Saturday 20 September 2014


ARMY_2106277f
மக்களை மீட்கும் ராணுவவீரர்கள்.

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி அகற்றப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின்போது எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைத்த ஸ்வயம்சேவகர்கள், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு லட்சக் கணக்கானோரை காத்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் வெள்ளத்தோடேயே சென்றுவிட்டது போல, பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. சேவை செய்தவர்களைக் குறை கூறும் பிரிவினைவாதிகளுக்கும் இந்த ஊடகவாலாக்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.
ஒரு முக்கியமான சம்பவம். காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையத் அலி கிலானி வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில் ராணுவவீரர்களால் மீட்கப்பட்டார். இந்தப் புகைப்படம் ஊடகங்களில் வெளியானவுடன் அவர்,  “ஆபத்துக்காலத்தில் ஆக்கிரமிப்பு நாட்டின் உதவியைப் பெறுவது தப்பில்லை’’ என்று சொன்னார். என்ன ஒரு நெஞ்சழுத்தம்? அவரை மீட்ட இந்திய ராணுவவீரர்கள் ஆக்கிரமிப்பு நாட்டின் ராணுவமாம்.
Geelani Rescue
ராணுவவீரர்களால் மீட்கப்படும் கிலானி

இவ்வாறு கூறிய கிலானியை மறுகேள்வி கேட்கவும் எந்த ஊடகவாலாக்களுக்கும் துப்பில்லை. இதே வெள்ளம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் மீட்க ஆளின்றி தவித்த கதைகள் உள்ளம் உருக்குபவை. அந்தப் பகுதிக்கும் கூட உதவத் தயார் என்று நமது பிரதமர் மோடி அறிவிக்கிறார். ஆனால், உயிரைப் பற்றிய கவலையின்றி வெள்ளத்தில் சிக்கிய கிலானியை மீட்ட நமது வீரர்கள் ஆக்கிரமிப்பு ராணுவமாம்! இவ்வாறு கூற கிலானிக்கு எங்கிருந்து துணிவு வந்தது? நமது ஆங்கில ஊடகங்கள் கடைபிடிக்கும் மாய்மால மதச்சார்பின்மையும், இஸ்லாமிய அமைப்புகளின் பிரசார வலிமையும், அவற்றின் நாடுதழுவிய ஆபத்தான வலைப்பின்னலும், அரசியல்வாதிகளின் நடுநிலையற்ற சுயலாபக் கொள்கைகளுமே கிலானிக்கு இந்த துணிவைத் தந்திருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரை வெள்ளம் சூழ்ந்ததிலிருந்தே அங்கு மக்கள்நலப் பணிகளிலும் மீட்பு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபடும் எந்த ஒரு ஸ்வயம்சேவகரின் படமும் ஊடகங்களில் வெளிவராமல் தணிக்கை செய்யப்படுவதற்குக் காரணமும் இதுவாகவே இருக்க முடியும்.
இதே கிலானி, தான் மீட்கப்பட்டு இரண்டொரு நாள்கள் கழித்து சௌகரியமாக ஸ்ரீநகரில் அமர்ந்தபடி பேட்டி கொடுக்கிறார். அப்போது, “இந்திய ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதாக நாடகமாடுகின்றனர். அவர்கள் சுற்றுலாப் பயணிகளையும் வெளிமாநில மக்களையும் மீட்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். உள்ளூர் மக்களை பாரபட்சமாக அணுகுகின்றனர்’’ என்றார். அவர் வணங்கும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அறிவாளனுமான அல்லா, இவ்வாறு அவர் நேர்மையின்றிப் பேசுவதற்கு என்ன தண்டனை தருவார்?
கிலானி தண்டனை பெறுவது இருக்கட்டும். அவரது பேச்சு எதிர்பார்த்தபடியே ஸ்ரீநகரில் புகைச்சலை ஏற்படுத்திவிட்டது. அவரது பேச்சால் மதியிழக்கும் மக்கள் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்? வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களை அவரது பேச்சு உசுப்பிவிட்டது. அதன் விளைவே மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல்கள். இது ஒருவகையில் இந்திய அரசின் மீட்புப் பணிகளை மட்டம் தட்டும் உலகளாவிய சதித்திட்டத்தின் அங்கமும் கூட.
நமது நாட்டில் ஒரு சிந்தனையோட்டம் இருக்கிறது. அது இயற்கைச் சீற்றமான வெள்ளத்தைவிட அபாயகரமானது. மதச்சார்பின்மை என்ற பெயரில் தேசிய இயக்கங்களைப் புறக்கணிப்பதும், பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிப்பதும் தான் ஊடக தர்மம் என்ற சிந்தனைப் பாங்கு கடந்த காலத்தில் இங்கு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைப்பதாகவும் தகவல்கள் உண்டு. அதன் விளைவாகவே, கிலானி போன்ற உளறல் பிரிவினைவாதிகளுக்கு ஊடகங்கள் அளவுக்கு மீறி வெளிச்சம் தருகின்றன. அதேசமயம், அர்ப்பண மனப்பான்மையுடன் சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளின் பணிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
வெள்ள மீட்புப்பணியில் ஸ்வயம்சேவகர்கள்.

