Sunday 24 May 2015


வ.களத்தூரில் கடந்த சிலவருடங்களாக நடக்கும் நிகழ்வுகளை கண்டு மனம் வெறுத்து போன பலரில் நாங்களும் சிலர். நீங்கள் ஊருக்கு நல்லது செய்வீர்கள் என நம்பித்தான் வ.களத்தூர் இந்துக்களின் சார்பாக உங்களை அரசு அதிகாரிகள் நடத்தும் கூட்டத்திற்கு அனுபிவருகிறோம்…
வ.களத்துரை பொருத்த அளவில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் இருந்தாலும் , எந்த பிரச்சினை என்றாலும் தங்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்படவில்லை என்றால் “தாங்கள் சிறுபான்மை மக்கள் , பெரம்பலூர் மாவட்ட அரசு அதிகாரிகளிடம் தங்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை ” என மிரட்டும் தொனியில் செயல்படுகிறார்கள். இந்த ஆயுதத்தைத்தான் கடந்த காலங்களில் வ.களத்தூர் இந்து-முஸ்லிம் பிரச்சினையில் நியாயமாக செயல்பட்ட அரசு அதிகாரிகளான வாலிகண்டபுரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட RDO ரேவதி, ஆகியோருக்கு எதிராக பெரம்பலூர் மாவட்டமெங்கும் கண்டன போஸ்டர் ஒட்டினார்கள். தமிழகமெங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் இவர்களுக்கு எதிராக போராட்டங்கள் கூட நடத்தின. இன்ஸ்பெக்டர் செல்வம் சாலை விபத்தில் இறந்த சமயத்தில் பிரியாணி விருந்தெல்லாம் நடந்தது என்ற விஷயம் உங்களுக்கே தெரியும்.
இதன் மூலம் இவர்கள் சொல்ல வருவது ஒரே விஷயம் மட்டுமே ” எங்களுக்கு ஆதரவாக , நாங்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நாங்கள் யாரையும் எதிர்க்க தயங்க மாட்டோம்” என்பதே… பொதுவாக அவர்களைபொருத்த அளவில் அது நியாயமான விஷயம்.
ஆனால் வ.களத்தூர் இந்துக்களின் ஒரே நம்பிக்கையாக , அவகளின் சார்பாக அரசிடம் பேசும் முக்கியஸ்தர்கள் என அழைக்கப்படும் காருவாரிகளாகிய நீங்கள் அரசு அதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது என்பதை கொள்கையாகவே வைத்துள்ளீர்கள். அதிலும் பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது எட்டு காருவாரிகள் இருந்தும் ஒரே ஒருவர் மட்டுமே பேசுவது எந்த விதத்தில் நியாயம்…
அப்படியே அடுத்தவர் பேசினாலும் அரசு அதிகாரிகள் அவர்களை பேச அனுமதிப்பதில்லை… ஏனென்றால் நம் பலவீனம் அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு எல்லோரையும் பேச அனுமதிக்காத அரசு அதிகாரிளிடம் “நாங்கள் எல்லோரும்தான் பேசுவோம்” என எதிர்ப்பை தெரிவிக்க தைரியம் இல்லாத நிலைதான் உங்களிடம் இருக்கிறது.
கடந்த மே 16 ம் தேதி பெரம்பலூர் மாவட்ட சப் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நம் காருவரிகளில் ஒருவரை மட்டுமே பேச அனுமதித்ததாகவும்… கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்களில் மற்றொருவர் பேச முயலும்போது ” இங்கு என்ன கட்ட பஞ்சாயத்தா நடத்துகிறோம்..” என மதுசூதன் ரெட்டி கூறி அவரை பேசவிடாமல் தடுத்ததாகவும் கேள்விப்படுகிறோம். கூட்டத்திற்கு அழைத்து விட்டு பேச வேண்டாம் சப் கலெக்டர் கூறும்போது அனைவரும் சேர்ந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நிலையில் இருந்தும் வாய் மூடி வேடிக்கை பார்த்துவிட்டு வந்துள்ளீர்கள். இதே மாதிரி சப் கலெக்டர் இஸ்லாமிய பிரதிநிதிகளிடம் பேச முடியுமா..?
அதேபோல் ஊர் தொடர்பான முக்கிய முடிவுகளை கடந்த சிலவருடங்களாக பொதுமக்களின் கருத்தை கேட்காமல் செல்வதால்தான் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர் களிடம் உங்கள் மீது கடுமையான எதிர்ப்ப்பு இருந்து வருகிறது. வ.களத்தூர் தேரடித்திடலில் ஆர்கெஸ்ட்ரா நடத்துவதற்கு முன் நம்மை கட்டாயபடுத்திய அரசு அதிகாரிகளை எந்த அளவிற்கு நம்பவேண்டும் என அடிப்படைகூட புரியாதவர்களா நீங்கள்..? எந்த அடிப்படையில் சப் கலெக்டர் சொன்னார் என்ற காரணத்திற்க்காக தேரடித்திடலில் ஆர்கெஸ்ட்ரா நடத்த அனுமதி கையெழுத்து போட்டுவிட்டு வந்தீர்கள்…? இந்துக்களின் பிரச்சனைகளை தீர்க்கிறேன் என்று சொல்லி கையெழுத்து வாங்கிய சப் கலக்டரை இப்பொழுது ஏன் அப்படி செய்யவில்லை என கேட்க கூடவா உங்களுக்கு துணிவில்லை..?
