Sunday 15 February 2015


வன்னாரம்பூண்டி களத்தூர் என்ற வ.களத்தூர் பெரிய தேர் திருவிழா நடைபெற்று இருபது வருடம் ஆகப்போகிறது… புதிதாக செய்த தேரை வெள்ளோட்டம் விட்டதோடு சரி…. தேரை நாகர்த்துவதர்க்கான எந்த செயலையும் யாரும் செய்யவில்லை என்பதே உண்மை.
தற்பொழுது அரசே முன்வந்து இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோவில்களின் தேரையும் சீரமைத்து திருவிழா நடத்த முன்வந்துள்ளது. அந்த வகையில் நம் ஊரின் பெரிய தேருகான செப்பனிடும் வேலைகள் விரைவில் நடைபெறும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு இதோ வருகிறது….. இதோ வருகிறது…. என்று சில வருடங்களாக சொல்லப்பட்டு வந்துள்ள நிலையில் சென்ற வாரம் தேருக்கான இரும்பாலான சக்கரம் மற்றும் அச்சு வந்திறங்கியுள்ளது.
இதை அறிந்த நம் சுற்று வட்ட கிராம மக்கள் பெருமளவில் வந்து ஆச்சர்யமுடன் பார்த்தனர் என்பது மட்டுமல்லாமல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டு தேரில் சக்கரம் மற்றும் அச்சு பொருத்தும் வேலைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நேரத்தில் வ.களத்தூர் மற்றும் சுற்றுவட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் எதிர்பார்பெல்லாம் எப்பொழுது தேரின் வெள்ளோட்டமும் திருவிழா என்பதுதான்…

0 comments:

Post a Comment