நல்லவேளை ஆர்.எஸ்.எஸ். சேவைகளை இருட்டடிப்பு செய்தாலும், ராணுவவீரர்களின் சேவையையேனும் நமது ஊடகங்கள் வெளிப்படுத்தினவே என்று நிம்மதி கொள்ளலாம் என்றால், அங்கும் வந்தது பிரச்னை. வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம் சரிவர இயங்கவில்லை என்று, அந்தப் பகுதிக்கே செல்லாமல்- தில்லி ஸ்டுடியோவுக்குள் இருந்தபடி- செய்தி வாசித்து சர்ச்சை கிளப்பி, ரேட்டிங் ஏற்றிக்கொண்டனர் சில காகிதப்புலிகள்.
இந்த வெள்ளச்சேதத்தைக் குறைத்ததில் ராணுவவீரர்களின் பணி அளப்பரியது. இப்பணியில் இதுவரை 9 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். வெள்ளம் கடுமையாக பாதித்த செப். 7 முதல் செப். 15 வரை, 2.26 லட்சம் மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இப்பணியில் சுமார் 30,000 வீரர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணியில் 86 மீட்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. 224 ராணுவப் படகுகளும் 148 தேசிய பேரிடர் மீட்புப் படகுகளும் 24 மணிநேரமும் அயர்வின்றி தொடர்ந்து ஒருவார காலத்திற்கு இயங்கின. வெள்ளம் பாதித்த மக்களுக்கு செப். 12ம் தேதி நிலவரப்படி, 5 லட்சம் குடிநீர் பாக்கெட்கள் வழங்கப்பட்டன. 1,054 டன் அளவுள்ள 3 லட்சம் உணவு பாக்கெட்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டன. குடிநீர் சுதிகரிப்பு மாத்திரைகள் மட்டுமே 13 டன் அளவிற்கு வழங்கப்பட்டன. இது ஒரு மாபெரும் மீட்புப்பணி.
மீட்புப்பணியில் பிராந்திய வாரியாக பாரபட்சம் காட்டப்படுவதாக, பிரிவினைவாதிகளான யாசின் மாலிக், கிலானி உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்த அதேநேரத்தில் தான், மீட்புப்படையில் 21,000 பேர் ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், 9,000 பேர் ஜம்மு பகுதியிலும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதை உரக்கச் சொல்ல வேண்டிய ஊடகங்கள் மௌனம் காத்தது ஏன்?
புவியியல் அமைப்பில் உள்ள சிக்கலான சூழலால், காஷ்மீரில் வீரர்கள் அதிகம் பணிபுரிய வேண்டியிருந்தது. இத்தனைக்கும் ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்பு மிக அதிகமாக இருந்தது ஜம்மு பிரந்தியத்தில் தான். அங்கு தான் அதிகபட்ச (200) உயிரிழப்பும் கிராமங்கள் அழிவும் நேரிட்டிருக்கின்றன. ஆனால், நமது தலைநகரச் செய்தியாளர்களோ ஸ்ரீநகர் (இங்கு இறப்பு எண்ணிக்கை 60 பேர்) மட்டுமே காஷ்மீர் என்பதுபோல படம் காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கேமராக்குழுவுக்கு சேணம் கட்டியது யார் என்று தெரியவில்லை.
india-pakistan-floodi_josh_650_091314053705
நிவாரணப் பொருள்களை ஹெலிகாப்டரில் விநியோகிக்கும் வீரர்கள்.

வெள்ளம் பாதித்தவுடன் சங்க ஸ்வயம்சேவகர்கள் வழக்கம் போல யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ராணுவ வீர்ர்கள் அணுக முடியாத் பகுதிகளில் கூட ஸ்வயம்சேவகர்கள் சேவைப் பணியில் ஈடுபட்டனர். சாலை சீரமைப்புப் பணிகளிலும் வீரர்களுக்கு அவர்கள் உதவினர். ஆனால் ஒரு குறைபாடு, அதைப் பதிவு செய்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இல்லை. அதற்கான கருவிகளுடன் சென்று சிறு பணியையும் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுக் காசாக்கும் தந்திரமும் அவர்களிடம் இல்லை. சேவை செய்வதை விட அதற்கு புகைப்பட  ‘போஸ்’ கொடுப்பதே முக்கியம் என்ற ஊடக அளவுகோல் அவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் தெரியவில்லை. இன்னமும் கூட, ஒவ்வொரு நொடி படக் காட்சியிலும் லாபம் கொழிக்கச் செய்யும் தொலைக்காட்சி தர்மம் குறித்து இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். ஊடகவாலாக்களுக்கோ, சென்டிமீட்டர் செய்தியையும் காசாக்கும் ஞானம் மட்டுமே வாய்த்திருக்கிறது.
உண்மையில் பாரபட்சம் காட்டுவது யார்? வெள்ளத்தில் உயிரை பற்றிய சிந்தையின்றி மீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவமா? பிரதிபலன் கருதாது மதம் கடந்து சேவை செய்த ஸ்வயம்சேவகர்களா? அல்லது பிழைப்புக்காக செய்தித் தணிக்கை செய்வதுடன், உளறல் செய்திகளையும் வாசிக்கும் நமது ஊடகங்களா?
பிரிவினைவாதிகளின் தூண்டுதலால் கல்லெறிந்த மக்களுக்கும் ராணுவம் உதவி செய்கிறது. ”துஷ்பிரசாரத்தால் ராணுவவீரர்கள் காயம் பட்டபோதும், “நாங்கள் ஜாதி, மதம், இனம், பிராந்தியம் என்ற எந்த அடிப்படையிலும் பாரபட்சம் காட்டாமல் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறோம். வெள்ளத்தில் சிக்கிய கடைசி மனிதரையும் மீட்கும் வரை எங்கள் பணி தொடரும்” என்று விளக்கம் அளித்துக் கொண்டே ராணுவம் அங்கு தொடர்ந்து பணிபுரிகிறது. இந்த ராணுவத்தைத் தான் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று முன்னொருசமயம் கூக்குரலிட்டார் அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா.
வெள்ளநகராகிவிட்டஸ்ரீநகர்.
வெள்ளநகராகிவிட்ட ஸ்ரீநகர்.

மோடி பிரதமரானால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிந்துவிடும் என்று முன்னர் சொன்ன அதே வாய் தானே? இப்போது ஜம்மு காஷ்மீர் வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடர் என்று அறிவித்து உடனடியாக ஆயிரம் கோடி நிதியுதவியும் அறிவித்திருக்கிறார் ஸ்வயம்சேவகரான பிரதமர் மோடி. ஜம்மு காஷ்மீர் மக்களைக் காக்க பெருமளவு நிதியுதவி தருமாறு அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு நெடுகிலும் இருந்து நிதியுதவி குவிகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் பொருளை ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். அதைத் தடுக்கவே, ராணுவம் மீதான கல்வீச்சை ஊக்குவிக்கிறார்கள் பிரிவினைவாதிகள்.
ஜம்மு காஷ்மீர் மீண்டு சீராக இன்னும் 6 மாதங்கள் ஆகலாம். கிட்டத்தட்ட ரூ. 60,000 கோடி மதிப்புக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உள்கட்டமைப்பில் பல்லாயிரம் கோடி மதிப்புக்கு அழிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஓமர் அப்துல்லா கூறியிருக்கிறார். இந்த இக்கட்டான நிலையில் சகோதர மக்களுக்கு உதவுவது நமது கடமை. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்.சின் சேவைப்பிரிவான சேவாபாரதி நாடு முழுவதும் அதற்கான நிதி சேகரிப்பைத் துவக்கி, தனது பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது.
வெள்ளத்தில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 1, 024 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4.7 டன் மருந்து செப். 14 வரை வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தின்போதும் மீட்புப்பணிகளில் சிறு குறைகள் இருக்கவே செய்யும். ஆனால், அந்தக் குறையைக் கூற ஒரு தகுதி வேண்டும்.
காஷ்மீர மக்களின் ஆபத்பாந்தவன் இந்திய ராணுவம் தான்.
காஷ்மீர மக்களின் ஆபத்பாந்தவன்
என்றும் இந்திய ராணுவம் தான்.

