Wednesday 12 November 2014


ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சோதனை அடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் 80 சதவீதத்துக்கும் மேலாக முடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தேசிய வாக்காளர் பதிவேட்டில் பொதுமக்களின் பெயர்களைப் பதிவு செய்யும் பணியைத் தீவிரப்படுத்தி ஆதார் எண்ணை வழங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு வட்டத்திலும் நிரந்தர முகாம்களை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1.98 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் போலி அட்டைகளைக் களையும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இப்போதுள்ள தாள்களை அடக்கிய குடும்ப அட்டைக்குப் பதிலாக, பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்ட ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டையை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டு மாவட்டங்கள் தேர்வு: ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகளைச் சோதனை அடிப்படையில் வழங்க அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இந்தப் பதிவேட்டின்படி, விரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகியன படம் எடுக்கப்பட்டு, பொதுமக்களின் அடிப்படைத் தகவல்களும் (பெயர்-முகவரி) சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை மையமாகக் கொண்டு ஆதார் எண் வழங்கப்படுகிறது. மக்கள் தொகை பதிவேட்டில் பதிவாகியுள்ள அனைத்துத் தகவல்களையும் அப்படியே பெற்று அதன் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகளைத் தயாரிக்கும் பணியில் உணவுத் துறை ஈடுபட்டுள்ளது.

நிரந்தர முகாம்கள்: தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் சிறப்பு முகாம்களின்போது மட்டுமே தேசிய வாக்காளர் பதிவேட்டில் பெயரைப் பதிவு செய்து, ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் அனைத்துத் தரப்புக்கும் ஆதார் எண்ணை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 73 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், தேசிய வாக்காளர் பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட தகவல்களையும், கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவற்றையும் பதிவு செய்ய வசதியாக ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நிரந்தர முகாமை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையரகம் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த முகாம்களை அமைப்பதன் மூலம், பொதுமக்கள் எந்த நேரமும் அங்கு சென்று தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்து ஆதார் எண் பெறுவதற்கு வழி ஏற்படும். பிறந்த குழந்தைகளுக்கும்கூட சிரமமின்றி தகவல்களைப் பதிவு செய்ய இந்த நிரந்தர முகாம்கள் வாய்ப்பாக அமையும் என்று வருவாய்த் துறை வட்டாரங்கள் கூறினர்.


தினகரன்.

பாஸ்போர்ட் வழங்குவதில் போலீசார் விசாரணை காரணமாக ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.பாஸ்போர்ட் வாங்க விரும்புவோர் விண்ணப்பித்த பிறகு அவர் மீது குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கிய பிறகே பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை காணப்பட்டு வருகிறது. தற்போது இந்த முறையை மாற்றி பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த புதிய நடைமுறையில் ஆதார் அட்டை மூலமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள தகவல்களை ஒப்பிட்டு பார்த்து விண்ணப்பதாரரின் குற்ற வழக்குகளின் தன்மைகளை கண்டறிந்து விட முடியும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று வெளியுறவுத்துறை, உள்துறை, சட்டத்துறை, புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறைக்கு தேவையான ஆதார் உள்ளிட்ட பரிந்துரைகளை பிரதமர் மோடிக்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆதார் அட்டை இல்லாதவர்களின் ஆதார் எண்ணை வைத்து மட்டுமே இதனை ஏற்றுக் கொள்வது என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது. 

பாஸ்போர்ட்டுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில், செப்டம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் உதவியின் மூலமாக விண்ணப்பதாரரின் குற்ற தன்மைகள் குறித்து உறுதி செய்வது இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.


தினகரன்.

Tuesday 11 November 2014

படம் - வசந்த ஜீவா
ஆசிரியர் தேர்வுவாரியத்தால் நடத்தப்படும் முதுகலைப் பட்டதாரிஆசிரியர் பணி யிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெரம்பலூரில் 10ம் தேதிமுதல் விநியோகிக்கப்படவுள்ளது என முதன்மைக் கல்விஅலுவலர்(பொ) கலையரசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வு 2015 ஜனவரி 10ம்தேதி தமிழக அளவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான விண் ணப்பங்கள், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை, அலுவலக நேரங்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் அலுவலகத்திற்கு வந்து, ரூ.50 கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினர்களும் ரூ500க்கும், ஆதிதிராவிடர் இனத்தவர் ரூ.250 க்கும் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து வருகிற 26ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இதில் ஆதி திராவிடர் இனத்தவர் மட் டும் விண்ணப்பங்களைப் பெற வரும்போது, தங்களது சாதிச் சான்றிதழின் நகலை எடுத்துவர வேண்டும்.
இந்தத் தேர்வில் எம்எஸ்சி, எம்சிஏ, எம்ஏ, எம்காம் படித்து, பிஎட் பட்டம் பெற் றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர், எனத்தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு டிஆர்பி மூலமாக விநியோகித்திட 4,400 விண்ணப்பங்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.  .

