Saturday 18 October 2014


பெரம்பலூரில்
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோ சனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக் டர் தரேஷ்அஹமது தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: வரும் நவ. 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறுவது இம்மாவட்ட இளைஞர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ளவர்களை தேர்வு செய்ய அனைத்து பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்படும்.
நகராட்சி மற்றும் உள்ளா ட்சி நிர்வாகங்களின் மூலமாக வருகை தரும் அனைத்து இளைஞர்களுக்கும் சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, விளை யாட்டு மைதானம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் உள்ள இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆள்சேர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீஸ் துறை யி னர், ஊர்க்காவல் படை யினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி, ஓட்டப்பந்தயம், மருத்துவ தகுதிகள் குறித்த தேர்வுகள் நடக்க உள்ளன. அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் உள்ளி ட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த தகுதியான ஆட்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பல்வேறு மாவட்ட இளைஞர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளுக்காக அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திறமையும், ஆர்வமுள்ள இளைஞர்கள் முகாமில் பங்கேற்று, தேர்வு பெற்று இந்திய ராணுவத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் தார். இதில் டிஆர்ஓ., ராஜன் துரை, சப்.கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் துரைமுனுசாமி, ராணுவ அதிகாரி அனுதீப் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 -தினகரன்.

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்துக்கான மறு மதிப்பீட்டின் படி கூடுதலாக ரூ. 14.7 கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கல்லாறு ஒடையின் குறுக்கே ரூ. 19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மேலும் கூறியது:

கல்லாறு ஒடையின் குறுக்கே பொதுப்பணித் துறை நீர்வள ஆதார துறையின் மூலமாக செம்மலை - பச்சைமலையின் இடையே விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரூ. 19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது.

இதன்மூலம் 30.67 மில்லியன் கன அடி நீர் 10 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இங்கு நீர்ப்போக்கி அமைக்க 11 மீட்டர் உயரத்துக்கு கான்கீரிட்டினால் ஆன கட்டுமான அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்துக்கு கரைகள் அமைக்கப்பட்டு, மண் அரிப்பு ஏற்படாத வகையில் கருங்கல் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிக்காக கூடுதலாக மறு மதிப்பீட்டின்படி ரூ. 14.7 கோடி நிதி கேட்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். மதகு மூலமாக வெங்கலம் ஏரிக்கு கீழ் உள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கு உறுதி செய்யப்பட்ட நீரும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப் பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு, மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

மேலும், அன்னமங்கலம் வழியாக அரசலூர் மற்றும் விசுவக்குடி வரை 1.20 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இங்கு தேக்கப்பட உள்ள 30.67 மில்லியன் கன அடி நீருடன், உள் பகுதி ஆழப்படுத்துவதன் மூலம் கூடுதலாக 10 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் மாநில திட்டக் குழுவுக்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்

ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில், அணைக்கட்டின் கீழ் பகுதியில் பூங்காவும், கரைப்பகுதியில் ஆய்வு மாளிகை அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வை. வேல்முருகன், உதவி பொறியாளர் கார்த்திக், பொதுப்பணித்துறை தரக் கட்டுப்பாட்டுக் கோட்ட செயற்பொறியாளர் சிசில், உதவி செயற்பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


-தினகரன்.
இராமநாதபுரம் SP பட்டிணத்தில் 14.10.2014ம் தேதியன்று விசாரணைக்காக கைது செய்யப்பட்ட செய்யது முகமது என்ற ரவுடி காவல்துறை விசாரணையின் போது காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. காளிதாஸை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட போது செய்யது முகமது இறந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து SP பட்டிணத்தில் இஸ்லாமியர்கள் பேருந்துகளில் இருந்த முஸ்லீம்களை மட்டும் பத்திரமாக இறங்கி போகச்செய்து விட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவு இருக்கும்பொழுது முன் அனுமதி பெறாமல் வேன்களில் கொடி கட்டி ஊர்வலமாக சென்று அரசு மருத்துவமனையின் முன் ஆர்பாட்டமும் அராஜகமும் செய்துள்ளனர். இவை அனைத்தையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுள்ளது.
muslims protest ramnad