உண்மையில் ராணுவம் செய்த பணிகளில் இருந்த குறைபாடுகளுக்கு தகவல் பரிமாற்ற இடைவெளிகளே காரணம். காஷ்மீர் பள்ளத்தாக்கு போன்ற பயங்கரவாதிகள் சூழ்ந்த பகுதியில் திடீர் வெள்ளச்சேதத்தை எதிர்த்து எந்த ஆயுதமும் இன்றிப் போராடும் நமது வீரர்களை- தங்கள் முகாமே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனாலும் கவலையின்றி மீட்புப்பணியில் ஈடுபடும் நமது வீரர்களை- விமர்சிப்பதென்பது, இந்நேரத்தில் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாத பிரிவினைவாதிகளின் கீழ்த்தரமான பிரசாரத்திற்கே உதவும்.
உண்மையில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் இப்போது அரண்டுபோயிருக்கிறார்கள். இந்திய வீரர்களின் தன்னலமற்ற மீட்புப்பணியால் காக்கப்பட்ட லட்சக் கணக்கான காஷ்மீர மக்களிடம் மத்திய அரசு மீது நல்லெண்ணம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. பேரிடரின்போது ஓடி ஒளிந்த தங்களைப் பற்றி மக்களிடம் ஏற்பட்டுள்ள தவறான பிம்பத்தைச் சரிசெய்தாக வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா மீதான நல்லெண்ணம் மக்களிடம் ஏற்பட்டால் தங்கள் ‘பிழைப்பு’ என்னாவது என்ற கவலை அவர்களுக்கு. இதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டிய ஊடகங்கள் தங்கள் மனங்களில் புகுந்துள்ள சகதியை வெளியேற்ற வேண்டிய தருணம் இது.

நன்றி- தமிழ் ஹிந்து.

பெரம்பலூர்,: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 12ஆண்டுகளுக்குப்பிறகு கோயில் புனரமைப்புப் பணிகள் ரூ.2.50 கோடியில் நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது  விரைவில் பணிகள் தொடங்கப்படுமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றது.  சிலப்பதிகாரக்காவிய நாயகியான கண்ணகி, தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக்கண்டு கோபமடைந்து மதுரையை எரித்தபின் அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில், சிறுவாச்சூர் தலத்தில் அமைதி அடைந்தாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுர காளியம்மனே இந்தத் தலத்திற்கு விரும்பி வந்து அமர்ந்தாள் எனவும் கூறப்படுகிறது.
அத்தகைய சிறப்புமிக்க பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாகத் திகழும் சிறுவாச்சூர் கோயிலில் தங்கத்தேர் உள்ளது. திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், முக்கிய நாட்களிலும் கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு கோயில் பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் மற்றும் திருப்பணிகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 12ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கோயில் புனரமைப்புப்பணிகள் மற்றும் திருப்பணிகள் நடைபெற இந்துசமய அறநிலையத்துறை சார்பாக  அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் கூறுகையில்,சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 12ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்புப் பணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி கோயில் உட்புறத்தில் கிரானைட்  தலம்அமைக்கப்பட்டு, ராஜகோபுரத்திற்கு வர்ணங்கள் பூசப்பட உள்ளது. கோயில் பிரகாரத்தின் வெளிப்பகுதியிலுள்ள கொடுங்கைள் எனப்படும் மதில்கள் மராமத்து செய்யப்பட உள்ளது. குறிப்பாக இதுவரை ஒருவழிப்பாதையாக உள்ள சிறுவாச்சூர் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயிலின் கிழக்குப்பகுதியில் புதிதாக ஒருவாயில் அமைக்கப்பட உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ரூ2.50 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மற்றும் திருப்பணிகள் நடத்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், பூர்வாங்க அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கி நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை திருச்சி உதவிஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நிர்வாகஅலுவலர் சந்திரசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் என்றார்.

நன்றி-தினகரன்.

பெரம்பலூர்,:   குன் னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்த தங் கராசு மனைவி நல்லம் மாள்(63) என்ற மூதாட்டி  முதல்வரின் தனிப்பிரிவில் தான் வசிக்கும் கிராமத்தில் நீர் நிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தனது கிராமத்தின் நீர் ஆதா ரத்தை பாதுகாத்திட வேண் டும் என மனு அளித்துள் ளார். முதல்வருக்கு மூதா ட்டி அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஊராட்சி நன்னை கிராமத்தில்  மூன்று நீர் நிலைகள் இருந்து வந்தது. இந்நிலையில் நன்னை கிராமத்தை சேர்ந்த இரண்டு வீஏஓக்கள், 2 ஆசிரியர்கள் என 5 அரசு ஊழியர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் மூன்று நீர்நிலைகளை சுற்றி கடந்த 10 ஆண்டுகளாக சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் மற்றும் வீடு கட்டி பயன்படுத்தி வருகின்றனர். எனவே நீர் நிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பெரம்பலூர் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம்புகார் தெரிவித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் 2013 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி,  6 வார காலத்திற்குள் நன்னை கிராமத்திலுள்ள நீர் நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட பெரம்பலூர் கலெக்டர், குன்னம் தாசல்தார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார். ஆனாலும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை குறிப்பிட்டு மீண்டும் நீதிமன்றத்தில் மனு செய்தேன். இதனிடையே ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என நீதிமன்றத்தில் தடை கோரினர். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டபடி ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றிட உத்தரவிட்டார்.
அப்போதும் ஆக்கிரமிப்பை அகற்றிட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. . இந்த பிரச்சினையில் நான் தலையிட்டு போராடி வருவதால் எனக்கு ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனவே முதல்வர்  எனக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு,  நன்னை கிராமத்தில் நீர் நிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்கள் கிராமத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாத்திட வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.

-தினகரன்.

கோவை: லோட்டஸ் டிவியில் பத்மினி பிரகாஷ் (31) என்ற திருநங்கை, செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம், இத்துறையில் பணிபுரியும் முதல் திருநங்கை என்ற பெருமையை பத்மினி பிரகாஷ் பெற்றுள்ளார். 


கோவையை சேர்ந்த திருநங்கை பத்மினி பிரகாஷ். இவருக்கு தற்போது 31 வயதாகிறது. ஆணாக இருந்த இவர் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் போது தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை இவர் உணர்ந்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் கோவையை விட்டும் குடும்பத்தை விட்டும் பிரிந்து சென்ற அவர், நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கோவைக்கு திரும்பினார். 
அழகான தோற்றம் காரணமாக திருநங்கைகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது கோவையில் இருந்து செயல்படும் லோட்டஸ் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராக பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திரதினத்தன்று தனது முதல் செய்திவாசிப்பாளர் பணியை லோட்டஸ் டிவியில் தொடங்கியுள்ளார் பத்மினி பிரகாஷ். தினசரி இரவு 7மணி செய்திகளை வாசிக்கிறார் பத்மினி பிரகாஷ். செய்திவாசிப்பதோடு மட்டுமல்லாது தற்போது டிவி சீரியல் ஒன்றிலும் பத்மினி பிரகாஷ் நடித்து வருகிறார். 