ஆர்கெஸ்ட்ரா நடத்த அனுமதித்த சப் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி க்கு நன்றி தெரிவித்து ஊர் முழுக்க போஸ்டர் ஓட்டும்போது , இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக செயல்படும் சப் கலக்டரின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து கூற என்ன தயக்கம்..?
இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்கள் மீதுள்ள வழக்கை வாபஸ் பெறுங்கள் என மதுசூதனன் ரெட்டி கூறும்போது ” நீங்கள் ஒரு சார்பாக செயல்படுகிறீர்கள் நீங்கள், உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை ” என ஒரு எதிர்ப்பை கூட தெரிவிக்காமல் வந்தது எதனால்… எதிர்ப்பை தெரிவித்தால் அவரால் என்ன உங்களை செய்து விட முடியும்..அப்படியே எதிர்ப்பை தெரித்தால் உங்களை ஜெயிலிலா தூக்கி போட்டு விடுவார் … அப்படியே போட்டாலும் உங்கள் பின்னால் வ.களத்தூர் இந்துக்களாகிய நாங்கள் நிற்க மாட்டோம் என நினைக்கிறீர்களா..?
ஒரு சப் கலெக்டர் “எப்போதும் எங்களால் பாதுகாப்பு தரமுடியாது… அதனால் சுவாமி ஊர்வலம் மட்டும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் அனுமதிக்க முடியும்” எனகூறுகிறார். இப்படி பேச யார் அவருக்கு அனுமதி அளித்தது… வ.களத்தூர் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது…? நம் தெருக்களில் இஸ்லாமியர்களை அனுமதிக்க முடியாது என நாம் கூறினால் அவர் சும்மா விட்டுவிடுவாரா…? – இதையும் வாயை மூடி கேட்டுக்கொண்டு வந்துள்ளீர்கள்.
“என்னய்யா அங்க பிரச்சினை…? ஏதாவது செஞ்சி சமாளிங்க..”இதுதான் அரசைப்பொருத்தவரை ஒருபிரச்சினையை சமாளிக்க கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூறும் அறிவுரை.
சாதாரண VAO வில் இருந்து மாவட்ட கலெக்டர் வரையில் இதுதான் நிலை…. பொதுவாக அரசு அதிகாரிகளின் மனநிலை என்ன வென்றால் எந்த இடத்திலும் பிரச்சினை இருக்ககூடாது என்பதுதான்…. அதிலும் குறிப்பாக நம் வேலைக்கோ , பணிக்கோ பாதிப்பு ஏற்படக்கூடாது எனத்தான் சிந்திப்பார்களே தவிர மக்களின் பொதுவான நியாய தர்மம் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதுதான் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொருந்தும். ஒருவர் அல்லது இருவர் தனியாக மாட்டினால் துவைத்து எடுக்கும் போலிஸ் அதிகாரிகள் நூறு பேர் ரோட்டில் உட்கார்ந்தால் ஓடிவந்து பேச்சுவாத்தை நடத்த வருவார்கள்….
அரசியல் வாதிகளும் அப்படித்தான் “இதில் நமக்கு ஆதாயம் ஏதாவது இருக்கிறதா..?” என கணக்கு போடுவார்களே தவிர நியாயம் தர்மம் நீதி எல்லாம் அவர்களுக்கு தெரியாது… அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நமக்கு எவ்வளவு ஒட்டு கிடைக்கும் என்ற கணக்குத்தான்.
வ.களத்தூர் இந்து-முஸ்லிம் பிரச்சினையிலும் இதே நடைமுறையைத்தான் அரசு அதிகாரிகளும் , மாவட்ட ஆட்சித்தலைவரும் கடைபிடித்துவருகிரார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
வ.களத்தூரை பொறுத்த அளவில் இந்துக்களால் இதுவரை அரசுக்கு தொந்தரவு வந்ததில்லை. நாம் இதுவரை ஒரு பெட்டிசன் கூட போட்டதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை . ஆனால் எதிர் தரப்பினர அப்படியல்ல . எதற்கெடுத்தாலும் பெட்டிசன்… அவர்களை சொல்லியும் குற்றமில்லை உண்மையில் பிரச்சினை வேண்டாம் என இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் கருதினாலும் இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்குள் யார் பெரியவர்…? , யார் இஸ்லாமிய மக்களின் ஓட்டை அதிகம் பெறமுடியும் என்ற போட்டியில் ஊரை மதரீதியாக பிளவுபடுத்தும் வேலையை கடந்த சில வருடங்களாக சிறப்பாக செய்துவருகிறார்கள்.
