Sunday 20 November 2016






வ.களத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வ.களத்தூரில் உள்ள IOB வங்கியில் கணக்கு உள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் பணம் எடுக்க வ.களத்தூர் IOB வங்கிக்கு தான் வருவார்கள்.

கடந்த வியாழன் அன்று கால்கடுக்க நின்றவர்களுக்கு பணம் கிடைக்காததால் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெள்ளி அன்று சென்றவர்களுக்கு வங்கியில் பணம் இல்லை என்ற பதிலே கிடைத்தது.





கடந்த சனிக்கிழமை மூத்த குடிமக்களுக்கு மட்டும் பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினால் ஏராளமான வயதான மக்கள் காத்துக்கிடந்தனர். ஆனால் புதிய ரூபாய் நோட்டு வரவில்லை என்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்றும் வங்கி விடுமுறை , அதனால் வங்கி திறக்கப்படவில்லை.


இன்று வங்கி கிளையில் கடும் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்இன்றாவது பணம் கிடைக்குமா...


அது ஒரு பக்கம் இருக்க ஏடிஎம் மையங்களும் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் செய்கின்றனர்.

இதனால் வ.களத்தூர் பகுதியில் கடந்த 3 நாள்களாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடனடியாக இந்த பண பிரச்சனைகளுக்கு வி.களத்தூர் IOB வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். vkalathur v.kalathur






Tuesday 15 November 2016


புதுடில்லி: ஜாகிர் நாயக்கின் என்.ஜி.ஓ., அமைப்பான ‛இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன்' க்கு 5 ஆண்டு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பரப்புரை


முஸ்லிம் மதபோகரான ஜாகிர் நாயக்கின் பீஸ் டி.வி., தொலைக்காட்சி மற்றும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டசேன் எனப்படும் என்.ஜி. ஓ. வை நடத்தி வருகிறார். பீஸ் டி.வி., மூலம் ஜாகிர் நாயக் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் வங்க தேசத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதி ஒருவன் ஜாகிர் நாயக்கின் பேச்சால், தான் அதிகம் கவரப்பட்டதாக கூறினான். இதையடுத்து, விசாரணை நடத்திய வங்கதேச அரசு பீஸ் டி.வி., ஒளிப்பரப்பிற்கு தடை விதித்தது.

உள்துறை அமைச்சகம் விசாரணை


அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. ஜாகிர் நாயக்கின் பேச்சுகள், அமைப்பின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில், விசாரணையின் முடிவில் அவரின் ‛இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன்' எனப்படும் என்.ஜி.ஓ., அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் 5 ஆண்டு தடை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றது, பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்தது போன்ற காரணங்களுக்காக ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

5 ஆண்டு தடை விதிக்க முடிவு


ஆலோசனையின் முடிவில் சட்ட விரோதமாக வெளிநாட்டு நிதிகள் பெற்றதற்காக 5 தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. vkalathur v.kalathur.

-தினமலர் 


   ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், பழைய நோட்டுகளை மாற்றுவோரின் கை விரலில் எளிதில் அழிக்கமுடியாத மை வைக்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
கைவிரலில் அடையாள மை வைக்கும் முறை இன்றுமுதல் பெருநகரங்களில் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ரொக்க கையிருப்பு பணம் போதுமான அளவு இருப்பதால் மக்கள் நாட்டில் பணப் புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப் பட்டது.
இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.
வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. காசோலை மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
மக்களின் சிரமம் கருதி சில சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில கெடுபிடிகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி:
1. பழைய ரூ.1000, 500 மாற்றுவோரின் கை விரலில் அடையாள மை வைக்கப்படும்
2. இதன் மூலம் ஒரே நபர் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று கூட்ட நெரிசலை ஏற்படுத்துவதை தடுக்கப்படும்.
3. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஆட்களை அனுப்பி பணத்தை மாற்றுவது தடுக்கப்படும்.
4. கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
5. ஜன்தன் கணக்குகளில் செலுத்தப்படும் பணத்தை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நியாயமான முறையில் அந்த கணக்குகளில் பணம் செலுத்துபவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.
6. கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் தங்களது உண்டியலில் பெறப்படும் ரூ.100, 50, 20, 10 சில்லறை பணத்தை உடனடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சில்லறை புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.
7. கிளை தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.
8. ரூ.2000 நோட்டுகளில் சாயம் போவதற்குக் காரணம் அதனை அச்சிட பயன்படுத்தப்படும் மை. சாயம் போனால் அது நல்ல நோட்டு. போகாவிட்டால் அது கள்ள நோட்டு. புதிய ரூ.100 நோட்டுகளைக்கூட ஈரமாக்கப்பட்ட பஞ்சு கொண்டு தேய்த்தால் லேசாக சாயம் ஒட்டும்.
இவ்வாறு சக்திகாந்த் தெரிவித்தார்.v.kalathur vkalathur

