Saturday 6 December 2014

சமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை. ஆனால் விவாதிப்போம் என்று கூடிப் பேசுகிறார்கள். காரணம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷி அவர்கள் “இராமர் கோவில், இராமர் பாலம், பசுப் பாதுகாப்பு, கங்கை சுத்தப்படுத்துதல், 370ஆவது பிரிவை நீக்குதல், பொது உரிமையியல் சட்டம் ஆகியன பாஜகவின் செயல்திட்டத்தின் பிரிக்கவியலாத அம்சங்கள்” என்று கூறியதே.


rama

அயோத்தியில் இராமர் பிறந்த இடத்தில் தான் மசூதி என்று கட்டப்பட்ட கும்மட்டம் ஒன்று கிட்டத்தட்ட 485 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது, அங்கே இராமர் கோவிலை இடித்துவிட்டு 1525ஆம் ஆண்டு மீர் பாகி என்ற பாபரின் தளபதி மசூதி ஒன்றைக் கட்டினான். அதற்கு பாபரின் பெயரால் பாப்ரி மசூதி என்று பெயரிட்டான்.


1767ல் ஜோசப் டிபெந்தாலர் என்கிற ஆஸ்திரிய நாட்டுப் பாதிரியார் ஒரு மசூதியில் இந்துக்கள் ஸ்ரீராம நவமி விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பெழுதிவைத்திருக்கிறார். 1788ல் டிபெந்தாலரின் குறிப்புகள் பாரீஸ் நகரில் வெளியிடப்பட்டன. அதுதான் பாப்ரி மசூதி என்றறியப்பட்ட கும்மட்டமே இராம ஜென்ம பூமி என்பது குறித்த அச்சிடப்பட்ட முதல் வெளிநாட்டார் குறிப்பு.


”ராம்கோட் என்ற கோட்டையை ஔரங்கசீப் இடித்துவிட்டு அங்கே மூன்று கும்மட்டங்களை உடைய மகமதிய வழிபாட்டுத் தலத்தைக் கட்டினான். அதை ஹிந்துக்கள் 1707ல் ஔரங்கசீப் இறந்த பிறகு போரிட்டுப் பிடித்து மீண்டும் வழிபாடு நடத்தினர். ஜஹாங்கீர் காலத்தில் ஒரு முறை இவ்வாறு போரிட்டு ராம்கோட் கோட்டையைப் பிடித்து ஹிந்துக்கள் இராமரை வழிபட்ட வரலாறு இருக்கிறது. இது போல முன்காலங்களில் பல முறை இராமர் பிறந்த இடத்தை ஹிந்துக்கள் போரிட்டுப் பிடித்து வழிபடுவதும் இசுலாமியர்கள் மீண்டும் அவ்விடங்களைப் பிடிப்பதும் நடந்திருக்கிறது.” என்ற இந்தக் குறிப்பு முழுவதும் அயோத்தி இராமஜென்மபூமி தீர்ப்பில் இருக்கிறது.


Ram JanmBhoomi Babri Masjid Judgement – Annexure IV – Page 129 to 162, pp. 129–162, retrieved 15 April 2011



1858ல் பாப்ரி மசூதியின் தொழுகை அழைப்புப் பாடகர் ஆங்கிலேய அரசிடம் கொடுத்த மனுவில் நூற்றுக்கணக்கான வருடங்களாக ஹிந்துக்கள் இங்கே வழிபாடு நடத்திவந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.


The Truth of Babri Mosque. IUniverse.com. 2012. p. 184. ISBN 1475942893.



ஆங்கிலேய அரசு அயோத்தி ஹிந்துக்களின் முக்கியத் தலம் என்று வரையறுத்தது. அது மக்கள் தொகை அடிப்படையில் ஹிந்துக்கள் 66.4% பேர் அயோத்தியிலும் ஃபைசாபாத் மாவட்டத்தில் 60%க்கும் அதிகமாகவும் இருப்பதால் அல்ல. இராமஜென்மபூமி ஹிந்துக்களின் புனிதபூமி என்பதால் மட்டுமே ஆங்கிலேய அரசு இந்த முடிவுக்கு வந்தது.
Islam, Arshad. "Babri Mosque: A Historic Bone Of Contention." Muslim World 97.2 (2007): 259-286. Academic Search Elite. Web. 23 September 2012.

ஷேக் முகமது அசாமத் அலி ககோராவி நாமி (1811–1893) என்கிற இஸ்லாமிய அறிஞர் எழுதியிருக்கிறார், ”துவக்கத்திலிருந்தே இஸ்லாமிய அரசர்கள் பின்பற்றிய விதி காஃபிர்களின் பகுதிகளில் மசூதிகள், மதரசாக்கள் கட்டுவது, இஸ்லாமைப் பரப்புவது, இஸ்லாம் அல்லாத பழக்கங்களை வழக்கொழிப்பது என்பதே ஆகும். அவர்கள் மதுரா, பிருந்தாவன் ஆகிய இடங்களில் இஸ்லாம் அல்லாத குப்பைகளைச் சுத்தமாக்கினர்.


பாப்ரி மசூதி சையத் மூசா அஷிகன் என்பவரது வழிகாட்டுதலில் ஜன்மஸ்தான் கோவிலின் மீது கட்டப்பட்டது. அப்பகுதி ஹிந்துக்களின் சிறந்த வழிபாட்டுக்கு உரியதாகவும் இராமனின் தந்தையின் தலைநகரமாகவும் இருந்தது. ஹிந்துக்கள் இதை சீதையின் சமையற்கூடம் என்று அழைத்தனர்.


ஃபசானா இ இப்ராத் என்ற நூலை எழுதிய மிர்சா ரஜப் அலி பெக் சுரூர் (1787–1867) என்பவர் அந்நூலில் குறிப்பிடுகிறார் “பாபரின் ஆட்சிக்காலத்தில் சீதையின் சமையற்கூடம் என்று அறியப்பட்ட பகுதியில் பெரிய மசூதி ஒன்று கட்டப்பட்டது. அனுமான் கார்ஹியில் ஔரங்கசீப் ஒரு மசூதி கட்டினார். அவர் காலத்துக்குப் பிறகு பைராகிகள் அதை உடைத்து மீண்டும் கோவிலை எழுப்பினார்கள்.”


Shykh Azamat Ali Kakorawi Nami, Muraqqah-i Khusrawi or Tarikh-i Avadh cited by Harsh Narain The Ayodhya Temple Mosque Dispute: Focus on Muslim Sources, 1993, New Delhi, Penman Publications. ISBN 81-85504-16-4


1885ல் மஹந்த் ரகுபர் ராம் அவர்கள் மசூதி என்று சொல்லப்படும் கட்டிடத்துக்கு வெளியே இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்று ஆங்கிலேய அரசுக்கு மனு அளித்தார். ஆனால் அன்றைய ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் எஃப்.ஈ.ஏ.கேமியர் 1886ல் இடத்தின் மீதான மனுதாரரின் உரிமையை ஒப்புக் கொண்டபோதும் கால்ந்தாழ்ந்த நிவாரணக் கோரிக்கை என்று மனுவை நிராகரித்தார்.


”சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்த்தேன். மன்ன்ர் பாபர் கட்டிய மசூதி அங்கே இருக்கிறது. ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் இடத்தில் ஒரு மசூதி இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனால் இது நடந்து 365 ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் இப்போது குறைதீர்ப்பது என்பது காலந்தாழ்ந்த செயல்.” ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் எஃப்.ஈ.ஏ.கேமியர் அவர்களின் தீர்ப்பு.





1948ல் இந்திய அரசு அயோத்தி நகருக்கு 200 கெஜதூரத்துக்கு முஸ்லிம்கள் குடியிருப்பதைத் தடை செய்தது. சம்பந்தப்பட்ட கட்டிடம் பூட்டப்பட்டு யாருக்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் ஹிந்துக்கள் ஒரு சிறு கதவின் வழியே உள்ளே அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர். 1989ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் இக்கட்டிடத்தைத் திறக்க உத்தரவிட்டது. ஹிந்துக்களின் வழிபாடு அனுமதிக்கப்பட்டது. ஹிந்துக்கள் கட்டிடத்தில் மாற்றம் செய்து கோவிலாக்க வேண்டி அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். அதனால் கலவரச் சூழல் ஏற்பட்டு விஷயம் மீண்டும் நீதிமன்றத்துக்குப் போனது.


நிற்க. இந்த வரலாற்று உண்மைகளை விடுத்து வில்லியம் என்ற ஆங்கிலேயச் சிப்பாய் எழுதியதாக ஒரு கருத்தை ஜவாஹிருல்லா முன்வைத்தார். ஹனுமன் கார்ஹி கோவில் பூசாரி உதவியில்லாமல் ஆங்கிலேயப்படை வென்றிருக்காது என்று அந்தச் சிப்பாய் கூறினாராம். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முஸ்லிம் நவாப்புகளுக்கு எதிராக ஆங்கிலேயருக்கு ஹிந்துக்கள் உதவினர் என்பது போல ஒரு கருத்தைச் சொன்னார். ஆனால் அதற்கு எவ்வித ஆதாரமும் தரவில்லை. ஆதாரம் தந்தபின் அது குறித்து விவாதிக்கலாம்.


1970, 1992, 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் ஒரு மிகப்பெரிய ஹிந்துக் கட்டிடத்தின் மேலே மசூதி கட்டப்பட்டதை உறுதிப்படுத்தியது. ஆனால் அகழ்வாராய்ச்சி முடிவுகள் வரும் முன்பே ஆர்.எஸ். சர்மா என்ற இடதுசாரி வரலாற்று அறிஞர் அங்கே கோவில் எதுவும் இல்லை. தவறான கண்ணோட்டத்தில் மசூதி இடிக்கப்பட்டது. அயோத்தி ஒரு ஹிந்து புனிதத் தலமே அல்ல என்று அறிக்கை விட்டார். இவரது முடிபுகள் அராய்ச்சி முடிவுகளுக்கு நேர் எதிராக இருந்தது.


உயர்நீதிமன்றம் இவரையும் இவருடன் அறிக்கைவிட்ட பிற வரலாற்று அறிஞர்களையும் கண்டித்தது. மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் சுதீர் அகர்வால் தனது நீண்ட குறுக்கு விசாரணையில் இந்தக் குழுவினரின் சாட்சியத்தைப் பதிவு செய்தார். தீர்ப்பில் இவர்களைக் கண்டித்துக் கூறியது இவர்களை வரலாற்று அறிஞர்கள் என்று ஏற்பதையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் மற்றவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருந்தவர். இன்னொருவர் மற்றவர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத உதவியவர். இவர்களில் சிலர் சேர்ந்து கூட்டாக சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். குறுக்கு விசாரணையில் இவர்கள் தங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்கும் எந்த ஆதாரத்தையும் தரவில்லை.


மாறாக சாட்சியம் அளித்தவர்களில் ஒருவரான சுவிரா ஜெய்ஸ்வால் தான் செய்தித்தாள்களில் படித்தவை மற்றும் பிறரிடம் கேட்டறிந்த செய்திகளைக் கொண்டே அறிக்கை எழுதியதாகக் கூறினார்.


மற்றொரு சாட்சியான சுப்ரியா வர்மா நீதிமன்றத்தின் அகழ்வாராய்ச்சி உத்தரவுக்கு அடிப்படையான பூமியைத் துளைத்து ஆராயும் ராடார் ஆய்வறிக்கையைப் படிக்கவே இல்லை. இவர் ஷெரின் ரத்னாகர் என்ற மற்றொரு அறிஞரின் ஆராய்ச்சி மாணவர். தம் ஆசிரியருக்கு உதவும் வகையில் அறிக்கை எழுதியதாக இவர் சொல்கிறார்.


சுப்ரியா வர்மாவும் மற்றொரு அறிஞர் ஜெயஸ்ரீ மேன்னும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தூண்கள் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் தோண்டியபோது வைக்கப்பட்டவை என்றார். ஆனால் இவர் தோண்டும் பணி நடந்த போது களத்திலேயே இல்லை.


ஷெரின் ரத்னாகர் என்ற அறிஞர் களத்தில் இறங்கி வரலாற்றாய்வு செய்ததே இல்லையாம். இவர் ஒரு தொல்லியல் நிபுணர் என்பதற்குச் சான்று வேறொரு அறிஞர் என்று வந்த பேராசிரியர் மண்டல் எழுதிய ஒரு புத்தகத்துக்கு அறிமுக உரை எழுதிக் கொடுத்திருக்கிறார்.


சூரஜ் பான் என்பவர் தான் ஒரு தொல்லியல் நிபுணர் என்று சாட்சியம் அளிக்கவந்துள்ளார். ஆனால் இவர் வரலாற்று அறிஞர் அல்ல என்றும் இடைக்கால வரலாறு பற்றிய தெள்ளிய அறிவு இல்லாதவர் என்றும் முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசிய ஷிரின் முசாவி எனும் அறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.


நீதியரசர் அகர்வால் தனது தீர்ப்பில்,”முன்பின் முரணாக இவர்கள் அளித்த விளக்கங்களும் அறிக்கைகளும் தம்மைத் திடுக்கிடச் செய்ததாகவும், இவர்களது அறிக்கைகள் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதற்கு பதிலாக அதை மேலும் சிக்கலாக்குவதற்கே முனைவதாகவும்” கூறினார். மேலும் தீர்ப்பில்,”நிபுணர் என்று சொல்பவர்கள் அறிக்கை அளித்துவிட்டு அறிக்கையின் நம்பகத்தன்மைக்குப் பொறுப்பேற்காது போவது நியாமல்லாத செயல். தான் படித்தோ, ஆராய்ந்தோ அறியாமல் பிறர் சொல்வதைக் கேட்டுச் சொன்னேன் என்று சொல்வோர் எப்படி நிபுணர்கள் ஆவர்?” என்றும் கேள்வி எழுப்பினார்.