muslims protest ramnad1

muslims protest ramnad3
காவல்நிலையத்திலேயே ரவுடித்தனம் செய்து உதவி ஆய்வாளரையே குத்தி கொல்ல முயன்ற ரவுடியை தற்காப்பிற்காக சுட்ட காவல்துறை ஆய்வாளர் திரு. காளிதாஸ் அவர்கள் மீது சட்டப்படி விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், நீதி விசாரணை முழுவதுமாக முடியாத நிலையில் காவல்நிலையத்தில் ரவுடித்தனம் செய்த செய்யது முகமதுவிற்கு அரசு ரூ.5,00,000/- ம் கொடுக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பணத்தை திரும்ப பெற கோரியும், இச் சம்பவத்தை காரணம் காட்டி அராஜகம் செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இராமநாதபுரம் இந்து முன்னணியின் சார்பில் திரு. கே. இராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் அவர்கள் இன்று (17.10.2014) மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. மயில்வாகனனிடம் மனு கொடுத்துள்ளார்.
ramanathapuram sppatinam issue1

ramanathapuram sppatinam issue
இந்த கோரிக்கைகளை ஏற்று இஸ்லாமிய அராஜகத்தை ஒடுக்கி சட்டத்தின் ஆட்சியை இராமநாதபுரத்தில் தமிழக அரசு நிலை நிறுத்த வேண்டும். வழக்கம் போல் இஸ்லாமியர்களின் வன்முறையின் முன் மண்டியிட்டு முஸ்லீம்களுக்கு சலுகைகளை வழங்கினால் அது பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும். இராமநாதபுரம் மேலும் சீரழிந்து காஷ்மீராக மாறிவிடும்.

Wednesday 15 October 2014

நாயன்மார் ஆழ்வாரின் மண் நயவஞ்சகத்தால் ஈவேராவின் மண் அண்ணாவின் மண் என்று மாறும் சூழ்நிலையில் விடி வெள்ளியாக முளைத்து தமிழ் மண்ணின் மான்பை காத்து நாயன்மார்களையும் ஆழ்வார்களையுமே தமிழகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்ஜித்த வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களின் பிறந்த நாள் இன்று(15.10.2014). பாரத நாட்டின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய கம்யூனியச அரக்கர்களை இந்து ஒற்றுமை என்ற கோதண்டத்தினால் தகர்க்க பாஞ்சஜன்யத்தை ஊதிய நம் கலியுக ராமகோபலானின் 88வது பிறந்த நாள் விழா இன்று 15.10.2014 அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
gopaliji bdayfunction

அவரது பிறந்தநாளையொட்டி கோவிலில் காலை முதல் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மிருத்ஞ்ஜய ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. விஜய் டிவி புகழ் திருமதி. சிந்துஜா சந்திரமெளலி பக்தி பாடல்கள் மற்றும் தேசப்பக்தி பாடல்களை பாடினார்.
sinduja gopalji

இந் நிகழ்ச்சியில் குமுதம் ஜோதிடம் ஆசிரியர். தேச பக்தர் திரு. A.M. இராஜகோபால் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். இந்து முன்னணி பொறுப்பாளர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களின் பொற்பாதங்கள் பணிந்து ஆசிப்பெற்றனர்.
vsrc members thatha



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களை போலவே தாங்களும் இந்து சமுதாயப் பணியில் தொடர்ச்சியாக மனந்தளராமல் ஈடுபட அவரிடம் ஆசி வேண்டினர். 
 
நன்றி- VSRC

வ.களத்தூரில் நாளை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட புதிய வரைவுவாக்காளர் பட்டியல் தொடர்பான கூட்டத்தில் நம் பெயர் வாக்காளர்பட்டியலில் உள்ளதா எனவும் அறியலாம்.

வ.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நாளை  17- 10-2014 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.



1.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ) 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்.