பத்மினி பிரகாஷ்க்கு திருநங்கைகள் மட்டுமல்லாது ஏராளமானோர் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.
       

பெரம்பலூர் நகரில் கலெக்டர் தரேஸ் அஹமது உத்தரவின்பேரில் பிரதான சாலைகளில் போக்கு வரத்துக்கு இடையூறாகவும், சாலைவிரிவாக்கத்திற்காக தடையாக உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வரு கிறது. இதில் ஒரு கட்டமாக பெரம்பலூர் ரோவர் நூற் றாண்டு வளைவு முதல் எளம்பலூர் சாலை இணைப்பு வரை புதிதாக அமைக்கப் பட்டுள்ள இருவழிச்சாலையில் ஏறத்தாழ 60 குடிசைகள் முழுமையான ஆக்கிர மிப்பில் உள்ளதும், பல கட்டிடங்கள் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருந் ததும் நில அளவைத்துறையினர் நிலஅளவை செய்தபோது கண்டறியப்பட்டது.

நோட்டீசு

இதனைத்தொடர்ந்து ஆக் கிரமிப்பில் உள்ள கட்டி டங்கள், சுற்றுச் சுவர்களை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட வர்களுக்கு நோட்டீசு அனுப் பினர். ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடப்பகுதிகளில் கடந்த சில தினம் முன்பு அடை யாளம் இடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை உதவி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் தாசில்தார் முத்தையன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சீனிவாசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுருளியாண்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 பொக்ளின் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது.

கடும் எதிர்ப்பு

முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கட்டிட உரிமையா ளர்கள் தங்களது கட்டிடம் நில பதிவேட்டில் உள்ளதின் படி(எப்.எம்.பி. ) பொது இடம் விடப்பட்டு, பட்டா இடத்திலேயே கட்டிட சுற் றுச்சுவர் கட்டப்பட்டுள் ளது என்று கடும் எதிர்ப்பு தெரி வித்து வருவாய்த்துறை அதி காரிகளை முற்றுகை யிட்ட னர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கால அவகாசம்

மேலும் ரோவர் சாலையில் உள்ள குடிசைவாசிகள் தங் களது குடிசை வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50–க்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாரிகளை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத னைத்தொடர்ந்து ஆக்கிர மிப்பில் உள்ளவர்கள் தாங்க ளாகவே வீடு உடமை களை அகற்றிக் கொள்ளுமாறு கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டது.

உதவி கலெக்டர் பேட்டி

இதனைத்தொடர்ந்து உதவி கலெக்டர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறும் போது, ரோவர் இருவழிச் சாலையில் 108 கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன.

இவற்றில் 64 வீடுகள் முழுமையான ஆக்கிரமிப்பில் உள்ளன. மீதம் உள்ளவற்றில் கட்டிட சுற்றுச்சுவர் மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்தது அகற்றப்பட்டுள்ளது. 64 வீடுகளில் 34 வீடுகளில் குடியிருப்போர் தங்களுக்கு வேறு இடத்தில் சொந்தமாக கட்டிடம் வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றிக் கொள்ள ஒருவாரமும், வீடு இல்லாத 30 பேருக்கு ஆக்கிர மிப்பை அகற்றிட 2 வார கால அவகாசமும் கொடுக்கப் பட்டுள்ளது. வீடுஇல்லாத வர்களுக்கு எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் வீட்டுமனை வழங்கவும், பசுமை வீடு கட்டிக் கொடுக்கவும் வரு வாய்த்துறை மூலம் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித் தார்.



நன்றி- படஉதவி- வசந்த ஜீவா.