இத்தகைய ஆராய்ச்சி நிபுணர்களின் கருத்தை முன்வைத்தே கம்யுனிஸ்டு வீரபாண்டியன் மேற்குறிப்பிட்ட விவாதத்தில் பேசினார். இந்த நிபுணர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் தடம்புரண்டு போனது பற்றி யாரும் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீராபாய் ராம பக்தை என்று அவர் குறிப்பிட்ட மடத்தனத்தையும் யாரும் மறுக்காதது வினோதமானது.







இப்போது ராமஜென்மபூமி வழக்கு நீதிமன்றத்தில் இடம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியோடு தான் இருக்கிறது. ஜன்மஸ்தான் என்று அறியப்படும் இடம் ராமர் பிறந்த இடமே என்பது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜன்மஸ்தான் மற்றும் அது சார்ந்த இடங்கள் ராமஜென்மபூமி என்று முடிவானபின், அங்கே இருந்த மீர் பாஹியால் கட்டப்பட்ட கட்டிடம் கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்று நிரூபணம் ஆனபின் ஏன் சம்பந்தமில்லாமல் அங்கே முஸ்லிம்களுக்கு ஒரு பகுதியை ஒதுக்கவேண்டும் என்பதே நீதிமன்றத்தில் உள்ள கேள்வி.


பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி அவர்கள் “என் தேசம் என் வாழ்க்கை” என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலில் சொன்னது போல “முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சூழலில் ஒரு மெக்காவும், கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ சூழலில் ஒரு வாட்டிகனும் இருக்கிற போது ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்கு ஹிந்து சூழலில் ஒரு அயோத்தி ஏன் கூடாது?


ராமஜென்மபூமி என்பது ராமஜென்மபூமிதானா என்று விவாதம் செய்வது வடிகட்டிய மடத்தனம். இதை முட்டாள்தனம் என்று சொல்லாததற்கு அரசியல்/சமூக காரணங்கள் உண்டு.
ஹாசிம் அன்சாரி
அயோத்தியில், பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் கோர்ட்டில், கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து, பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அதன் முக்கிய மனுதாரர் 93 வயதான ஹாசிம் அன்சாரி ஆவார். அவருக்கும், பரமன்ஸ் ராம்சந்திர தாஸ் என்பவருக்கும் இடையேதான் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.


திடீர் விலகல்
சுப்ரீம் கோர்ட்டில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இவ்வழக்கில் இருந்து விலகுவதாக முக்கிய மனுதாரர் ஹாசிம் அன்சாரி திடீரென அறிவித்துள்ளார். இதனால், இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அயோத்தியில், ஹாசிம் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அயோத்தி வழக்கு, அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் இதில் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றன.
குறிப்பாக, உத்தரபிரதேச மந்திரி அசம்கான், இப்பிரச்சினையில் அதிக ஆதாயம் அடைந்துள்ளார். அவர் பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி அமைப்பாளராக இருந்தார். திடீரென அதை விட்டு விலகி, அரசியல் ஆதாயத்துக்காக, சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து மந்திரியாகி விட்டார்.
2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வந்தபோது, கோர்ட்டுக்கு வெளியே பேசி சுமுக தீர்வு காணலாம் என்று நான் கூறினேன். ஆனால், அசம்கான் போன்ற அரசியல்வாதிகள்தான், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதை அசம்கான் விரும்பவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வேண்டுமானால், அசம்கான், தொடர்ந்து வழக்கை நடத்தட்டும். டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடத்தப்படும் எந்த போராட்டத்திலும் நான் பங்கேற்க மாட்டேன். அன்று அறையை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்து விடுவேன்.
ராமர் கோவில்
அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், தற்போது தற்காலிக கூடாரத்துக்குள் ராமர் கோவில் உள்ளது. அதற்கு பதிலாக அங்கு பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். மக்கள், மாளிகையில் வசிக்கும்போது, கடவுள் மட்டும் கூடாரத்தில் இருக்கலாமா?
அசம்கான், சித்ரகூட்டில் உள்ள 6 கோவில்களுக்கு சென்றுள்ளார். ராமர் கோவிலுக்கு செல்வதற்கு மட்டும் ஏன் அவர் வெட்கப்பட வேண்டும்? அயோத்தியில், ஏற்கனவே ராமர் கோவில் இருப்பதாக அசம்கான் கூறியுள்ளார். பிறகு ஏன் இந்த வழக்கை நடத்தி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் முட்டாள்களாக்க வேண்டும்?
இவ்வாறு ஹாசிம் அன்சாரி கூறினார்.



பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்த இடமாக கருதப்படும் பிரம்மரிஷி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 32 ஆண்டாவது தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,பின்னர் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறுப்பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைப்பெற்றது........

பட உதவி- வசந்த ஜீவா.


பெரம்பலூர்,டிச.6:
பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகளை பெற்றோர் எல்.இ.டி திரையில் காணும் வசதி பெரம்பலூர் அரசு தலை மை மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் மருத்துவ மனைகளில் இல்லாத பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எடைகுறைவாகப் பிறந்த, குறைமாதத்தில் பிறந்த, அதிக எடையோடு பிறந்த குழந்தைகள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்திற்குள் அல்லது 2 வாரங்களுக்கு மேலாக மஞ்சள் காமாலை நோய் பாதித்த குழந்தைகள், ஆழ்மயக்கம், வலிப்பு, வயிறு உப்பிய நிலையில் உள்ள குழந்தைகள், வயிற்றுப்போக்கு, ரத்தக் கசிவுடைய குழந்தைகள் என ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளே அரசு மருத் துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுகின் றனர். இங்குள்ள குழந்தைகளுக்கு எளிதில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் மருத்துவர்களைத் தவிர உள்ளே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
எனவே உள்ளே அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் உள்ளே நடப்பவை நவீனகேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு, அறைக்கு வெளியே எல்.இ.டி திரையில் காட்டப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலை 11மணி முதல் 12மணிவரையிலும், மாலை 5மணிமுதல் 6மணி வரையிலும் குழந்தைகளைக் காண வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார நலப்பணிகள் இணைஇயக்குநர் சிவக்குமார் தெரிவித்ததாவது : பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் எல்இடி திரைமூலம் உள்ளே சிகிச்சை அளிக்கும் குழந்தைகளை வெளியே காத்திருக்கும் பெற்றோர் பார்ப்பதற்கு நவீன வசதிசெய்யப்பட்டுள்ளது. அரசின் விரிவானமருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் இதுவரை 2,060 நோயாளி களுக்கு ரூ2.57கோடி மதிப்பிலான சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு காப்பீட்டுத்திட்ட தொகையாக ரூ2.57கோடி பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகையினைக் கொண்டு மருத்துவமனைக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித் தார். அப்போது இணைஇயக்குநரிடம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பலமாதங்களாக ரேடியாலஜிஸ்ட் பணியிடம் நிரப்பப் படாமல் உள்ளதே எனக்கேட்டதற்கு, உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள், ஆள் இருந்தால் சொல்லுங்கள், எங்குமே கிடைக்கவில்லை. தற்போது கடலூர் மாவட்டத்திலிருந்துதான் ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை வந்துசெல்கிறார் எனத்தெரிவித்தார்.
மேலும் கடந்த திமுக ஆட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்மூலம் ரூ.6.50 லட்சம் மதிப்பில், பிரசவத்திற்கு வரும் தாய்மார்களின் உறவினர்களுக்கான தங்கும்அறை கட்டித்தரப்பட்டது. தற்போது அந்தஅறை ஐசியு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பிரசவித்த பெண்களின் உறவினர்கள் பனியிலும், மழையிலும் மரத்தடியில் படுத்துக் கிடக்கிறார்களே எனக்கேள்வி எழுப்பினர்.அதற்கு தற்போது 100 படுக்கை வசதிகொண்ட தாய்சேய்நல மகப்பேறு பிரிவு கட்டப்பட்டு வருகிறது. அந்தப்பிரிவு செயல்படத் தொடங்கினால், இதுபோன்ற வர்களுக்கு தனியாக தங்குமிடம் செய்துதரப்படும் எனத்தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, அரசு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், செவிலியர்கள் உடனி ருந்தனர்.