1-நடுத்தெரு வார்டு 1
2-தெற்கு தெரு வார்டு 1
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147096.pdf 

2.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்

1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1
2-மில்லத் நகர் வார்டு 4
3-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
4-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147097.pdf
 

3.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி வடக்கு பார்த்த மேற்கு ஓட்டுக்கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-அக்கரகாரத்தெரு வார்டு 3 
2-மேற்குத் தெரு .99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147098.pdf

4.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் தென்வடல் மெத்தைக்கட்டிடம் மேற்கு பார்த்தது வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-மேலத் தெரு வார்டு 4
2-தெற்கு தெரு வார்டு 4
3-மேட்டுச் சேரி வார்டு 5
4-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147099.pdf

5.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரபூண்டி கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்குபகுதி தெற்கு பார்த்தது வ.களத்தூர்

1-காமராஜர் நகர் வார்டு 4
2-மில்லத்நகர்வார்டு 4
3-தெற்கு தெரு வார்டு 4
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147100.pdf   


6.  வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பகுதி 5 வடக்கு பார்த்த கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் தெற்குபகுதி வண்ணாரம்பூண்டி வ.களத்தூர்

1-வ.களத்தூர் பள்ளிவாசல் வீதி வார்டு 1,2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147101.pdf

7.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் வடக்கு பார்த்த கற்போம் கற்பிப்போம் மெத்தை கட்டிடம் வண்ணாரம்பூண்டி வ.களத்தூர்

1-வண்ணாரம்பூண்டி ரேசன்தெரு வார்டு 4
2-மில்லத் நகர் வார்டு 4
3-வண்ணாரம்பூண்டி காலனிதெரு வார்டு 5
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147102.pdf

8.வ.களத்தூர் (வ.கி) மற்றும் வ.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி கிழக்குபார்த்த ஒட்டு கட்டிடம் வ.களத்தூர்


1-ராயப்ப நகர் வார்டு 6
2-வள்ளியூர் வார்டு 6
3-இந்திரா நகர் வார்டு 6
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147103.pdf



நன்றி-தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரை போலீஸ் நிலைய விசாரனையின் போதே பல வழக்குகளில் தொடர்புடைய ஒரு ரவுடி கத்தியால் குத்தி இருக்கிறார். அந்த எஸ்.ஐ தன்னை தற்பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதனால் அந்த ரவுடி இறந்தார்.
இறந்தவர் முஸ்லீம் என்பதால் எல்லா முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று கூடி போகும் வரும் பேருந்துகளை நிறுத்தி ஹிந்துக்களை மட்டும் அடித்து விரட்டியுள்ளனர். இது கிட்டதட்ட 5 மணி நேரம் SP பட்டினத்தில் நடந்தேறியுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டும் நடவடிக்கை இல்லை. அது சம்மந்தமான புகைப்படங்கள் கூட நம்மவர்கள் எடுக்கும் நிலையில் கூட இல்லை..(அங்கெ நம்ம நிலை அப்படி)
அதே நேரத்தில் இன்று டி.ஜி.பியிடம் போலீச்காரர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிய செய்ய முஸ்லிம்கள் வற்புறுத்தல் செய்தனர். அதை தொடர்ந்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்யும் அளவிற்கு அவர்கள் அழுத்தம் தந்துள்ளனர். இந்த செய்தியே நம்மில் பலருக்கு தெரியவில்லை. அந்தளவிற்குத்தான் நமக்கான விழிப்புணர்வு.
இன்னும் எத்தனை நாள் தான் ஊதுவத்தி ஸ்டேடஸ் போட்டுக்கொண்டிருப்போம். ஒரு ஹிந்து அமைதியாக இராமநாதபுரத்தில் வாழ முடியாத நிலையில் இருக்கிறான் என்பதை நாம் என்று உணரப்போகிறோம். அதைப்பற்றி சிந்திக்க வேண்டாமா? நடந்த செயல் தான் என்ன என்று அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு வேண்டாமா??

-ராஜேஷ் ராவ்.

