கருத்துகள் கற்றும் என்னை களங்கபடுத்தும் விமர்சனங்கள் கூறப்படுகிறது என இஷ்ரத் கூறினார்.

அவருடைய அண்டை வீட்டாரில் பலர் அவரை  அழுக்கு பெண் என்று அழைத்தார்கள். அவர் ஆண்களின் எதிரி, மற்றும்  காபீர் என  அவர்களில் பெரும்பாலானோர் அவரிடம் பேச மறுத்துவிட்டனர்.

இஷ்ரத்தின் 15 ஆண்டு கால திருமண வாழ்க்கை ஏப்ரல்  2015 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.  அவரது கணவர் துபாயில் இருந்து  போன் மூலம் அழைத்து மூன்று முறை தலாக் கூறினார்.பின்னர்  மீண்டும் விரைவில் திருமணம் செய்து கொண்டார்.

அவரது கணவர் மூன்று மகள்களுக்கு தாயான  அவரை அவமானப்படுத்தி, தொந்தரவு செய்ததாக" இஷ்ரத் கூறினார், மேலும்  கணவர் தனது சகோதரருடன் ஒரு "உடல்ரீதியான உறவை" வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார் . 2014 இல் ஒரு மகன் பிறந்த போது, அவரது கணவர் இன்னொரு பெண்மணியை மணம் செய்ய முடிவு செய்து இருந்தார்.
-தின தந்தி.

Friday 25 August 2017

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழி பாடு செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வ.களத்தூர் பழைய காவல் நிலையம் எதிரில் விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி தோறும் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடை பெற்று வந்தது. ஆனால் சில வருடங்களாக பல காரணங்களால் விநாயகர் சிலை வைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் வ    .களத்தூர் இள  வட்டத்தின் முயற்சியால் மேலத்தெரு மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு திரளான மக்கள் வழிபட்டு வருக்கினறனர். 



பெரம்பலூர் மாவட்டம் பெண்ணக்கோணம் வடக்கு (லெப்பை குடிகாட்டில்) வெண்கல சிலை விநாயகர் ஊர்வலம் ம ங்கள மேடு டி எஸ் பி பாதுகாப்பு தர ஊர்வலம் கோலாகலமாக நடை பெற்றது... ஊர்வலதில் தப்பாட்டம் முழங்க விநாயகர் ஊர்வலம் நடை பெற்றது..