-தினகரன்.

வ.களத்தூர் டிச. 5:
  
வ.களத்தூர் அருகே தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி துணைத்தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் கலெக்டரிடம் நேற்று புகார் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூடாமணி, 1 வது வார்டு உறுப்பினர் சாமிக்கண்ணு, 2 வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, 6 வது வார்டு உறுப்பினர் உமா, 7 வது வார்டு உறுப்பினர் பூங்கொடி, 8 வது வார்டு உறுப்பினர் சின்னசாமி, ஆகியோர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ்அகமதுவிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது,
பசும்பலூர் ஊராட்சித் தலைவர் ராமர். இவர், பசும்பலூர் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் முறையாக நடத்தவில்லை. அனைத்து நலத்திட்டங்களையும் பாரபட்சமாக ஆதிதிராவிடர் வசித்திடும் பகுதிகளிலேயே செயல்படுத்தி வருகிறார். இதனால் எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழலை மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் பலமுறை சுட்டி காட்டியும் ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக அனைத்து திட்டங்களையும் போலியாக டெண்டர் போட்டு செயல்படுத்தி வருகிறார்.

மேலும் வி.களத்தூர் சாலையில் உள்ள பொது இடம் திருவிழா, சந்தை, வாகனங்கள் திருப்புவதற்காக உள்ளிட்ட பயன்பட்டு வரும் இடத்தில், சட்ட விரோதமாக நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டட பணிகளை ஊருக்கு பொதுவான இடத்தில் கட்டிட உடனடியாக ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டி விவாத்திட வேண்டும். சட்ட விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்திடும் ஊராட்சி மன்ற தலைவர் ராமர் மீது மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்று அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
  
வ.களத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அவரை பதிவு நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஒருவர் உட்பட 6க்கும் மேற்ப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

-தினகரன்.

பெரம்பலூர்,டிச.6:
காதல் தகராறில் போட்டோகிராபர் பட்டப்பகலில் ஸ்டூடியோவில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் பெரம்பலூர் மாவட்ட குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஊட்டத்தூரை சேர்ந்த ராஜ் மகன் சத்யா(32). திருமணமானவர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை செய்து வந்தார்.நேற்று மதியம் 12 மணிக்கு இவர் ஸ்டூடியோவில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சத்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். 12.30 மணி அளவில் ஸ்டூடியோ உரிமையாளர் இளையராஜா அங்கு வந்தபோது சத்யா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.பி. சோனல் சந்திரா மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் துணிகரமாக நடந்த இந்த கொலை அந்த பகுதி வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட சத்யாவுக்கு மனைவி சங்கீதா, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக பெரம்பலூர் பகுதியை சேர்ந்த பிரபு, பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
நீதிபதி ராமசாமி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இது குறித்து போலீசார் விசாரணையில் காந்தி நகரை சேர்ந்த பள்ளி மாணவியை காதலிப்பதில் சத்யாவுக்கும், பிரபுவுக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டதை தொடர்ந்து இக்கொலை நடந்துள்ளதாக தெரிகிறது.


-தினகரன்.

Thursday 4 December 2014

    பாடாலூரில், கார் மோதியதில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. மூளைச்சாவுபெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்தவர் சரவணன். இவர் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் கோகுல்(வயது 16). இவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று இவன் தனது உறவினர் மதியழகனுடன் திருவளக்குறிச்சி அருகே சாலையை கடந்து சென்றான்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் சாலையை கடந்து சென்ற இருவர் மீதும் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் திருச்சி தென்னூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலையில் படுகாயம் அடைந்த கோகுல் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உறுப்புகள் 6 பேருக்கு தானம் இதனையடுத்து கோகுலின் பெற்றோர்கள் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து கோகுலின் உறுப்புகள்(இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள்) திருச்சி, சென்னை, நெல்லையில் உள்ள 6 பேருக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் 6 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது.

-தினகரன்.

Tuesday 2 December 2014

ஜிகாதிகள் கூடாரமாகும் திருவல்லிக்கேணி
சென்னையில் முஸ்லிம்கள் மிக அதிகமாக வசிக்கும் பகுதிகளில் திருவல்லிக்கேணியும் ஒன்று. மேற்கண்டவற்றில் ராமலிங்க வள்ளலாரை அவமதித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த நிகழ்வும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளிக்கு அடைக்கலம் கொடுத்த நிகழ்வும் திருவல்லிக்கேணி பகுதியில் நடந்திருப்பதைக் கவனத்தில் கொண்டால், அப்பகுதி எந்த அளவிற்கு ஜிகாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இவ்வுண்மையை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களில் இரண்டு சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடன் நடந்தேறியுள்ளன.
வக்கிர மனம் படைத்த சிறுவனின் பாலியல் வன்முறை
கடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு ஹிந்து குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 8 மணிக்கு திருவேட்டீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டுத் தங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, அக்குடும்பத்துப் பெண்மணி ஒருவர் மீது, அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது முஸ்லிம் ஒருவன் பாலியல் வன்முறை புரிந்துள்ளான். அந்தப் பெண்மணியின் மேல் கையை வைத்து மானபங்கம் செய்துவிட்டான். அவனுடன் அவன் வயதை ஒத்த மேலும் நான்கு பேரும் இருந்துள்ளனர். அந்தப் பெண்மணியின் மகன் அவர்களைத் தட்டிக்கேட்டிருக்கிறான். இதனிடையே அந்த நால்வரில் ஒருவன் ஜமாத்திற்குப் போன் மூலம் தெரிவிக்கவே சுமார் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வந்து, தட்டிக்கேட்ட மகனை அடித்து உதைத்திருக்கின்றனர். அவர்கள் அந்த நான்கு சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டனர்.
அதனைத் தொடர்ந்து அந்த ஹிந்து குடும்பத்தினர் புகார் செய்வதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து முன்னணியினரும் பாதிக்கப்பட்ட அந்தக் குடுபத்தினருக்கு ஆதரவாகச் சென்றுள்ளனர். அச்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காவல் நிலையத்திற்கு வந்து இந்துக்களிடம் தகராறு செய்து தாக்கவும் முற்பட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த அந்த நான்கு சிறுவர்களையும் அடையாளம் கண்ட இந்துக்கள் அவர்களைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்துக்களாக இருந்தபோதும், காவல்துறையினர் ஹிந்துமுன்னணியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரையும் கைது செய்துள்ளது.
பாலியல் வன்முறையைத் தொடர்ந்து கொலை முயற்சி
இன்று (புதன் கிழமை) காலை சுமர் 10 மணியளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை நான்கு முஸ்லிம்கள் சூழ்ந்துகொண்டு கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். ராஜ்குமாரின் மனைவிக்கு இன்று பிறந்த நாள். குடும்பத்தினருடன் திரைப்படம் செல்லலாம் என்கிற எண்ணத்துடன் திரைப்படத்திற்கு முன்பதிவு செய்வதற்காக வீட்டை விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கிளம்பியுள்ளார் ராஜ்குமார்.
பங்காரு தெரு வழியாக வந்துகொண்டிருந்தபோது, ஸ்ரீ பத்ராசல ராமதாஸ் பக்தஜன சபை டிரஸ்ட் அலுவலகத்திற்கு முன்பாக, அவரை நான்கு முஸ்லிம்கள் சூழ்ந்து கொண்டனர்.
triplicane assault2