பெரம்பலூரில் கடை யின் பின்பக்க தகர கதவை வளைத்து மளிகை கடையில் ரூ.1½ லட்சத்தை மர்ம மனிதர்கள் கொள்ளை யடித்து சென்ற னர்.

மளிகை கடையில் கொள்ளை

பெரம்பலூர் பாரதிநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). இவர் பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம் அருகே வெங்கடாஜலபதி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடையை ஒட்டி சிறிய அறையும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் முருகேசன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென் றார்.

பின்னர் நேற்று காலை வழக்கம்போல் முருகேசன் கடையை திறக்க வந்தார். அவர் கடையை திறந்து பார்த்தபோது பின்பக்க தகர கதவு வளைக் கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பணம் இருந்த இரும்பு கல்லா பெட்டியை பார்த்தபோது அது திறந்து கிடந்தது. அதன் அருகே 10 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கிடந்தது. இதையடுத்து அந்த பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது அவருக்கு தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து முருகேசன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் மர்ம மனிதர்கள் பின்பக்க தகர கதவை வளைத்து கடைக்குள் புகுந்து, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து விரல்ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை களை பதிவு செய்த னர்.

பெரம்பலூரில் சமீப காலமாக கொள்ளை சம் பவங் களு ம் , தெருவில் நடந்து செல்லும் பெ ண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் அதிகமாக நடந் து வருகின்றன. புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்ட லில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது. வடக்கு மாதவி சாலையில் ஒரு ஆசிரியையிடமும், துறைமங் கலம் புதுக்காலனியில் ஒரு பெண்ணிடமும், ரோவர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைகளை மர்ம மனிதர்கள் பறித்து சென் றனர்.

கூடுதல் போலீசார்நியமிக்க கோரிக்கை

பெரம்பலூர் போலீஸ் நிலை யத்தில் குறைவான எண்ணி க்கையிலேயே போலீசார் உள்ளனர். இதனால் கொள் ளையர்கள் நோட்டம் விட்டு, திட்டம்போட்டு அடிக்கடி தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனை தடுக்க கூடுதல் போலீ சாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின் றனர்.

-தினத்தந்தி.

Tuesday 14 October 2014


பெரம்பலூர்,: பெரம்பலூர் ஐஓபி சார்பாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான இலவசப் பயிற்சிபெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என பயிற்சி மைய இயக்குநர் பார்த்தசாரதி அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 16ம்தேதி முதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ எடுப்பதற்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர்ந்திட விரும்பும் நபர் 18வயதிற்கு மேற்பட்டவராகவும், 35 வய திற்குக் குறைவானவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 8ம்வகுப்பு படித்த வராக இருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண் டும். சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 இந்தப்பயிற்சி தொடர்ந்து 21 நாட்களுக்கு தினமும் காலையில் 10மணிக்குத் தொடங்கி மாலை 5மணிவரை அதிநவீன உபகரணங்களைக் கொண்டு, சிறந்த புகைப் பட, வீடியோ கலைஞர்களைக்கொண்டு நடைபெறும். பயிற்சி காலத்தில் பயிற்சி பெறுவோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாகும்.
பயிற்சியில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் பெரம்பலூர் ரங்கா நகரில்உள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

 குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட்அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத் துடன் இணைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களை அறிந்துகொள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சிமையம், ரங்காநகர், ஆத்தூர்ரோடு, பெரம்பலூர், தொலைபேசி எண் 04328-277896 என்ற முகவரியில் நேரிலோ, தொலைப் பேசியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

-தினகரன்.