- தமிழ் இந்து.

Tuesday 14 June 2016



பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ராயப்ப நகரைச் சேர்ந்த கிராம மக்கள், ஆட்சியர் க. நந்தகுமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
வ.களத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ராயப்ப நகரில் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் பகுதிக்கு மேற்காக வசிக்கும் இஸ்லாமிய மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றும் கழிவு நீரை,
எங்களது குடியிருப்பு பகுதி அருகே உள்ள கல்லாற்றில் குடிநீராக பயன்படுத்தப்பட்டு வரும் பகுதியில் கலப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கழிவுநீர் கல்லாற்றில் கலந்தால் குழந்தை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். மேலும், இப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும். கழிவுநீரை கல்லாற்றில் கலப்பதை தடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேப்பந்தட்டை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அரசு அலுவலர்களின் அலட்சியத்தால், தற்போது கழிவுநீரை கல்லாற்றில் கலப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.
எனவே, இந்த முயற்சியை தடுத்து, எங்களது குடிநீர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
- தினகரன்.

Wednesday 1 June 2016

அத்தனையும் இலவசம்... பயணடையுங்கள் வ.களத்தூர் மக்களே,...

புதிதாக கிணறு வெட்ட., பழைய கிணறு தூர் வார, ஆடு மற்றும் மாட்டுப்பண்ணை அமைக்க, பைப் லைன் அமைக்க என அனைத்தும் ஒரு பைசா செவில்லாமல் உங்கள் நிலத்தில் அரசின் முழு மானியத்துடன் அமைத்துக்கொள்ளளாம்.

இதற்கு நீங்க செய்ய வேண்டியது , இந்த இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவம் எல்லா அரசு அலுவலகங்களிலும் கிடைக்கும்.  குறிப்பாக வேளான்மை சார்ந்த அலுவலகங்களிலும் கிடைக்கும். இல்லையென்றால இதனையே பிரதி எடுத்தும் பயண்படுத்தலாம் .  அதனை பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள படிவங்கள் அனைத்தையும் இணைத்து நீங்கள் எங்கு விண்ணப்பம் வாங்கினீர்களோ அந்த அலுவலகத்திலேயே கொடுக்கலாம் , முக்கியமாக வ.களத்தூர் VAO , வேப்பந்தட்டை வேளான்மை அலுவலகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுக்கலாம்.

நம்மில் சிலர் வ.களத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் ஏற்கனவே கொடுத்திருக்கலாம். ஆனால் சிலரது பெயர்கள் மட்டுமே  பரிந்துரைக்கப்பபட்டிருப்பதாக தெரிகிறது. எனவே

இந்த அரிய வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் சொந்தங்களே...

Wednesday 25 May 2016


பத்தாம் வகுப்பு தேர்வில் வ.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி 91% தேர்ச்சிப் பெற்றுள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 202 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 184 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வ.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம்:

முதல் இடம் -  G.வைதேகி (வண்ணாரம்பூண்டி)      -   450/500. 
இரண்டாம் இடம் -  M.வாசுகி (வண்ணாரம்பூண்டி)  -  442/500.  
மூன்றாம் இடம்   -  S.அப்ரின் பானு  -   438/500.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கு எமது தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ...