அவர் சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இரும்புக்குழாய், உருட்டுக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் அவரைத் தாக்கியுள்ளனர். நிலை குலைந்த அவர், மோட்டார் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்.
பங்காரு தெருவிலிருந்து நாகப்ப ஐயர் தெருவுக்குள் ஓடிச் சென்று கூட்டுக் குடித்தனங்கள் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து மறைந்துகொண்டார். பழைய கதவு எண் 39 புதிய கதவு எண் 64 கொண்ட அவ்வீடு அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ளது.
house
anjaneyatemple
பின்னர் அங்கிருந்து ஹிந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் இளங்கோ அவர்களுக்கு ஃபோன் மூலம் செய்தியைச் சொல்லியிருக்கிறார். உடனே இளங்கோ அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சொல்லி காவல்துறை உடனே அவ்விடத்திற்கு வந்துள்ளது. இதனிடையே ராஜ்குமாரைக் கொலை செய்ய வந்த அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
பின்னர் ராஜ்குமாரை அழைத்துக்கொண்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஜிகாதிகள் மடக்கித் தாக்கும்போது தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால்தான் அவர் உயிர் தப்பியுள்ளார். இல்லையென்றால் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தின் சாய்ந்திருப்பார். ஹெல்மெட் அணிந்திருந்தாலும், இரும்புக் குழாயினால் தலையிலும் கழுத்திலும் முதுகிலும் அடித்துள்ளதால், அவருக்கு தொடர்ந்து வாந்தி வந்துகொண்டுள்ளது. மேலும் கை கால்கள், உடல் முழுவதும் கடுமையான வலி எடுக்கவே, ஹிந்து அமைப்பு நண்பர்கள் அவரை அவசர சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அங்கே அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
rajkumar
ராஜ்குமார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சேவை மனப்பான்மை கொண்டவர். யாரிடமும் எந்த விதமான வம்பிற்கும் போகாதவர். ஆனால் ஞாயிற்றுக் கிழமை நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளான நான்கு முஸ்லிம்களையும் காவல்துறைக் கைது செய்துள்ளபடியால், அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை முயற்சி நடந்துள்ளதாக ஹிந்து அமைப்பினர்கள் கருதுகிறார்கள். மேலும், இதுவரை ராஜ்குமாரைத் தாக்கியவர்களைக் கைது செய்யாதது காவல்துறையின் இயலாமையைக் காட்டுகிறது என்று கூறும் இந்து அமைப்பினர், திருவல்லிக்கேணி காவல்துறை அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனரோ என்கிற சந்தேகத்தையும் தெரிவிக்கின்றனர்.
தங்கள் ஆதிக்கத்தை அராஜகத்தின் மூலம் நிலைநிறுத்தும் முஸ்லிம்கள்
தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தங்களுடைய ஆக்கிரமிப்பையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக பல்வேறு அராஜகச் செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம் சமுதாயத்தினரின் வழக்கமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் அவர்களுடைய குணாதிசியமாகவே இருக்கிறது. அதற்குத் தமிழகமும் விதிவிலக்கல்ல. ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர் போன்ற மாவட்டங்களில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நமது தளத்திலும் பல சம்பவங்களைப் பற்றி ஆதாரங்களுடன் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
இந்தக் கொலை முயற்சியின் பின்னணியில் ஞயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவன் 14 வயது சிறுவன். சாதாரணமாக சிறுவர்கள் தகாத காரியத்தில் ஈடுபட்டால், பெரியவர்கள் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத் திருத்துவார்கள். இதுதான் மனித இயல்பு. பெரியவர்களின் கடமையும் கூட. ஆனால் இங்கே, ஜமாத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அச்சிறுவர்களைக் கண்டித்துத் திருத்தாமல், அவர்களுக்கு ஆதரவாக வன்முறையிலும் கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதைப் பார்க்கும்போது, அவர்களே அச்சிறுவர்களை தூண்டிவிட்டிருப்பார்களோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு சம்பவத்தைத் தூண்டிவிட்டு, வன்முறையைக் கட்டவிழ்த்து, அதன் மூலம் ஹிந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களைத் தீர்த்துக்கட்டும் யுக்தியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தையும் ஹிந்து அமைப்பினர் நம்மிடம் தெரிவிக்கிறார்கள். இது ஜிகாதின் புதிய பரிணாமமாக இருக்கலாம் என்பதே அவர்களின் கருத்து.
தமிழக அரசு கடந்த மூன்றாண்டுகளாகவே மீளா உறக்கத்தில் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. மாநிலமெங்கும் ஜிகாத் வேகமாகப் பரவி மாநிலத்தின் அமைதியைக் குலைத்து வருகிறது. இதற்குப் பிறகும் அரசும் காவல்துறையும் விழித்துக்கொண்டு தகுந்த நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்கவில்லையென்றால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-http://www.vsrc.in/index.php/articles/2014-07-30-08-48-49/item/639-2014-11-26-19-22-32