பெரம்பலூர், : சிறுமத்தூர் ஊராட்சிக்கு உட் பட்ட நமையூர் நடுத்தெரு வில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட் டம், குன்னம் தாலுகா, பேரளி கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் நேற்று கலெக்டர் தரேஸ்அஹமதுவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பேரளி கிராமத்தில் 20ஆண்டுகளுக்கு முன்பு 1994ல் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினர் இனத்தவர்களுக்கு வழங்கப்பட்ட 223 மனைப்பட்டாக்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மனைகளில் வீடுகட்ட சென்றபோது, நிலத்தின் உரிமையாளர், தனக்கான நிவாரணத்தொகை இன்னமும் வழங்கப்படவில்லை எனக்கூறி தடுத்துவிட்டார். இதுகுறித்து பலஅதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 20 ஆண்டுகளாகப் போராடி வரும் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் வருகிற 17ம்தேதி வீடுகட்ட உள்ள தால், எங்களுக்குத் தேவை யான பாதுகாப்புகளை வழங்கிட உத்தர விடவேண் டும் அல்லது இருதரப்பின ரை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்த மனு வில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், நமையூர் கிராமப் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது :
வேப்பூர் ஒன்றியம், சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நமையூர் நடுத்தெருவில் இருபுறமும் கழிவுநீர் வடிக்கால் கடந்த ஓராண்டிற்கு முன்பு கட்டப்பட்டது. இதில் தென்புறம் கழிவு நீர்வாய்க்கால் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு கழிவுநீர் தேங்காமல்ஓடி அருகில் உள்ள ஓடையில் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வடபுறம் வாய்க்கால் முழுமையாக கட்டிமுடிக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர்செல்ல வழியில்லாமல் தேங்கி, வாய்க்கால் அருகிலுள்ள குடிநீர் குழாயில் சேர்வதால் குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வருகிறது.
 எனவே சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும்அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பூர் ஊராட்சிஒன்றிய அலுவலர்களிடமும் பலமுறை புகார்கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நமையூர் நடுத்தெருவில் கட்டப் படாமல்உள்ள கழிவுநீர் வாய்க் கலை முழுமையாகக்கட்டி கழிவுநீர் தேங்காமல் வெளியேற்றி சுகாதார சீர்கேடு ஏற்படா வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டு மென அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவினைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் தரேஸ்அஹமது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

-தினகரன்.
இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன் பட்டினத்தில் (SP பட்டினம்) அரும்பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ தேவேந்திர குலத்தைச் சார்ந்த சியோன் என்பவரின் மகன் அருள்தாஸ் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இன்று(14.10.2014) மதியம் சுமார் 2 மணியளவில் SP பட்டிணத்தைச் சேர்ந்த சையத் முகமது என்பவர் பழுதுபார்க்க கொடுக்கப்பட்ட அவரது நண்பரின் டூ வீலரை அருள்தாஸின் கடைக்குச் சென்று கேட்டார். வண்டியை என்னிடம் கொடுத்த நபரிடம் தான் வண்டியைக் கொடுப்பேன் என்று அருள்தாஸ் சொன்னவுடன் சையது முகமது அருள்தாஸை கத்தியால் குத்த வந்தார். அருள்தாஸ் கடையை விட்டு காவல்நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் கொடுத்தார். உடனே அங்கு வந்த காவல்துறையினர் சையது முகமதுவை கத்தியுடன் கையும் களவுமாக பிடித்து SP பட்டிணம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
sppatinam policestation

கைது செய்யப்பட்ட சையது முகமதுவை காவல்துறையினர் விசாரித்துக்கொண்டிருந்த போது சையது மேஜையிலே இருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் காளிதாஸை இரண்டு முறை குத்தினார். வேறு வழியின்றி தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள உதவி ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் சையது முகமது இறந்தார். இறந்து போன சையது முகமது மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
timesofindia ramanathapuram sppatinam