வ.களத்தூரில் எந்த பிரச்சினையை கையில் எடுத்தால் உணர்ச்சி ரீதியாக மக்களை பிளவுபடுத்த முடியும் என அவர்களுக்கு தெரிந்திருக்கிறது…. அதன் தொடர்ச்சிதான் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தெருக்களின் வழியே இந்துக்களின் ஊர்வலம் வரக்கூடாது என இஸ்லாமியர்களில் சிலர் தடுத்ததும் , அதன் காரணமாக கலவரம் ஏற்பட்டது என்பது வரலாறு.
…………………………………………………………………………………………………………………………………………………………………….
சரி…. வ.களத்தூர் இந்துக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் இதை மட்டுமாவது இனி செய்ய முயலுங்கள்…
– அரசு அதிகாரிகள் சொல்லுவதையெல்லாம் கேட்டுக்கொள வேண்டும் என்ற அவசியம் நமக்கு இல்லை… சில நேரங்களில் அவர்களை எதிர்த்துதான் நாம் பேசியாக வேண்டும். அவ்வாறு பேசினால் உங்களை அவர்கள் ஒன்றும் செய்துவிட முடியாது.. நாங்கள் உங்கள் பின்னல் இருக்கிறோம்.
– எந்த ஒரு முக்கிய கூட்டத்திற்கு செல்லும்போதும் மக்களின் கருத்தை ஒருமுறையாவது கேட்டுவிட்டு செல்லுங்கள்… அங்கு நடப்பதையாவது எது முக்கியமோ அதையாவது சொல்லுங்கள்… அப்போதுதான் நாங்கள் எல்லோரும் உங்கள் பின்னால் எவ்வித கலக்கமும் இன்றி ஆதரவாக செயல்படமுடியும்.
-இஸ்லாமியர்கள் சார்பாக இளைஞர்கள் கலந்துகொள்ளும்போது, நம் சார்பில் மட்டும் நீங்கள் மட்டுமே செல்வது நியாயமா,,? ஆகவே அரசின் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது பாதிபேராவது இளைஞர்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
-நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய குறை கூட்டத்தில் ஒருவர் மட்டுமே பேசுவதுதான். ஒருவர் மட்டுமே பேசும்போது அவருக்கு மட்டுமே அரசு அதிகாரிகள் மரியாதை தருவார்கள். அவரின் வீக்னஸ் என்ன வென்று தெரிந்த வுடன் அவருக்கு ஏற்றவாறு பேசி மடக்கிவிட வாய்ப்பு உள்ளது. எனவே கூட்டத்திற்கு செல்வதற்கு முன் யார் என்ன பேச வேண்டும் என முடிவு செய்துவிட வேண்டும். அவ்வாறு மற்றவர்கள் பேசினால் பேச அனுமதிக்காத அதிகாரியை எதிர்த்து அனைவரும் ஒரே அணியில் திரண்டு எதிர்க்கவேண்டும்…
– இந்துக்களின் திருமண ஊர்வலத்தின் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியவர்கள் மீதுள்ள வழக்கினை வாபஸ் பெற கட்டாயப்படுத்தும் சப் கலெக்டரின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவிக்க வேண்டியது முக்கிய கடமை… இது வரை நமது கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஷ் அகமது நம்மை சந்திக்க அனுமதித்ததில்லை. ஆனால் இப்போது நம்மை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திக்கவில்லை என்றால் அங்கேயே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்…. அல்லது ஒரு தேதி அறிவித்து விட்டு அன்றுமாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
– வ.களத்தூர் இஸ்லாமியர்கள் சார்பாக இஸ்லாமிய அமைப்புகள் கலந்துகொள்ளும்போது நம் சார்பாக இந்து அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் நிர்வாகிகளையும் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைத்துசெல்ல இனி முயற்சிசெய்வோம். எதையும் அமைப்பு ரீதியாக அணுகினால் அரசு அதிகாரிகள் பொறுப்பான முறையில் நியாயமாக செயல்ப்-அட முன்வருவார்கள்.
– வ.களத்தூர் ரைச் சுற்றிலும் இந்துக்கள் வாழும் கிராமங்கள் இருந்தும் நாம் அவநம்பிக்கை கொண்டு வாழ்வது அர்த்தமற்றது. அந்த ஊர் முக்கியஸ்தர்களை நம் ஊர் விழாவிற்கு அழைத்து கவுரவிக்க வேண்டும். அதுபோல் சுத்துப்பட்டு கிராம மக்கள் அனைவருக்கும் நம் ஊர் நிலவரத்தை புரிய வைக்கவேண்டும்… அவ்வாறு செய்யும்போது அவர்களின் ஆதரவும் நமக்கு கிடைக்கும்.
-எக்காரணத்தை கொண்டும் வழக்கினை வாபஸ் பெற்று விட வேண்டாம்… நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அதுதான்.
எங்களின் எதிர்பார்ப்பு இதுதான்…. நிறைவேற்றுவீர்களா…?

0 comments:

Post a Comment