Monday 1 December 2014


தமிழ்நாட்டில் தற்போது 1,50,000 பேர் ஹெச்ஐவி தொற்றுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மீரா பவுண்ட்டேஷன் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் எம். ராஜாமுகமது ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஹெச்ஐவி என்னும் வைரஸ் பரிசோதிக்கப்படாத ரத்தம், போதை ஊசி பழக்கம், தொற்று உள்ளவர்களிடம் பாது காப்பற்ற உடலுறவு மூலம் பரவுகிறது.
தொற்றுள்ள கர்ப்பிணிகளிடம் இருந்து வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஹெச்ஐவி பரவும் அபாயம் 2007-ல் ஒரு சதவீதம் என்ற அளவில் இருந்தது. தற் போது அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் தொடர் விழிப் புணர்வு பிரச்சாரத்தால், இது 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் வெற்றியடைந்துள்ளதைத்தான் இவை காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு பெற்றோரும் பிரசவத்துக்கு முன்னர் ஹெச்ஐவி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஹெச்ஐவி மனிதனின் உடலில் புகுந்துவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைப்பொருத்து 6 முதல் 8 ஆண்டுகள் கழித்தே அவர் எய்ட்ஸ் நோயாளி என்ற நிலைக்கு வருகிறார். எதிர்ப்பு சக்தி குறையும்போது, எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காச நோய், காலரா ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கும். முடிவில் உயிருக்கு உலை வைத்துவிடும்.
தன்னம்பிக்கை, உடற்பயிற்சி, மன உறுதியோடு சத்தான உணவும், மருந்துகளும் சாப்பிடும் ஹெச்ஐவி தொற்றுள்ளவர்கள், இன்று வரை தொடர்ந்து 30 ஆண்டாக சாதாரண மனிதர்களை காட்டிலும் உடல் ஆரோக்கியமுடன் வாழ்கின்றனர். நிறைய துறைகளில் சத்தமில் லாமல் சாதித்துக் கொண்டிருக் கின்றனர். மற்ற தொற்றுநோய்களை போல இதுவும் ஒரு சராசரி நோய்தான்.
அரசு மருத்துவமனைகளில் ஹெச்ஐவி தொற்றுகளை பரிசோ தனை செய்யவும், தேவையான மருந்து, ஆலோசனைகளை வழங்கி தன்னம்பிக்கை தரவும் ஆற்றுப்படுத்தும் மையங்கள் உள்ளன. வாழ்க்கையே இருண்டு விட்டதாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேசிய அளவில் கடந்த 30 ஆண்டில் ஊடகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு விழிப்புணர்வு செய்த பின்னரும் இப் போதும் பலர் ஹெச்ஐவி தொற் றுக்கு ஆளாவது தொடர்கிறது. இருப்பினும் தொடர் திட்டங்கள், விழிப்புணர்வால் 2000ல் இருந்த ஹெச்ஐவி தொற்று சதவீதம் 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


-தி இந்து.

இன்று - டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
எய்ட்ஸ் எரிமலை என்னும் தொடரின் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை 90-களிலேயே பரப்பியவர் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். பல முன்னணி மருத்துவமனைகளிலும் மருத்துவக் கருத்தரங்குகளிலும் உடல் நலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகளை வழங்கிவருபவர்.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளையொட்டி, விழிப்புணர்வு என்னும் விஷயத்தில் இன்னும் நாம் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“எச்.ஐ.வி. பாதிப்பின் முற்றிய நிலைதான் எய்ட்ஸ். இந்தாண்டு உலக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான வாசகம் `குளோஸ் தி கேப்’ என்பதுதான். எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்படவேண்டும். எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் அளிப்பது, பரிசோதிப்பது, சிகிச்சை அளிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த இடைவெளியை குறைக்கலாம். 2030-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (UNAIDS) திட்டமிட்டுள்ளது.
இன்னும் 15 ஆண்டு களில் இந்த இலக்கை நாம் அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் உலக அளவில் இருந்த 3.50 கோடி எச்.ஐ.வி. பாதித்தவர்களில் 20 லட்சம் பேர் புதிதாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. உலக அளவில் இதுவரை எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான 8 கோடி பேரில் 4 கோடி பேர் எய்ட்ஸால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2006-ல் 23 லட்சமாக இருந்த எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டில் 20 லட்சமாக குறைந்தது. 2011-ல் புதிதாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரம்.
இந்தியாவில் புதிதாக எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம், பரவலாகச் செய்யப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்தான் என்பதை நாம் உணரவேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, புதிதாக எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவருகிறது. ஆனால் இது போதாது.
ஓர் ஆண்டில் புதிதாக எச்.ஐ.வி. பாதித்த ஒருவர்கூட இல்லை என்னும் நிலையை நாம் எட்டவேண்டும். கடந்த 2011-ல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இது, ஐந்தாண்டுக்கு முன்பு 2 லட்சமாக இருந்தது. ஒருவர்கூட எச்.ஐ.வி. பாதிப்பால் உயிரிழக்காத நிலையை நாம் எட்ட கூட்டுமருந்து ஏஆர்டி சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்யவேண்டும்.
ஏஆர்டி மருந்துகள் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளானவர்களின் உடலில் சிடி-4 என்னும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 300-க்கும் குறைவாகும்போதுதான் இந்திய அரசு ஏஆர்டி கூட்டு மருந்து சிகிச்சையை அளிக்கிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் சிடி-4 எண்ணிக்கை 500-க்கு குறைந்தாலே ஏஆர்டி மருந்து சிகிச்சையை அளிக்க வேண்டும் என்கிறது.
அரசாங்கம் நினைத்தால் எச்.ஐ.வி.பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை துரிதப்படுத்துவதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கலாம். காச நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்வதும் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்கள் காச நோய் பரிசோதனை செய்துகொள்வதும் முக்கியம். காலத்தின் கட்டாயம் வேறு மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக வருபவர்கள், பாலுறவு பணியாளர்கள், தன்பால் ஈர்ப்புள்ளவர்கள், திருநங்கைகள் ஆகியோர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் அதிகம் இருப்பவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இவர்களுக்கு முறையான விழிப்புணர்வு வழங்க வேண்டும். இடைவெளியை குறைப்பதற்கான இறுதிச் சுற்றில் இருக்கிறோம். எய்ட்ஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இந்திய அரசு மெத்தனம் காட்டாமல் துரிதமாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார்.

-தி இந்து 

ஒடிஸாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையின் போது சைக்கிள் பம்ப் பயன் படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமின் போது 13 பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் வடுக்கள் ஆறும் முன்பு ஒடிஸா மாநிலத்தில் சைக்கிள் பம்ப் மூலம் கருத்தடை அறுவைச் சிகிச்சை நடத்தப் பட்டிருப்பது மருத்துவ வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பனார்பால் கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் கடந்த 28-ம் தேதி கருத் தடை அறுவைச் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் 56 பெண்களுக்கு கருத் தடை அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
டாக்டர் மகேஷ் பிரசாத் ராத் என்பவர் பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்தார். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே சாதாரண அறையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இன்றி அறுவைச் சிகிச்சைகள் நடத்தப்பட்டன.
பொதுவாக கருத்தடை அறு வைச் சிகிச்சையின்போது வயிற்றில் கார்பைன் டை ஆக்ஸைடின் அளவு சீராக இருக்க செய்ய ‘இன்சப் லேட்டர்ஸ்’ கருவியை பயன்படுத்து கின்றனர். ஆனால் பனார்பால் மருத்துவமனையில் அந்த வசதி இல்லாததால் டாக்டர் மகேஷ் பிரசாத் ராத் சைக்கிள் பம்பை பயன்படுத்தியுள்ளார்.
இளைஞர் ஒருவர் சைக்கிள் பம்பில் காற்றடிக்க டாக்டர் அறுவைச் சிகிச்சையை நடத்தி யுள்ளார். இதுதொடர்பாக ஓடிஸா நாளிதழ்களில் படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் பிரச்சினை ஒடிஸாவில் பூதாகரமாக வெடித்து, சமூக ஆர்வலர்களும் பாஜக தொண் டர்களும் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் மகேஷ் பிரசாத் ராத் கூறியபோது, கடந்த 10 ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளேன். கிராமப்புற மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருக்காது. எனவே ‘இன்சப்லேட்டர்ஸ்’ கரு விக்குப் பதிலாக சைக்கிள் பம்பை பயன்படுத்துகிறோம், இதில் தவறில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர்கள் கூறியபோது, கருத் தடை அறுவைச் சிகிச்சைக்கு சைக்கிள் பம்பை பயன்படுத்துவது ஆபத்தானது. பம்பின் லூப்ரி கென்ட்ஸ் பெண்களில் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது, அவர் களின் ரத்த நாளங்களில் காற்றுக் குமிழிகள் அடைக்கும் வாய்ப் புள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிவித்தனர்.
போராட்டங்கள் வலுவடைந்து வருவதால் இச் சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது.