சுமார் 5 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் திரண்டு அந்த வழியே சென்ற வாகனங்களை அடித்து நொறுக்கினர். பேருந்துகளில் இருந்த முஸ்லீம்களை மட்டும் பத்திரமாக இறங்கி போகச்செய்து விட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏரளாமான போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தும் தாக்குதல் தொடுக்கும் இஸ்லாமிய கலவரக்காரர்கள் மீது இந்தப் பதிவை வலைத்தளத்தில் நாம் ஏற்றும் வரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையிலே இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தை போலீஸார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று இந்து முன்னணியின் திருவாடானை ஒன்றியச்செயலாளர் திரு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
  • காவல்நிலையத்தின் உள்ளேயே ஒரு காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயலும் அளவிற்கு சையது முகமதுவிற்கு எப்படி துணிவு வந்தது? 
  • காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயன்ற ஒரு பயங்கர ரவுடிக்காக மதத்தின் பெயரால் இஸ்லாமிய அமைப்புகள் அணி திரண்டு வந்து கலவரம் செய்யும் போக்கு முஸ்லீம்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும் முஸ்லீம்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதையும் இந்த சம்பவம் நிலைநாட்டுகிறது.
  • கூட்டமாக காவல்நிலையத்திலும், கோர்ட்டுகளிலும் கூடி இஸ்லாமியர்கள் நடத்தும் இந்த அராஜகத்திற்கு பயந்து தமிழக காவல்துறை முஸ்லீம்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தானே காவல்நிலையத்திற்குள்ளேயே காவல்துறை அதிகாரியை குத்தும் துணிவு இந்த சையது முகமதுவிற்கு ஏற்பட்டது!
இந்த சம்பவத்திலும் கூட துப்பாக்கி சூடு நடந்த ஒரு மணிநேரத்திற்குள் SP பட்டிணம் கலவர பூமியாக மாறியுள்ளது. 6 மணி முதல் சுமார் இப்போது வரை முஸ்லீம்கள் நடத்தும் தாக்குதல்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கைப் பார்ப்பது முஸ்லீம்களின் அராஜகத்திற்கு காவல்துறையே ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. இதே மாவட்டத்தில் கேணிக்கரை காவல்நிலைய தாக்குதல், சக்கரக்கோட்டை கவுன்சிலர் கணேசன் மீது தாக்குதல், இராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் காவல்துறையின் கண்காணிப்பு பரிசோதனை நிறுத்தம், முஸ்லீம்களுக்கு பயந்து பள்ளி மாணவர்கள் இந்து மதச்சின்னங்களை அணியக்கூடாது என்ற கலெக்டரின் உத்தரவு போன்ற எண்ணற்ற செயல்கள் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தை சிரியாவைப் போல் மாற்றிவிட்டது. முஸ்லீம்களால் தாக்கப்படும் பேருந்துகளில் இந்துக்களை மட்டும் அடையாளம் கண்டு தாக்குவது ISIS அமைப்பின் சித்தாந்தை பிரதிப்பலிப்பதாக உள்ளது.
1921ல் துருக்கி நாட்டில் தூக்கியெறிப்பட்ட இஸ்லாமிய மதத் தலைவரான கிலாபத்தின் பெயரில் சம்பந்தம் இல்லாமல் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கேரளத்தில் கொல்லப்பட்டனர்.
Moplah Riots in Kerala

இந்த மாப்ளா கலவரத்தை போலவே இப்போது டூவீலர் மெக்கானிக் கடைச் சண்டையில் கைது செய்யப்பட்ட ஒரு ரவுடியின் பெயரில் பேருந்தில் பயணம் செய்த அப்பாவி இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். இந்துக்களை தாக்குவதற்கு சம்பந்தம் இல்லாமல் காரணங்களை ஏற்படுத்துவது இஸ்லாத்தின் இயல்பு. இதுவே இந்த இஸ்லாத்தின் வரலாறு. இந்த வரலாறு இன்று நம் இராமநாதபுரத்தில் தன் தலையை தூக்கியுள்ளது. ஓட்டுக்காகவும், பணத்திற்காகவும், பிரியாணிக்காகவும் தம் கடமையை மறந்தும் / மறுத்தும் செயல்படும் அரசியல் கட்சிகளும் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இப்போதாவது விழித்துக்கொண்டு வாங்கும் சம்பளத்திற்கும் வகிக்கும் பதவிகளுக்கும் நியாயமாக நடந்துக் கொள்வார்களா?

 
நன்றி- http://vsrc.in

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்.