Friday 19 September 2014

செப்டம்பர் மாதம் 3ந் தேதி, இந்தியாவில் ஜிஹாத் தாக்குதல் நடத்துவதற்காக, அல்-காயிதா அமைப்பினர் ஒரு புதிய அமைப்பை உருவாக்க போவதாக அல்-காயிதாவின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார்.  தனது 55 நிமிட விடியோ காட்சியில், காய்தாட் அல் ஜிஹாத் என்ற பெயரில் ஓரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பினர் முதலில் இந்தியாவில் உள்ள பயங்கரவாதக் குழுக்களையும், இஸ்லாமிய இளைஞர்களையும் ஒன்றுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த பல ஆண்டுகளாகவே அல்-காயிதாவினர் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை செவ்வனே செய்து வருகிறார்கள் என்பது உளவு துறையினருக்கு நன்றாக தெரியும்.  நேரடியாக களத்தில் இறங்க வில்லை என்பதை தவிர,. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பினருக்கும்  அல்-காயிதாவிற்கும் நெருங்கிய தொடர்ப்பு இருப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் அல்-காயிதாவினர்,  பயங்கரவாத அமைப்புகளுக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்த அமைப்பு அல்-காயிதாவும் அதன்  தலைவரான ஒசமா பின்லேடன் என்பதும் உலகறிந்த உண்மையாகும்.
இந்நிலையில் அல்-காயிதா இம்மாதிரியான சி.டி.யை வெளியிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.  உலக அளவில் ஒரு சக்தி வாய்ந்த பயங்கரவாத இயக்கமாகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவான இயக்கமாகவும் தன்னை வளர்த்துக் கொண்ட அல்-காயிதா, ஒசாம பின் லேடனுக்கு பின் சற்றே மங்கி வரும் சூழ்நிலை ஏற்பட்டது.  இத் தருனத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் ஒரு புதிய அமைப்பு ஏற்பட்டு, சிரியா அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியதும், உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து இந்த அமைப்பிற்கு ஆட்கள் சேருவதும் அடிப்படையான காரணமாகும்.  கடந்த சில மாதங்களாகவே, இஸ்லாமியர்களின் கேடயமாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஐ.எஸ். ஐ.எஸ். ( இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் மற்றும் சிரியா )என்ற அமைப்பின் செயல்பாடுகளே, அல்-காயிதாவின் சி.டி வெளி வருவதற்கு காரணமாகும்.  அல்-காயிதா பலமாக இருந்த ஈராக், ஈரான், சிரியா மற்றும் அதை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ்.யின் வளர்ச்சியின் காரணமாக, அல்-காயிதா தனது கால்களை தெற்கு ஆசியாவின் மீத பதிய துவங்கியது.
அல்-காயிதா வெளியிட்டுள்ள சி.டியில் தெற்கு ஆசியாவில் தங்களது கால்களை பதிய குறிப்பாக பர்மா(மியான்மர்), அஸ்ஸாம், பங்களா தேஷ், குஜராத், காஷ்மீர் போன்ற பகுதிகளில் தங்களது அமைப்பை துவங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (the outfit would be working towards establishing bases in South Asia and would target places like Burma(Myanmar ),  Assam, Bangladesh, Gujarat and Kashmir) . இதன் மூலம் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அதாவது ஒசாமா பின்லேடன் மறைந்த பின்னரும், அல்-காயிதாவினர் தனது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இருக்கிறது என்பதாகும்.  எவ்வாறு லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவில் பலமாக உள்ளதே, அதே போல் பங்களா தேஷ் நாட்டிலும் பலமாக உள்ளது.  லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பும் வலுவாக உள்ளது.  இந்த இரண்டு அமைப்புகளும் அல்-காயிதாவுடன் தொடர்பு கொண்ட அமைப்பாகும்.
மேலும் 2011-ம் வருடம் மே மாதம் ஒசமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர், இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் நடந்த பயங்கரவாத தாக்குல்களில் அல்-காயிதாவின் பங்கு உள்ளது என அமெரிக்காவின் பென்டகான் தெரிவித்தது. தற்போது வெளியான  சி.டியில் உள்ள மற்றெரு முக்கியமான செய்தி, தாக்குதல் நடத்துவதற்கு தற்கொலை படையை நிறுவ வேண்டும் என்பதாகும்.  இதற்காக இந்தியாவில்  தடை செய்யப்பட்ட  இந்தியன் முஜாஹிதீன் மற்றும் சிமி யின் உறுப்பினர்களை இனம் கண்டு, அவர்கள் மூலமாக தற்கொலை படையை ஏற்படுத்த வேண்டும்.  இவ்வாறு உருவாக்கப்பட்ட தற்கொலை படையின் முதல் பணி காஷ்மீர் மாநிலத்தில் துவங்க வேண்டும்.  2015-ல் காஷ்மீர் சட்ட மன்ற தேர்த்ல் நடப்பதற்கு முன்பாகவே இந்த பணி நிறைவடைய வேண்டும் என்பது தான் அல்காயிதா போட்டுள்ள திட்டம் என உளவுத் துறையினர் தெரிவித்தார்கள் .  மேலும் அந்த சி.டியில் உள்ள வேறு ஒரு செய்தி, பர்மா, காஷ்மீர், பங்களா தேஷ், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் நமது சகோதர்ர்கள், இவர்களை அல்-காயிதா மறக்கவில்லை, இவர்களும் அல்-காயிதாவை மறக்கவில்லை.  இதை போலவே இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் நமது சகோதர்ர்கள் என்பதை மறக்க கூடாது ”( ஆதாரம் 8.9.2014ந் தேதி ஏசியன் ஏஜ் என்ற பத்திரிக்கையில் வெளி வந்த தகவல்)
Tribal militias from Pakistan (in photo) are prime candidates for the Ghazwa-e-Hind  (Photo courtesy: dailymail.co.uk)
Tribal militias from Pakistan (in photo) are prime candidates for the Ghazwa-e-Hind (Photo courtesy: dailymail.co.uk)
இந்தியாவில் தங்களது அமைப்பான காய்தாட் அல் ஜிகாத் அமைப்பை ஏற்படுத்த 2013க்கு முன்பாக இருந்தே திட்டமிட்ட ரீதியில் காய்களை நகர்த்தியுள்ளது.  2013 ஜீன் மாதம் பேசிய பேச்சின் சி.டி. ஜீலை மாதம் 23ந் தேதி வெளியிடப்பட்டது.  அதில்  சிரியாவில் நடக்கும் புனித போருக்கு, இந்திய இஸ்லாமியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அல்-காயிதாவின் இரண்டாம் கட்ட தலைவரான மௌலான அசீம் உமர் என்பவர் கூறியதாக செய்தி வெளியாகியது.  இந்த சி.டியின் தலைப்பு ” உங்கள் பகுதியில் ஏன் இன்னும் சூறவளி ஏற்படவில்லை ” என்பதாகும்.  (Why there is no strom in your ocean?  )  இந்த அறிவிப்பின் காரணமாக மூன்று இஸ்லாமியர்கள் சிரியாவில் நடக்கும் புனித போருக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.  பெங்களுரில் பிறந்து சௌதியில் வாழும் கபீல் அகமது ( Kafeel Ahmed), வதோராவில் பிறந்து லன்டனில் வாழும் அபு மூசா அல் ஹிந்த், ( Abu Musa al- Hindi)சிமி இயக்கத்தை சார்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர் முகமது நியாஸ் அப்துல் ரஷீத்(Mohmmad Niaz Abdul Rashid) எனபவன்.  இவர்களை போல் இன்னும் பலர் அல்-காயிதா கொடுத்த அழைப்பு ஏற்ப சிரியாவில் நடக்கும் புனித போரில் கலந்து கொண்டாக கூறினாலும் முறையான தகவல்கள் கிடையாது.
இந்தியாவில் அல்-காயிதாவின் அமைப்பு துவங்கப்படவில்லை என்பது உண்மையாகும்.  ஆனால், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளார்கள்.  இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான, லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, ஜெய்-இ-முகமது போன்ற அமைப்புகளும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்குகின்ற பிரிவினைவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  இதற்கு முக்கியமான காரணம், அல்-காயிதாவின் அடிப்படை கொள்கையாகும்.  அல்-காயிதா என்பது ஒரு பிரந்திய ராணுவமல்ல- இது ஒரு சர்வதேச ராணுவமாக இருக்க வேண்டும், என்ற அடிப்படை கொள்கையும், ஒவ்வொரு தேசத்திலும் நமக்கொரு தளம் இருக்க வேண்டும்.  அர்பணிப்பு உணர்வுள்ள இளைஞர்களைத் தேடிக் கண்டு பிடித்து முதலில் சித்தாந்தப் பயிற்சி அளிக்க வேண்டும்.  அதன் பின்னர் அவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும்.   என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அல்-காயிதாவினர் இயங்கினார்கள்.  இதன் காரணமாகவே உலகில் உள்ள பல வேறு நாடுகளில் செயல்பட்டு கொண்டு இருந்த இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி என்றும், ஆயுத பயிற்சி என்றும், வழங்கி தங்களது நெருக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
இந்தியாவில் அல்-காயிதாவின் செயல்பாடுகள்
2008-ம் ஆண்டு ஜீன் மாதம் காஷ்மீரிலிருந்து வெளி வரும் கரண்ட் நியுஸ் சர்வீஸ்( Current News Service ) என்ற செய்தி பத்திரிக்கையில் அல்-காயிதாவின் இந்திய தலைமை பொறுப்பு வகிக்கும் அபு அப்துல் ரஹூமான் அல் அன்ஸாரி (Abu Abdul Rehman Al Ansari  ) என்பவன் கொடுத்த அறிக்கையை , அவனுக்கு பதிலாக,  அபு அபிரஹிம் அல் அஸிம் ( Abu Abrahim Al Asim )என்பவனின் உரை அடங்கிய ஒரு சி.டி. வெளியிடப்பட்டுள்ளது.  இந்த உரையை ஸ்ரீநகரில் உள்ள கௌவ் காடல் (Gaw Kadal )என்ற மசூதியில் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த சி.டியில் உள்ள வாசகம்,  அமெரிக்கா இந்தியாவில் அதிநவீன ஆயுதங்களை வழங்கி இஸ்லாமியர்களை அடக்க திட்டமிட்டுள்ளது.  இந்த உறவு இஸ்லாமியர்களுக்கு எதிரானது.   இதற்காக அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் மேற்கித்திய நாடுகளுடன் இந்தியா ஒரு புதிய உறவு துவங்க இருக்கிறது.  இந்த உறவின் காரணமாக காஷ்மீர் பகுதி பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, இஸ்லாமியர்களை அடக்கவும், அல்லது அவர்களை கொன்று விடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை எதிர்க்க அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்றுப்பட வேண்டும்.  இதற்காக இந்தியாவின் மீது புனித போர் தொடுக்கப்பட்டுள்ளது.  காஷ்மீர் தான் புனித போருக்கு நுழைவாயில்,என அந்த அறிக்கையில் குறிப்பாக வெளியிடப்பட்டுள்ள சி.டியில் குரல் பதியப் பட்டுள்ளது.
tolerant Islam - jihad-women