-தி இந்து,

சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார். கோமதி இவள்பால் கவரப்படுகிறார்.
சித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாக நினைத்து பொறாமை கொள்கிறார். ஒரு கட்டத்தில் சித்தார்த்தை ராஜாபார்ட்டாக உயர்த்துகிறார் நாசர். இதனால் ப்ரித்விராஜின் பொறாமை அதிகரிக்கிறது. ஜமீன்தாரின் மகளைக் காதலிப்பதால் கெட்ட பெயர் எடுக்கும் சித்தார்த்தை நாசர் தண்டிக்கிறார். நாசரின் மறைவுக்குப் பிறகு ப்ரித்விராஜ் சித்தார்த்தை விரட்டி அடிக்கிறார்.
சித்தார்த் வெளியேற்றப்பட்ட பிறகு ப்ரித்வியால் தான் நினைத்த வாழ்க்கையை வாழ முடிந்ததா? வெளியேற்றப்பட்ட சித்தார்த் என்ன ஆனார்? இருவரும் மீண்டும் சந்தித்தார்களா? வேதிகா யாரைக் காதலிக்கிறார்? இருவரில் யார் காவியத் தலைவன் என்பதுதான் மீதிக்கதை.
கதை புதிதல்ல, சொல்லப்போனால் பல காட்சிகளைப் பார்க்கும்போதே அடுத்த காட்சியை சட்டென்று ஊகித்துவிடலாம். இதே கதை, திரைக்கதையை பல தமிழ்ப் படங்களில் பார்த்தாகிவிட்டது. ஆனால் இயக்குநர் வசந்த பாலன் பி.யு.சின்னப்பா காலத்து நாடக உலகைத் திரையில் உயிர்ப்புடன் கொண்டுவந்ததற்கு பாராட்டுக்கள். இதுபோன்ற மேடை நாடகக் கலைஞர்களை நிஜத்தில் பார்த்து ரசிக்க நமக்கு கொடுத்துவைக்கவில்லையே என்னும் ஏக்கம் படத்தை பார்க்கும்போது அதிகமாக ஏற்படுகிறது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தியதற்கு மனம்திறந்து பாராட்டலாம்.
சித்தார்த்தின் கதாபாத்திரத்தில் இருக்கும் கலை நுட்பம், ரசிப்புத்தன்மை, விடுதலை வேட்கை, குற்றவுணர்ச்சியால் துடிதுடிக்கும் நேர்மை எனப் பல பரிமாணங்களை இயக்குநர் செறிவாகச் செதுக்கியுள்ளார். ஆனால் பின் பாதியில் சித்தார்த் தியாகியாக உருவெடுப்பது டூமச்சாகத் தோன்றுகிறது.
நாடகக் கலையில் பேரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு தன் வாழ்வை அர்ப்பணிக்கும் கோமதி நாயகமாக மிரட்டுகிறார் ப்ரித்விராஜ். ஒவ்வொருமுறையும் நடிப்பில் தன்னை சித்தார்த் மிஞ்சும்போதும் எழும் பொறாமை, வெறுப்பு ஆகியவற்றை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஸ்த்ரீ பார்ட், ராஜபார்ட், கர்ணன் வேடங்களில் நடிக்கும்போது அவரது தமிழும் நடிப்பும் நெருடுகிறது. தன் கலை வாழ்விலும், காதல் வாழ்விலும் சித்தார்த் முன்னால் தோற்றுப்போய் ஏதுமில்லாதவனாக ப்ரித்விராஜ் நிற்பதை ஆழமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
நளினமான நடன அசைவுகள், அழகிய முகபாவங்களில் தானும் நடிப்பில் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் வேதிகா. “நான் இன்னைக்கு நல்லா நடிச்சேனா?” என அவர் சித்தார்த்திடம் கேட்கும் காட்சி ரசிக்கவைக்கிறது.
அரக்கன் சூரபத்மனாக ப்ரித்விராஜ் ஆக்ரோஷத்தோடு சற்று மிகையான நடிப்பை வெளிப்படுத்தும்போது அதே கதாபாத் திரத்தை அலட்டிக்கொள்ளாமல் அனாயாசமாகக் சித்தார்த் நடித்துக் காட்டும் காட்சி அருமை.
அதைத் தொடர்ந்து நாசரிடம் ப்ரித்விராஜ் விவாதிக்கும் காட்சியில் அவர்களுடன் ஜெயமோகன், வசந்த பாலன் ஆகியோரும் சபாஷ் சொல்ல வைக்கிறார்கள்.
அன்றைய நாடக அரங்க அமைப்பு முறை காலகட்டத்தைக் கொண்டுவரும் இயக்குநர், புராண நாடகக் காட்சிகளில் நடிகர்களின் அந்தகால நடிகர்களின் நடிப்பு முறைகளை இன்றைய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தத் தவறிவிடுகிறார். தனக்குக் கிடைத்த பின்புலத்தை அவர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இரட்டை நாயனம் போல வசந்த பாலனும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவருக்கு ஒருவர் இசைந்து கொடுத்து கதையை சித்தரிக்கிறார்கள். ஆனால் மேடை நாடகத்துக்கு முதன்மையான ஆர்மோனியம் அதிகம் கண்ணுக்கும், காதுக்கும் புலப்படவில்லை என்ற விமர்சனமும் எழுகிறது.
சுதந்திரப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த கால கட்டத்தில், நாடகத் தையே வாழ்க்கையாகக் கொண்ட கதாபாத்திரங்களைப் பின்தொடரும் ஒரு திரைப்படத்தில் அவர்களது நிஜமான வாழ்வியல் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதிலும் காதல் காட்சிகள் அந்தக் காலக்கட்டத்தோடு பொருந்தாமல் செயற்கையாக எரிச்சலூட்டுகிறது.
ஒரு நாடக நடிகருக்கு அசலான துப்பாக்கி எப்படி அவ்வளவு சுலபமாகக் கிடைத்தது என்பதற்குக் காட்சிகள் நியாயம் சேர்க்கவில்லை.
அதேசமயம், மென்மையாக படம் முழுக்க வின்டேஜ் உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.
திரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம் என்பதை நிரூபணம் செய்யும் படமாக காவியத் தலைவன் நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது.

-தி இந்து.