5 ஆயிரம் பணியிடங்கள்

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4–ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கையினை  (செவ்வாய்க்கிழமை) வெளியிடவுள்ளது.

பதவிகள்: இளநிலை உதவியாளர் பிணையம் (39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133); தட்டச்சர் (1683); சுருக்கெழுத்து தட்டச்சர் (331); வரித் தண்டலர் (22); வரைவாளர் (53) மற்றும் நில அளவர் (702). மொத்தத்தில் காலிப்பணியிடங்கள் 4 ஆயிரத்து 963.

நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்

கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள். கட்டணம் செலுத்த நவம்பர் 14–ந் தேதி கடைசி நாள். தேர்வு டிசம்பர் 12–ந் தேதி காலை நடைபெற உள்ளது.

தேர்வு மையங்களின் எண்ணிக்கை: 244 (மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள்)

விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் இணையவழி விண்ணப்பம் மூலம் மட்டுமே.

விண்ணப்பிக்கும் முறை

ஏற்கனவே நிரந்தர பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தர பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

நிரந்தர பதிவு செய்திருத்தல் மட்டுமே இப்பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம், விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

இதுகுறித்த சந்தேகங்களை 044–25332855, 044–25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002–ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

-தினத்தந்தி.

பல இலட்சம் இந்துக்களை கொன்று குவித்து, மதமாற்றி பல்லாயிரகணக்கான கோவில்களை இடித்து ஆற்றங்கரையை உடைத்து பஞ்சத்தை ஏற்படுத்தி வெளிநாட்டுகாரர்களை பாரதத்தின் மீது படையெடுக்க அழைத்த தேசத்துரோக அரசர்களான திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தவுடன் மின்னல் வேகத்தில் அரசு அதிகாரிகள் செயல்பட்டனர். திண்டுக்கல் நகரத்தினுள் மணிமண்டபம் கட்டும் முயற்சியை அப்பகுதி இந்துக்கள் முறியடித்தனர். அதை தொடர்ந்து திண்டுக்கல் அகரம் பேரூராட்சியில் மணிமண்டபம் அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டது. தன்மானம் மிக்க இந்துக்கள் அரசின் இந்த முயற்சியை முறியடித்தனர். சற்றும் மனம் தளராத அரசு அதிகாரிகள் திப்பு ஹைதர் வேதாளத்தை விடாமல் பிடித்துக்கொண்டு ஆத்தூர் ஒன்றியம் புதுகோடாங்கிப்பேட்டை என்ற இடத்தில் அமைக்க முடிவு செய்தனர். தொழுநோய் மருத்துவமனைக்காக திரு. சபரி முத்து பிள்ளை அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு கொடுத்த 5 ஏக்கர் நிலத்தில் இந்த திப்பு ஹைதர் கிருமிகளுக்கு மணிமண்டபம் கட்டப்போகிறார்களாம்! 30 ஆண்டுகளுக்கு முன் இந்த தொழுநோய் மருத்துவமனைக்கு மூடு விழா நடத்திய அரசு அந்த இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தையோ, ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தையோ, பொதுக்கழிவறையையோ கூட கட்டியிருக்கலாம். மக்கள் நலத்தை பேணிக்காக்க எந்த அவசரமும் காட்டாத அரசு இந்த தொழுகை நோய்க்கு மணிமண்டபம் அமைக்க ஏன் இப்படி குதிக்கிறதோ?
தொழுநோய் மருத்துவமனைக்கு மூடுவிழா நடத்திய பின் இந்த இடம் பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டின் கீழ் வந்தது. இந்நிலையில் 10.10.2014 அன்று துப்புரவு பணியாளர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்துள்ளார்கள். அப்பகுதி மக்கள் அதைப்பற்றி விசாரித்தப்போது அரிசி அல்லது சிமெண்ட் குடோன் கட்டப்போவதாக கூறியுள்ளார்கள். 11.10.2014 அன்று காலையில் இந்த இடத்தில் திப்பு ஹைதர் அலி மணிமண்டபம் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் , உடனேயே சம்பவ இடத்திற்குச் சென்று எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஊர் மக்களின் எதிர்ப்பை கண்ட பணியாளர்கள், வேலையை நிறுத்திவிட்டனர். 35 ஆண்டுகளாக அந்த இடத்தில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனதை உணர்ந்த கிராம மக்கள், உடனே மூன்று கற்களை ஊன்றி முருகன், விநாயகர் மற்றும் கருப்பசாமியாக வழிபட்டனர்.
vinayagar sempati