அல்-காயிதாவின் தலைமயிடத்திலிருந்து இந்தயாவில் இஸ்லாத்தின் துரோகிகள் என்ற பெயரில் 2008லே மீன்டும் வெளியிடப்பட்ட சி.டியில், ஹூரியத் கான்பிரன்ஸ் தலைவர்களான சயீத் அலி ஷா ஜிலானி, மீர்வாஸ் மௌலி உமர் ஃபரூக், அப்துல் கானி பட் மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் உட்பட்டவர்கள் இஸ்லாத்தின் துரோகிகள் என்றும் குறிப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் என்று ஜம்மு காஷ்மீர் முதலவராக் இருந்த குலாம் நபி ஆஸாத், பி.டி.பியின் தலைவர் முப்தி முகமது சயீத், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா.  இவர்களைப் போலவே பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களான ஹிஜ்புல் முஜாஹிதின் அமைப்பின் சயீத் சலாஹூதின் எனவும்,  இவன் ஹூரியத்  கான்பிரன்ஸ் அமைப்பினரை காப்பாற்றும் காரியத்தில் ஈடுபடுவதால் இவனும் இஸ்லாத்தின் துரோகி என பட்டியிலிட்டு இவர்களுக்கு எதிராகவும் புனித போர் துவங்கப்படும் என விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் பயிற்சி அளிப்பது, பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. என்பதும், பெருவாரியான பயங்கரவாத அமைப்பினருக்கு, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.   நேரடியாக கொடுக்கின்ற பயிற்சி என்பது ஐ.எஸ்.ஐ.யை தவிர  வேறு சில அமைப்புகள் மூலமாக கொடுக்கப்படுகிறது. .  பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மூலமாக நேரிடியாக சில இடங்களில் பயங்கரவாதிகளுக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.   மறைமுகமாக கொடுக்கின்ற பயிற்சி,  இந்தியாவின் எல்லைப் பகுதிகளில்  அளிக்கப்படுகிறது.  அவ்வாறு பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்,  போக், வடக்கு பகுதியான ஜில்ஜிட், பலுஸ்தான் , நார்த் வெஸ்ட் ஃப்ரான்டியர் புராவின்ஸ் போன்ற பகுதிகளாகும்.  இவ்வாறு பயிற்சி அளிப்பதற்காகவே இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் பாகிஸ்தானில் செயல்படுகின்றன.  இந்த அமைப்புகளில் உள்ளவர்கள் அல்-காயிதாவினால் நன்கு  பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிட தக்கது.
1993லிருந்து பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும்  அல்-காயிதாவிற்கு ஆதரவாகவே தங்களது தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.  1993ல் பாகிஸ்தான், அல்-காயிதாவிற்கு ஆதரவாகவும், அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படுத்த ஹர்கத்-உல்-முஜாஹூதின், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, அந்த அமைப்பினர் காஷ்மீர் பகுதியில் ஊடுருவ அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.  இதன் காரணமாக இந்த அமைப்புகளை சார்ந்தவர்கள் இந்தியாவின் காஷ்மீர் உட்பட மற்ற பகுதிகளுக்கும் தங்களது செயல்பாடுகளை நடத்த இடம் பெயர்ந்தார்கள்.  .
islam-jihad-shia-sunni-castes