சென்னை: ரேஷன் கார்டுகளில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் தொடங்கும் என அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அவர் அறிவித்தபடி உள்தாள் ஒட்டும் பணி தொடங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி வருவதால், அவை கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளன. மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆதார் கார்டு அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 75 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் கார்டு எடுக்கும் பணி முடிந்துள்ளதால் புதிய மின்னணு ரேஷன் கார்டு 2015ம் ஆண்டும் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கடந்த 24ம் தேதி பேசும் போது, “தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி 5 கோடியே 87 ஆயிரத்து 395 நபர்களுக்கு உடற்கூறு பதிவுகள் (பயோ மெட்ரிக்) கணினியில் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 4 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 490 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015ம் ஆண்டுக்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டையில் இணைத்து, குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலத்தை 1.1.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளுக்கு டிசம்பர் மாதம் அத்தியாவசிய பொருட்கள் பெற வரும் போது, அவர்களுடைய குடும்ப அட்டையில் 2015ம் ஆண்டுக்கான உள்தாளை இணைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த பொருளும் வேண்டாம் என்ற (என்கார்டு) குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்‘ என்று கூறினார். அமைச்சர் காமராஜ் அறிவித்தபடி, இன்று (டிசம்பர் 1ம் தேதி) முதல் ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் உள்தாள் ஒட்ட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பழைய ரேஷன் கார்டுகளில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் அச்சிடப்பட்டு, நுகர்பொருள் வாணிப கழக துணை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2015ம் ஆண்டுக்கான பதிவேடுகள், அதாவது பயனாளிகள் பெயர், விலாசம் அடங்கிய பதிவேடுகள் இன்னும் தயாராகவில்லை. இந்த பணிகள் முடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால் உள்தாள் மற்றும் 2015ம் ஆண்டுக்கான பதிவேடுகள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்க 10 நாட்கள் வரை ஆகலாம். அதனால், டிசம்பர் 10ம் தேதிக்கு மேல்தான் அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கும்” என்றார்.

-தினகரன்.

 எறையூர் சர்க்கரைஆலை கரும்பு அரவைப்பணி தொடங்கும் தேதி 2வதுமுறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பழுதுகாரணமா என விவசாயிகள் வருத்தமடைந்துள்ளது. 
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள நேரு சர்க் கரைஆலை 1977ல் அரவைப்பணிகள் தொடங்கி 37ஆண்டுகளைக் கடந்து விட்டது. பொதுத்துறை சர்க்கரை ஆலையான இந்த ஆலை யில், விவசாயிகளும், தமிழகஅரசும் இணைந்து பங்குதாரர்களாக உள்ளனர். ஆலை தொடங்கிய போது, பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி அருகிலுள்ள சேலம், விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட் டங்களில் இருந்தும் இந்தஆலைக்கு கரும்புபெறப்பட்டது.
 பெரம்பலூர் ஆலைக்குப்பிறகுதான் தஞ்சை குருங்குளத்தில் மற்றொரு பொதுத் துறை சர்க்கரைஆலை தொடங்கப்பட்டது. பராமரிப்பு காலத்தில் ஆலைக்கு வாங்கப் பட்ட தரமற்ற இயந்திரங்களால் அடிக்கடி பழுதுஏற்பட்டு ஆலையின் அறவைத்திறன் குறைந்து, ஆலை நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தபோது, கடந்த திமுகஆட்சியில் ஆலை யைப் புணரமைத்திட ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியால்தான் ஆலை தற்போது மறுஜென்மம் எடுத்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடுமை யான வறட்சியால் கரும்பு சாகுபடிக்கான பரப்பு குறைந்து போனது, வறட் சியை சமாளிக்க ஏதுவாக கிணறுவெட்ட வோ, ஆழ் குழாய் கிணறு அமைக் கவோ, வங்கிக்கடன் தராமல் விவசாயி களை வஞ்சித்தது, அருகே தனியார் ஆலைகள் தொடங் கப்பட்டது, அறுவடைசெய்து அனுப்பிய கரும்புக்கு சரியானநேரத் தில் பணப்பட்டுவாடா செய்யாமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால், சாகுபடி பரப்பு குறைந்து, மீண்டும் மீண்டும் ஆலை ஆட்டம் கண்டபோதும், அதனை சமாளிக்க ஏதுவாக அதிமுக ஆட்சி யில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முத்தரப்புக் கூட்டமும் கூட்டப்படவில்லை.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான அரவை வழக்கம்போல் நவம்பர் 14ம்தேதி தொடங்கு மென்றும் பிறகு 27ம்தேதி யென்றும் கூறப்பட்டது. ஆலைத் தொழிலாளர்க ளுக்கு அரவைப்பணி எப்போது தொடங்குமென உறுதிசெய்யப்படாத நிலையில், அரவைப்பணி எப்போதுதான் தொடங்குமென கடந்த 25ம்தேதி தலைமைக் கணக்காளர் குப்பனிடம் நேரில்கேட்டபோது, டிசம்பர்-1ம்தேதி அரவைப்பணி தொடங்கும். இதற்காக 1ம்தேதி காலையில்தான் கரும்புலாரிகள் ஆலைக்கு வந்துசேரும் என்றார்.
ஆனால் இன்று (1ம்தேதி) சர்க்கரைஆலை தொடங்குவதற்கான எந்த அடையாள மும் இன்றியே எறையூர் சர்க்கரைஆலை காணப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்ட போது, 
ஆலையில் தொழிலாளர்களுக்கான ஊதியப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மாதத்தொடக்கத்தில் அதுவெடித்தால் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள், அதனை சமாளித்துவிட்டு 7,8 தேதிகளில் தொடங்கலாம் என முடிவுசெய்துள்ளனர் என்று தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆலையை நவீனப்படுத்தினால் இயந்திரக் கோளாறு என்பதற்கு வேலையிருக்காது, அதனைவிடுத்து பழுது நீக்குகிறோம், சீரமைக்கிறோம் என்றபெயரில் ஆலை நிர்வாகம் அக்கரையின்றி செயல்படுவதால்தான் அடிக்கடி பிரச்னையாகிறது. இப்போதும் இயந்திரங்களை சீரமைக்கும் பணிதான் நடந்துகொண்டி ருக்கும். அதனை சரி செய்துவிட்டு, 5ம்தேதிக்குப்பிறகு அரவைப்பணி தொடங்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். 
 இதுகுறித்து ஆலையின் தலைமைக் கணக்காளர் குப்பனிடம் கேட்டதற்கு, 
செல்போனை அவர் ஆன்செய்து பேசவில்லை. இந்நிலையில் கட்டிங்ஆர்டர் பெறப்பட்ட கரும்புகளை இப்போது வெட்டவேண்டாம் என கரும்பு அலுவலர்களைக் கொண்டு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. கரும்புக் கான உரியவிலை கிடைக் குமா? எனக்காத்திருந்த விவசாயிகள், இப்போது ஆலை எப்போது திறக்குமென்று காத்திருக்க தொடங்கியுள்ளது விவசாயிகளை வருத்தமடைய செய்துள்ளது.

-தினகரன்.