Saturday 29 November 2014


புதுடெல்லி: திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய் பேசும்போது, ''திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு, வட மாநிலங்கள் உரிய மதிப்பளிக்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவரது இந்தக் கருத்தை, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஹமத் ஹசன், தி.மு.க. உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உட்பட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இந்நிலையில், இதற்கு உடனடியாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஸ்மிருதிராணி, ''தருண்விஜயின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடப்படுவதுடன், திருக்குறளை கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

-நியூஸ் விகடன்.

மும்பை: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த மும்பையை சேர்ந்த பொறியியல் மாணவர் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் வருகிற 8 ஆம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆரிப் மஜித், ஷகீன் தன்கி, பகத் ஷேக், அமன் தண்டேல் ஆகியோர் கடந்த மே மாதம் ஆன்மிக புனித பயண குழுவினருடன் ஈராக் சென்றனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் பாக்தாத் நகரில் இருந்து வாடகை கார் பிடித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் மொசூல் நகரத்தை அடைந்தனர். ஈராக், சிரியாவில் தனி நாடு அமைக்கும் முயற்சியில் அரசுடன் சண்டையிட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் அவர்கள் சேர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

இது பற்றிய தகவல் அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர், தங்களது மகன்களை மீட்டு தருமாறு காவல்துறையினர் புகார் அளித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 26ஆம் தேதி ஆரிப் மஜித், போரில் கொல்லப்பட்டு விட்டதாக அவரது சகோதரரை தொடர்பு கொண்டு, அவருடன் சென்ற ஷகீன் தன்கி போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் துயரம் அடைந்த குடும்பத்தினர் ஆரிப் மஜித்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தி, சடங்குகளை செய்தனர்.

இந்த தகவல் கிடைத்த சில நாட்களில் ஆரிப் மஜித் தனது தந்தையை போனில் தொடர்பு கொண்டு, தான் பத்திரமாக இருப்பதாகவும், உயிரை காப்பாற்றிக் கொள்ள துருக்கியில் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். இதுபற்றி ஆரிப் மஜித்தின் தந்தை போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது மகனை மீட்டு தருமாறு கோரினார்.

இதைத்தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கருதப்பட்ட கல்யாணை சேர்ந்த மாணவர்கள் 4 பேரையும் மீட்க மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்தது. இந்த பணியில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரும், மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை காவல்துறையினரும் இணைந்து பணியாற்றினர்.

இந்த சம்பவத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரில் பலியானதாக கூறப்பட்ட ஆரிப் மஜித் மீட்கப்பட்டு உள்ளார். அவர் துருக்கியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மும்பை அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, தங்களது காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் ( என்.ஐ.ஏ.) அனுமதி கோரினர்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆரிப் மஜித்தை வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி வரை விசாரிக்க அனுமதி அளித்தது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு, அவருடன் சென்ற கூட்டாளிகள் 3 பேர் பற்றிய தகவல், இந்தியர்கள் வேறு யாருக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்பது போன்ற  கேள்விகளை கேட்டு தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் விசாரணை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இதுபற்றி தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆரிப் மஜித் மீது வழக்குப்பதிவு செய்ய போதிய ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால் இந்த பிரச்னையை நாங்கள் அந்த நோக்கத்தில் பார்க்கவில்லை. இளம் வயதினர் சிலர் இதுபோன்ற கிளர்ச்சி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு பாதிக்கப்படுவது உண்டு. இதுபோன்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மீது சமூகத்துக்கு தவறான பார்வை வந்து விடக்கூடாது என்று கருதுகிறோம்.

 இதனால் ஆரிப் மஜித் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையே உள்துறை அமைச்சகத்துக்கும் பரிந்துரை செய்து உள்ளோம். அவர் துருக்கியில் இருப்பதை நாங்கள் தொலைபேசி எண் மூலம் கண்டறிந்தோம். இதனை அடுத்து தூதரக ரீதியில் அவரை மீட்டு கொண்டு வந்து உள்ளோம். இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கை பணியில் ஈடுபடுபவர்கள் யார்? என்பது பற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.



23/11/2014 ஞாயிறு அன்று மாலை 7 மணியளவில் சென்னை திருவல்லிகேணியில் பிரசித்தி பெற்ற திருவெட்டீஸ்வரர் ஆலயம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் நடந்து வந்த போது சில முஸ்லிம் பசங்க நடந்து வந்த ஒரு 41 வயது நிரம்பிய பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்டு விட்டு ஓடி விட்டனர். அந்த பையனை துரத்தி ஓடிய போது அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரிடம் மாட்டி கொள்ள,காவலர்கள் அவனை காவல் துறை வாகனத்தில் ஏற்றிய போது அந்த முஸ்லிம் பையனின் உறவினர்கள் பெண்கள் உட்பட சுமார் 50 பேர் போலீஸ் வாகனத்தை செருப்பால் அடித்து, காவல் துறை ஆய்வாளர் வாகனத்தில் இருந்த போதே அவனை வாகனத்தில் இருந்து இறக்கி அழைத்து சென்று இருக்கின்றனர். பிறகு பாதிக்க பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது அவருடைய மகனை ரோட்டில் வைத்து எங்கள் பையன் மீது எப்படி புகார் கொடுப்பாய் என கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். சுமார் 50 பேர் கொண்ட முஸ்லிம் கும்பல். பிறகு தாக்கிய கும்பலில் 5 பேர் காவல் துறையால் கைது செய்யபடுகின்றனர்.
கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டி ஹிந்து முன்னணி சார்பாக காவல் நிலையத்திற்கு பாதிக்க பட்ட பெண்மணியுடன் சென்ற போது அங்கு முஸ்லிம் அமைப்பை சார்ந்தவர்கள் வந்தது மட்டுமல்லாமல் கண்ட படி அசிங்க அசிங்கமாக பேசியதுடன் சோடா பாட்டில் வீச்சு போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று காலை முஸ்லிம்கள் திருவல்லிக்கேணி கார்யவாஹ் திரு ராஜ்குமாரை தாக்கினர். அதுர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இதனை கண்டித்து சென்னை அரசு விருந்தினர் மாளிகை எதிரே நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஆல்பர்ட் தியேட்டர் ரவுண்டானா அருகே நடைபெறும்.

பத்திரிக்கைச் செய்தி:
 

தகவல்-http://rsschennai.blogspot.in/2014/11/rss-cadre-attacked-in-chennai.html


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகேயுள்ள எண்புதூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் இளையராஜா(வயது 32).சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம மனிதர்கள் இவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். இதே போன்று அதே ஊரை சேர்ந்த ராஜ்முகமது மகன் முஹம்மது  யூனுஸ் (45) வீட்டிலும் நள்ளிரவில் பின்புற கதவை உடைத்து ரூ.10 ஆயிரம் பணத்தையும் வெள்ளி கொலுசையும் திருடி சென்ற மர்ம மனிதர்கள் ராமசாமி, பொன்னுசாமி ஆகியோரின் வீடுகளிலும் பின்புறம் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து வ.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

-தினகரன்.