Tuesday 24 May 2016


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆட்சியர் க. நந்தகுமாரிடம் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துள்ளது. மேலும், பல ஏரி, குளங்களில் சீமைக்கருவேல மரங்களும், நாட்டுக் கருவேல மரங்களும் வளர்ந்து அடர்ந்துள்ளது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்துவிட்டது. நீர்நிலைகளுக்கு மழைநீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர்நிலைகளின் கரைகளில் மரக்கன்றுகள் நட்டு அவற்றை பாதுகாக்க வேண்டும்.
ஏரி, குளங்களின் உண்மையான பரப்பளவு, நீர் வழித்தடங்கள் ஆகியவை அளவிடப்பட்டு, அதன் முழுமையான பரப்பளவை மீட்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஏரி, குளங்களின் பரப்பளவுடன் கூடிய தகவல் பலகையை அப்பகுதியில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி, வேளாண்மையை வளப்படுத்தி, விளைச்சலை அதிகரிக்கவும், செயற்கை உரங்களின் நச்சுப் பிடியிலிருந்து விடுபடவும், ஏரி, குளங்களின் வண்டல் வீழ்படிவினை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவும், வண்டல் மண் எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நந்தகுமார், ஏரி, குளங்களில் எந்தெந்த வாகனத்தின் மூலம் மண் அள்ளப்படுகிறது என்பதை முன்கூட்டியே மாவட்ட நிர்வாத்திடம் தகவல் அளித்துவிட்டு, விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்றார் அவர்.

-தினமணி.

Monday 23 May 2016



பெரம்பலூர் : கோடை கால விடுமுறை முக்கால்வாசி முடிந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையான பராமரிப்பின்றியும், கேட்பாரற்றும் கிடக்கும் சுற்றுலாத் தலங்களை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள் இருந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியில் பரப்பளவை குறைவாகக் கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியை நம்பியுள்ள விவசாயிகள் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். 

இதனால் இம்மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகித்துவருகிறது. இம்மாவட்டத்தில் தான் மாநிலத்திலேயே மிக அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும், இம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மட்டும் இதுவரை மேம்படுத்தப்படாமலேயே இருந்து வருகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையை கூட அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்துவருவது சுற்றுலா ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

சந்தா சாஹிப்- பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலி- ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் இடையே 1751ல் நடைபெற்ற வால்கொண்டாபோர் ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றதை வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டையில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புனரமைப்பு பணிகள் வெறும் பெயரளவுக்கு மட்டுமே நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளாக இக்கோட்டைக்குச் செல்வோருக்கு குடிநீர், உணவு, கழிப்பிட வசதி என எதுவும் செய்துதரப்படவில்லை. இதனால் தனிமையை விரும்பும் காதல் ஜோடிகளைத் தவிர இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வதில்லை என்பது வேதனை தருகிறது.
 இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சான்றாக சாத்தனூர் கல் மரம் திகழ்கிறது. கடல் இருந்ததாகக் கூறப்படும் இப்பகுதியில் ‘கோனிபர்ஸ்’ எனப்படும் பூக்காத வகை தாவரத்தைச் சேர்ந்த மரமொன்று ஆழிப்பேரலையில் புதையுண்டு காலப்போக்கில் இப்படிக் கல்லாகிப் போனதாக நிலவியல் துறை ஆதாரங்கள் கூறுகின்றன. 

இந்த கல்மரத்தின் அருகே தங்குமிடம் கட்டப்பட்டதே ஒழிய தேவையான போக்குவரத்து, குடிநீர், மின்சார வசதி செய்துதரப்படவில்லை.
 இதே போல் லாடபுரத்தில் உள்ள மயிலூற்று அருவிக்குச் செல்லும் பாதை சிதிலமடைந்து காணப்படுகிறது. சரிவர மழை பெய்யாமல், அருவியில் தண்ணீர் கொட்டாமல், பாதையை மட்டும் சீரமைத்து என்ன பயன் என கருதிய மாவட்ட நிர்வாகம் அதையும் கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டது. 