2001-ம் வருடம் செப்டம்பர் மாதம் 11ந் தேதிக்கு முன்பு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் ஆப்கான் எல்லையில் உள்ள சர்வதேச இஸ்லாமிய முன்னணி என்ற அமைப்பாகும். அல்-காயிதாவினால் உருவாக்கப்பட்ட சர்வ தேச இஸ்லாமிய முன்னணி   உலகில் பல்வேறு நாடுகளில் இயங்கும்  பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்ப்பு கொண்டவர்கள், அவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள்.   இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் அனைத்தும் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டவை, குறிப்பாக ஐ.எஸ்.ஐ மட்டுமே இந்த காரியங்களில் ஈடுபடுகிறது.  இவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்புகளான லஷ்கர்-.-.தொய்பா, ஹர்கத்-உல்-முஜாஹூதின், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஜெய்-இ – முகமது, லஷ்கர்-இ-ஜான்வி ( Lashkar-e-Jhangvi  ) ஆகிய ஐந்து அமைப்புகளும் அல்-காயிதாவின் சர்வதேச இஸ்லாமிய முன்னணியின் ஓர் அங்கமாகும்.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள  ஐந்து அமைப்புகளில், ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கும் அமைப்பான லஷ்கர்-இ-ஜான்வி என்பது மட்டும் பாகிஸ்தானில் இயங்குகிறது, மற்ற நான்கு அமைப்புகளும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அமைப்பாகும்.
பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் நிர்பந்த்த்திற்கு உட்பட்டு இந்த ஐந்து அமைப்புகளுக்கு  தடை விதித்தது.  .  இந்த தடையானது, பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதி, பாகிஸ்தானின் வடக்கு பகுதி, மாலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி களில் தடை கிடையாது.  விதிக்கப்ட்ட தடைகளில் ஹிஜ்புல் முஜாஹூதின் மற்றும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஏன்எனில்.  இந்த இரு அமைப்புகளும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் உருவாக்கப்பட்டது, அல்-காயிதாவிற்கு மிகவும் நெருக்கமான அமைப்பாகும்.
பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹூதின் என்ற இரண்டு அமைப்புகளும் இந்தியாவில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் அல்-காயிதா எவ்வாறு செயல்பட்டது  என்பதை பார்க்க வேண்டும்.  மேலும் இந்த இரண்டு அமைப்புகளும் எந்ந எந்த அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டன என்பதும், இதன் மூலம் வேறு சில அமைப்புகளும் துவங்கப்பட்டன, இவ்வாறு வேறு பெயர்களில் துவங்கப்பட்ட அமைப்பிற்கும் அல்-காயிதாவிற்கும் எவ்வாறு தொடர்ப்பு ஏற்பட்டது என்பதையும் கான வேண்டும்.
இந்தியன் முஜாஹிதீன் மீது தேசிய புலனாய்வு பிரிவின் தாக்கல் செய்த 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மகாராஷ்டரா மற்றும் கோவாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளை தாக்கும் நோக்கத்தில், ராஜஸ்தானில் புதிதாக இஸ்லாமியர்களை சேர்க்கும் பொறுப்பை அல்-காயிதாவினர் யாசின் பட்கலுக்கு உத்திரவிட்டதாக தெரிவித்தார்கள்.  இந்த தகவல்கள் 2500 இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்களை  ஆய்வு செய்த்ததில் கிடைத்தாக குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.  மேலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு ஆயுத பயிற்சி, தற்கொலை பயிற்சி கற்று தர அல்-காயிதாவினர் ஒப்புக் கொண்டதாகவும், இதற்காக ரியாஸ் பட்கல், ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைக்கு சென்று அல்-காயிதாவின் பொறுப்பாளர்களை சந்தித்த்தாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1996-ல் பின் லேடன் விடுத்த ஜிகாத்தில், அமெரிக்காவின் மீது யுத்தம் துவங்குவதாக அறிவித்தவுடன், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுகிறார்கள் இது மேற்கித்திய நாடுகளின் மீது புனித போர் தொடுக்க தக்க தருணம் என தெரிவித்துள்ளான்.( ஆதாரம் 23.8.2006ந் தேதி அல் க்யத் யட-அரபி என்ற இதழ்)  1996க்கு முன்பகவே இந்தியாவிற்கு வருகை தந்த கலீத் ஷேக் முகமது (அல்-காயிதாவின் கமான்டர்)என்பவன், இஸ்ரேலிய தூதரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் இதற்கு முறையான திட்டம் வகுக்க வெண்டும் என்ற கருத்தை வெளியிட்டான். 1990க்கு பின்னர் அல்-காயிதா மூலம் வெளியிடப்பட்ட பல்வேறு அறிக்கைகள், சி.டி.கள் அனைத்திலும், காஷ்மீர் மோதல் சம்பந்தமான கருத்தை தெரிவிக்க மறுக்கவில்லை.  ஆனாலும  கூட தனியாக அல்-காயிதா அமைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புனருடன் இனைந்து  இந்தியாவில் தாக்குதல்களை நடத்தியது அல்-காயிதா அமைப்பாகும்.
2001 மற்றும் 2002-ல் நடந்த சில சம்பவங்கள் மூலமாகவும் அல்-காயிதா பங்கு பற்றிய செய்திகள் வெளிவர துவங்கின.  2001-ம் வருடம் ஜீன் மாதம் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் நடத்த தாக்குதல் சம்பந்தமாக சூடான் நாட்டைச் சார்ந்த  அப் அல் ரவ் ஹெவாஸ் ( Abd al-Raouf Hawash) என்பவன் கைது செய்யப்பட்டான்.  இது அல்-காயிதா நேரிடையாக நடத்திய தாக்குதல்.  2002-ல் வெளிநாட்டு பயனிகளை கொல்வதற்கு ஹர்கத்-உல்-முஜாஹிதீனும், அல்காயிதாவும்  இனைந்து நடத்தியது.  2006-ல்  மத்திய அரசுக்கு உளவுத் துறையினர் அளித்த அறிக்கையில் விமானத்தை கடத்தியதிலும், தாஜ்மஹால் மீது தாக்குதல் நடத்துவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் அல்-காயிதாவினர்.
pakistan_jihad_fund