karuppasami sempati


sempati


இந்நிலையில், அக்டோபர் மாதம் 2ம் தேதி நடக்கவிருந்த கிராமசபை கூட்டம், ஆயுத பூஜை என்பதால் 12.10.2014 அன்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், திப்பு ஹைதர் மணிமண்டபம் அமையக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. இளங்கோவன், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 8 பேர், சீவல்சரகு ஊராட்சி VAO , RI மற்றும் புதுகோடாங்கிப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
kiramasabai


kiramasabai2


kiramasabai1


kiramasabai3



kiramasabai4


kiramasabai6




kiramasabai interview12


kiramasabai interview 2



kiramasabai interview2 1



kiramasabai interview4 1

கிராம மக்கள் கொண்டு வந்த தீர்மானத்தில், திப்பு ஹைதர் அலி மணிமண்டபம் அமைந்தால், ஊர் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிடும் என்றும், கோயில் திருவிழாக்களுக்கு பாதிப்பு ஏற்படும், பொது அமைதி கெடும் என்றும் குறிப்பிடப்பட்டது.
theermanam


theermanam1

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, 13.10.2014 அன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட புதுக்கோடாங்கிப்பட்டி கிராம மக்கள் திண்டுக்கல் ஆட்சியரைச் சந்தித்து திப்பு ஹைதர் அலி மணிமண்டபம் அமைய எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால், அப்பொறுப்பில் இருந்த DRO மனுவைப் பெறுக்கொண்டு, ரசீதும் கொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கிராம மக்கள், எக்காரணம் கொண்டும் திப்பு ஹைதர் மணிமண்டபத்தை வரவிடமாட்டோம் என்று ஆவேசமாகக் கூறினர். இந்தப் போராட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து ஊக்கப்படுத்திய இந்து முன்னணியின் திண்டுக்கல் நகரச் செயலாளர் திரு.சங்கர் கணேஷ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் திரு.கிருஷ்ணராஜ், பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.போஸ் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது.
இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் கிராம மக்களுக்கும், இந்து அமைப்பினருக்கும் ஆதரவு தெரிவித்து தோளுடன் தோள் சேர்ந்து போராடுவது நம் கடமையாகும்.

நன்றி- http://www.vsrc.in

Monday 13 October 2014


பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ஆய்வுக்கு செல்லும்போது லஞ்சம் கேட்பதாக கூறி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட முதன்மை  கல்வி அதிகாரியின் அலுவலகத்தை தனியார் பள்ளி நிர்வாகிகள் முற்றுக்கை இட்டனர்.

ஆய்வின் பொது ரூ.25000/- லஞ்சம் கேட்பதும் , மட்டன் பிரியாணி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாக இருப்பதாக கூறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பிற மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள்  ரூ.பத்தாயிரம் கொடுத்தால் தான் பணி விடுவிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகிகளால்பல முறை புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் இன்று முற்றுக்கையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

நல்ல முறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாகத்தை நடத்துகிறார் என்று மக்களால் கூறப்படும் நிலையில் இது போல் லஞ்சம் தலைவிரித்தாடுவது வருந்தத்தக்கது.

தனியார் பள்ளி நிர்வாகிகளால் வெளியிடப்பட்ட கிசு கிசு செய்தி. 



 பட உதவி-வசந்த ஜீவா.

Sunday 12 October 2014



ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் நேற்று மாலை டில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. "என்சைக்ளோபீடியா ஆப் ஹிந்துயிசம்" என்ற அந்த புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மற்றும் ஹமீத் அன்சாரி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.