இவை தவிர கண்ணகி சினம் தனித்தலமாகக் கூறப்படும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் குளங்கள் சீரமைக்கப்படாமலும், பரவாய், ஒகளூர் பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகளும் கண்டுகொள்ளப்படவில்லை. 300 ஆண்டுகள் பழமையான மூலிகை ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயிலும் சுற்றுலாத் துறையால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், மற்ற மாவட்டங்களைப் போல், பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை மாவட்ட நிர்வாகத்தோடு கொண்டாடவும், அதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவது மட்டுமே தனது பணியென நினைத்துவிட்டது. 

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள விசுவக்குடி அணைக்கட்டு மட்டுமே உள்ளூர் சுற்றுலா ஆர்வலர்களுக்கு ஆறுதலான ஒன்றாக உள்ளது. அரசுத் துறை அலுவலர்களுக்கு மட்டும் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா மாலைநேர பொழுதுபோக்கு இடமாக உள்ளது. அவ்விடமும் தற்போது கல்லூரி ஜோடிகளின் காமலீலைகளுக்கு புகழிடமாகி விட்டது. 

சிறுவர் பூங்கா என்றாலும், அதில் உள்ள ஊஞ்சல், சாய்வுத்தளத்தை பெரியவர்கள் பயன்படுத்துவதால் பழுதடைந்து பேரீச்சம் பழ வியாபாரத்துக்கு  தயார்நிலையில் உள்ளது. கோடையில் அனுபவிக்க வேண்டிய முக்கால்வாசி லீவு முடிஞ்சேபோச்சு. இதுவும் எஞ்சிய விடுமுறையைக் கொண்டாட மக்கள் திருச்சி, மதுரை, தேனி, நீலகிரி மாவட்டங்களுக்குத் தான் படையெடுத்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த மாநில சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்பைடையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இன்று புதிதாக சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவியேற்கும் வெல்லமண்டி நடராஜன் தீர்வு காண முன்வர வேண்டும் என்பதே சுற்றுலா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 -தினகரன்.
பெரம்பலூரில் தமிழ்நாடு பிராமணர் சங்க பெரம்பலூர் மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீசிருங்கேரி மடம் சார்பில் சமஸ்கிருத இலவச பயிற்சி வகுப்புகள் மதரசா சாலையில் உள்ள என்.டி.சி.மையத்தில் சனிக்கிழமை மாலை துவங்கியது.
இம்மாதம் 30-ந்தேதிவரை தினமும் மாலை 4மணிமுதல் 6மணிவரை நடக்கிறது. சமஸ்கிருத மொழி பயிற்றுனர்கள் விஷ்ணு, மஞ்சுளா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சியை பயிற்சி ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமானஆனந்த நடேசன் துவங்கி வைத்து பேசும்போது, இந்த பயிற்சியில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்கள், பெரியவர்கள் இருபாலரும் அனைத்து வயதினரும், சமஸ்கிருதம் பயில ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். பயிற்சி துவக்க விழாவில் சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் சுபிக்‌ஷா சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Saturday 21 May 2016

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம் வ.களத்தூர் சொந்தங்களே...

இடையில் ஏற்பட்டசில தவிர்க்க முடியத காரணங்களால் நாங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தோம். இக்காலத்தில் தேரடி மண்டபம் எரிக்கப்பட்டது போன்ற கடினமான  சூழ்நிலைகளிலும் நாங்கள்  பொறுமை காத்தோம்....

ஆனால் எதிர்கால வா.களத்தூரின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் எமது சேவையை துவக்குகிறோம்... உங்களின்மேலான ஆதரவை தாருங்கள் என கைகூப்பி வேண்டுகிறோம்...

                                                                                                --வ.களத்தூர் செய்தி மீடியா.