Monday 10 November 2014


நேற்று நடைபெற்ற RSS அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்ட தொண்டர்களை கைது செய்தது தமிழக காவல்துறை. அதன் பத்திரிக்கை செய்திகள் சில.. உங்கள் பார்வைக்கு.

Sunday 9 November 2014


விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மார்ச் மாதத்திறகுள் துரிதமாகவும், துல்லியமாகவும் முடிக்க வேண்டும் எனஆய்வு செய்த பொதுப்பணித் துறையின் மண்டல கண்காணிப்புப் பொறியா ளர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார் பாக, செம்மலை, பச்சை மலை ஆகியமலைகளை இணைத்து விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த அணைக் கட்டு மூலம் கல்லாற்றுநீர் வீணாகாமல் தடுத்து விவசா யம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் முதல்கட்ட பணி யாக ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன்கூடிய கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அணைக்கட்டு மூலம் 30.67மில்லியன் கனஅடி தண்ணீரை 10 மீட்டர் உயரத்துக்கு சேமிக்க இயலும். இதற்காக அணையின் நீர்ப்போக்கியை அமைத்திட 11 மீட்டர் உயரத்திற்கு கான் கிரீட் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. நீர்போக்கி யின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயர கரைகள் அமைத்து, மண்அரிப்பு ஏற்படாதபடி கருங்கல் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அணைக்கட்டு அமைக் கும் பணிக்காக 2ம் கட்ட மாக மறுமதிப்பீட்டின்படி ரூ.14.07 கோடி நிதிகேட்டு அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுமூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய்நிலம் பாசன வசதி பெறும். மதகுகளின் மூலம் வெங்கலம் பெரியஏரிக்கு கீழுள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கான நீராதாரம் உறுதி செய்யப்படும். நிலத்தடிநீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெறும். அதோடு மறைமுகமாக 2ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். இந்த அணையை அன்னமங்கலம் வழியாக நேரில் வந்து பார்ப்பதற்காக விசுவக்குடியிலிருந்து 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு 10.5 மீட்டர் அகலமுள்ள தார்சாலை அமைக்கப்படுகிறது. அணையின் திட்டப்பணிகளின் படி தேக்கப்படவுள்ள 30.67மில்லியன் கனஅடி நீருடன், உட்பகுதியில் ஆழப்படுத்துவதன்மூலம் மேலும் 10மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையிலான மாநில திட்டக்குழுவிற்கு மாவட்ட நிர்வாகத்தினால் கருத்துரு மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுப்பணித்துறையின் திருச்சிமண்டல (நடுக்காவிரி வடிநிலக் கோட்டம்) கண்காணிப்புப் பொறியாளர் ஜேம்ஸ்லூர்துசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணைக்கட்டு அமைக்கும் பணிகளில் ஷட்டர் மூலம் நீர் வெளியேற்றும் பகுதியில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த பெரியஅளவிலான கற்கள் பொக்லைன் இயந்திரத்தால் நிரப்பும் பணிகள் நடைபெறுவதையும், ஏரிக்காக 12 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கரையின் மேல் நடந்து சென்று மலைப்பகுதியை இயற்கை எழிலோடு காண்பதற்கும், நீர்வழிந்தோடுவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். பிறகு அவர் பொறியாளர்களிடம் தெரிவிக்கையில், பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் விதத்தில் துரிதமாகவம், துல்லியமாகவும் நடத்தி முடிக்க வேண்டு மென உத்தரவிட்டார். அணையின் முன்புறத்தில் பிரமாண்ட பூங்காவும், அணையின் கரையில் பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகை அமைக்கவும், அணையை பார்க்க பொதுமக்கள் வருவதற்காக தொண்டமாந்துறை வழியாக புதிதாக ஒரு சாலைஅமைக்கவும் பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தஆய்வின்போது, பொதுப்பணித்துறையின் மருதையாறு வடிநிலக் கோட்டத் தின் (அரியலூர்) செயற்பொறியாளர் தெய்வீ கன், மருதையாறு உப வடிநிலக்கோட் டத்தின்(பெரம்பலூர்) உதவி செயற்பொறி யாளர் வேல்முருகன், உதவிப்பொறியாளர் கார்த் திக், இளநிலைப் பொறியா ளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்
.

-தினகரன்.
பெரம்பலூரில் கைது செய்யப்படும் RSS தொண்டர்கள்..
ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.), சோழரசர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவரான கங்கைகொண்ட சோழன் முடிசூட்டியக்கொண்டதன் 1000ஆவது ஆண்டை கொண்டாடும் வகையிலும், சமுக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியும் இன்று (9.11.2014) மாலை ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி காவல்துறை அனுமதி வழங்க தீர்ப்பாணை பெற்ற நிலையில், இன்று காவல்துறை ஊர்வலத்தைத் தடை செய்து, ஊர்வலத்தில் வந்தவர்களை கைது செய்துள்ளது.

சென்னையில் 8000 பேர் கைது செய்யப்பட்டனர், தமிழகம் முழுவதும் 36 இடங்களில் 40,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தமிழக அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் காட்டுகிறது. நீதிமன்றம் அனுமதிக்க வலியுறுத்தியும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற காவல்துறை மறுத்துள்ளது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனநாயக உரிமையை தமிழக அரசு துச்சமென மதித்துள்ளது மட்டுமல்ல, நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. தடை செய்ய எந்த மூகாந்திரமும் இல்லாத நிலையில் தமிழக அரசும், காவல்துறையும் நடந்துகொண்ட விதம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்கும் நீதிமன்றம், இந்தப் பிரச்னையை தானாக முன்வந்து எடுத்து, தமிழக அரசின் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டி சட்டத்தின் மாட்சியமையை மெய்ப்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
    
சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தும் கட்டுப்பாடு என்ற பெயரில் பல நிபந்தனைகளை விதித்து பெரம்பலூரில் நடக்கவிருந்த rss ன் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் 350 றக்கும் மேற்பட்ட RSS ன் தொண்டர்களை கைது செய்தது பெரம்பலூர் காவல்துறை.

காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறோம் என்று கையெழுத்துப்போட நிர்பந்தித்தது மட்டுமல்லாமல், அவ்வாறு கையெழுத்து போடவில்லை என்றால் பெரம்பலூர் மாவட்ட RSSன் முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்வோம் என மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில்  ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பெரம்பலூர், துறையூர் மற்றும் அரியலூர் பகுதிகளைச்சேர்ந்த RSS தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகம் முன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. சரியாக மாலை 5 மணிக்கு ஊர்வலம் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் 3 மணி முதற்கொண்டே தொண்டர்கள் அணிவகுக்கத்தொடங்கினர்.

மாலை 5 மணிவரை காவல்துறை அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காத நிலையில் கைது செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது. நாம் எதிர்பார்த்தது போலவே ஆரம்பத்தில் இரண்டு காவல்துறை வாகனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மேலும் மூன்று வண்டிகளை கொண்டுவந்த நிறுத்தினர்.

பெரம்பலூர் கிருஷ்ணா தியேட்டர் அருகே RSS ன் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி பெரம்பலுருக்கு புதிது என்றே சொல்லும் அளவுக்கு மக்களின் கருத்து இருந்தது. பிரார்த்தனா பாடப்பட்ட பிறகு ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை... மீறி ஊர்வலம் சென்றால் கைது செய்யப்படுவீர்கள்...... என காவல் துறை அதிகார்கள் கூறியதால் வேறு வழியின்றி காவல்தறையின் தடையை மீறி ஊர்வலம் செல்ல தீர்மானிக்கப்பட்டு RSS தொண்டர்கள் அணிவகுத்து செல்லத்தொடங்கினர்.

எல்லோரும் கைது செய்யப்படுகிறீர்கள்.......  எனக்கூறிய காவல்துறை அதிகாரிகள் தொண்டர்களை போலிஸ் வண்டியில் ஏறச்சொன்னனர். வரிசையாக ஒவ்வொரு வாகனமாக பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள சின்னமணி ராஜேஸ்வரி திருமண மண்டபம் நோக்கி கொண்டு செல்லப்பட தொண்டர்கள் சுமார் 2 மணி நேரம் அங்கேயே தங்கவைக்கப்பட்டனர். மேலும் 5 முக்கிய பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது,

இரண்டு மணி நேரம் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட ஸ்வயம் சேவகர்கள் மறுபடியும் காவல்துறை வாகனத்திலேயே பாஜக அலுவலகம் அருகே இறக்கிவிடப்பட்டனர்.

பள்ளி மாணவர்கள் முதல் முப்படைந்த வயதானவர்கள் வரை அணிவகுப்பில் கலந்துகொள்ள வந்தது பெரம்பலூர் மக்களுக்கு பஒரு புதிய அனுபவம் என்றே கூறவேண்டும்.