    2006-ம் வருடம் ஜீலை மாதம் 7ந் தேதி மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன்,  அல்-காயிதாவின் பொறுப்பாளராக தன்னை அறிவித்துக் கொண்ட அபு அல் ஹதீத் என்பவன் ஸ்ரீநகரில் இஸ்லாமியர்களுக்கு விடுத்த செய்தி, இஸ்லாமியர்கள் சுதந்திரம் பெறவும், விடுதலை பெறவும் இந்தியாவுடன் யுத்தம் செய்ய வேண்டும் என்ற கூறினான்.  இந்த அறிவிப்பை செய்த போதே இந்தியாவில் அல்-காயிதாவின் ஒரு பிரிவு துவக்கப்படுவதாக்வும், அதன்  தலைவராக அபு அப்துல் ரகுமான் அல் அன்சாரி என்பவன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தான் ( ஆதாரம் The Tribune July 15 ) 2006-ல் திருச்சி விமான நிலையத்தை தகர்க்க 10 நபர்கள் கொண்ட அல்-காயிதாவின் ஊடுருவியுள்ளதாகவும் , இது போல் சென்னை, மதுரை, கோவை மற்றும் கேரளத்தில் இவ்வாறு அல்-காயிதாவினர் ஊடுருவியதாக எ.ப்.பி.ஐ. தகவல்கள் வெளியாகின.
உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள், இநதியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு, இஸ்லாமிய தொண்டு அமைப்புகள் மூலம் தாங்கள் பெறும் நிதியிலிருந்து குறிப்பிட்ட சதவீத நிதி வழங்கியது ஆய்வின் போது தெரியவந்தது.  துவக்க காலங்களில் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிதியானது அல்கயிதா அமைப்பின் மூலமாகவே மற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக  தெரிவிக்கிறார்கள்.  ஓசமா பின்லேடன் உயிருடன் இருந்த வரை, அவர் மூலமாகவே நிதியானது அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.
        சென்ற ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு வந்த ரூ10 கோடி பொறுமான போதை மருந்து பிடிக்கப்பட்டது.   JK02F-0217 என்ற பதிவு பெற்ற சரக்கு லாரி இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சலமாபாத் மற்றும் அமன்சேது என்ற இடத்தில் நடத்திய சோதனையில் பிடிப்பட்டது.  இந்த லாரியின் ஓட்டுநர் அப்துல் அஹத் கனி (Abdul Ahad Ganie   ) என்பவனிடம் நடத்திய விசாரனையில் போதை பொருள்கள் எங்கிருந்து அனுப்பட்டது, எந்த பயங்கரவாத இயக்கத்திற்கு இதில் தொடர்ப்பு இருக்கின்றது  என்ற விவரங்கள் தெரியவந்தன  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு அல்-காயிதா மூலம் நிதி கிடைக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.
நஸிர் அலி அல்-காயிதா இயக்கத்தை சார்ந்தவன்,  ஜீப் டிரைவர், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வடக்கு பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தவர்களில் இவனும் ஒருவன்.  என்னுடன் மூன்று அரபு பயங்கரவாதிகளுடன் காஷ்மீர் பகுதியில் ஊடுருவியதாக தெரிவித்தான். கடந்த சில மாதங்களாகவே நூற்றுக் கணக்கான அல்-காயிதாவினர் காஷ்மீரில் ஊடுருவியதாகவும் தெரிவித்தான். இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதலை பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீர் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காகவே, அல்-காயிதாவினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவே காஷ்மீரில் ஊடுருவினார்கள் என்ற தகவலும் வெளி வரத் தொடங்கியது.  .இதற்கு முன்பகவே, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உதவியுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் அல்-காயிதாவினர் தஞ்சம் புகுந்த்தாகவும், பின்னர் தக்க சமயத்தில் காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினார்கள் என்றும் தெரிவித்தான்.  ( ஆதாரம் CS Monitor  2002   )
 ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி ( Harkat-ul-jihad-al-islami)
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற அமைப்பு அல்காயிதாவின் ஒரு அங்கம்.  அல்-காயிதா உருவாக்கிய சர்வதேச இஸ்லாமிய முன்னணியின் ஒரு பிரிவாகும்.  இந்த அமைப்பினர் 1991லிருந்து காஷ்மீரில் தங்களது ஊடுருவலை துவக்கி சிற்சில தாக்குதல்களை  நடத்த தொடங்கினார்கள். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவன் இலியாஸ் காஷ்மீரி என்பவன்.  இவன் அல்-காயிதாவின் கமாண்டர்.  2002 நிலவரப்படி இந்திய ராணுவத்துடன் மோதியதில் 650 ஹூஜி அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.  இதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப், சிந்து ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளை சார்ந்தவர்களும் உண்டு.  நவம்பர் 11ந் தேதி தாக்குதலுக்கு பின்னர் பங்களா தேஷ் அமைப்புனருடன் இணைந்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.  இவர்களின் தாக்குதலுக்கு பின்னால் அல்-காயிதாவின் கமாண்டர் இலியாஸ் காஷ்மீரியின் பங்கும் உள்ளது.
இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் அல்-காயிதாவின் நேரடி தொடர்பு கிடையாது என பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும்,  வேறு வழிகளில் அல்-காயிதாவின் தொடர்பு உள்ளது என்பதை இவர்கள் மறுப்பதில்லை.  22.1.2002ந் தேதி கெல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல், 21.10.2005ந் தேதி ஹைதராபாத் நகரில் சிறப்பு விசாரனை குழுவின் காவல் அலுவலகத்தின் மீது நடத்திய தாக்குதலும், 2007 பிப்ரவரி மாதம் சம்ஜெதா எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்திய குண்டு வெடி தாக்குதலும், ஹைதராபாத் நகரில் லும்பினி எனுமிடத்தில் 25.5.2007-ல் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்திலும், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பின் பங்கு உண்டு.  இதன் மூலம் இந்த குண்டு வெடிப்பின் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி இலியாஸ் காஷ்மீரின் பங்கு உள்ளது என்பது நன்கு தெரிந்த்து.  ஆகவே இந்தியாவில் நடந்த பல தாக்குதல்களில் அல்-காயிதாவின் தொடர்ப்பு இருப்பது தெரிய வருகிறது.
jihadi-training

       ஆனால் இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கும், அல்-காயிதாவிற்கும் தொடர்ப்பு இருக்கின்றது என்பது  புனாவில் உள்ள ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பிற்கு பின்னர் முழு உண்மையும் வெளியே தெரிய வந்தது.
ஒரு புறம் லஷ்கர்-இ-தொய்பா என்றாலும், மறு புறம் இந்தியன் முஜாஹிதீன் அல்-காயிதாவுடன் நெருங்கிய தொடர்ப்பு வைத்திருந்தார்கள்.  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் பொறுப்பாளரான அசத்துல்லா அக்தர் ( Asadullah Akhtar alias Haddi  )என்கின்ற ஹத்தி நீதி மன்றத்தில் கிரிமினல் குற்றவியல் சட்டம் 164 வது பிரிவின் படி கொடுத்த வாக்குமூலத்தில், இந்தியன் முஜாஹிதீன் அல்-காயிதாவுடன் எல்லா வழிகளிலும் இனைந்து இருந்தது என்றும், அல்-காயிதா மூலமாகவே ஆயுத பயிற்சி, தற்கொலை பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தான்.  2012 டிசம்பர் மாதம் யாசின் பட்கலுடன் ஆன்லைனில் சாட் செய்த போது,  ஹைதராபாத் நகரில் நடத்த வேண்டிய தாக்குதல் சம்பந்தமாக விவாதித்தாகவும் தெரிவித்தான்.
இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன்  அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்கு அல்-காயிதா உதவிகளை செய்தது.   தேசிய புலனாய்வு அமைப்பினர் இடைமறித்து கேட்ட உரையாடலில், ரியஸ் கூறும் போது,தற்போது அல்-காயிதாவின் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவித்தான்.   இஸ்ரேலியர்களை தாக்குவது என்பது தலையாய கடமை என்பதை அல்-காயிதா தெரிவித்த தகவல் என்றும் தெரிவித்தான்.  இதனிடையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் காங்கிரஸ் தலைவர்களை தாக்கியது பற்றி அல்-காயிதாவினர் மகிழ்சி தெரிவித்தாகவும் அந்த உரையாடலில் உள்ளது. ( ஆதராம் 24.2.2014ந் தேதி டைலி  மெயல் பத்திரிக்கை)
அஸ்ஸாமில் உள்ள ஆபத்து
லஷகர்-இ-தொய்பாவினால், அஸ்ஸாம் மாநிலத்தில் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு முக்கியமான காரணம், அல்-காயிதா வெளியிட்ட சி.டியில் குறிப்பிட்டுள்ளது போல், அஸ்ஸாமில் லஷ்கர் அமைப்பினர் வலுவாக உள்ளார்கள்.  அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லைப் பகுதியான பங்களா தேஷ் நாட்டில் உள்ள கோக்ஸ் பஜார் பகுதியில் லஷ்கர் அமைப்பினருக்கு மூன்று பயிற்சி மையங்கள் அமைத்து கொடுத்தவர்கள் அல்-காயிதாவினர்.  இந்த பயிற்சி முகாம்களில் இளைஞர்களுக்கு ஜிகாத் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இங்கு பயிற்சி பெறும் இஸ்லாமியர்கள் ரோகின்யா இனத்தைச் சார்ந்தவர்கள்.  இவர்களுடன் அஸ்ஸாம் பகுதியில் உள்ள ரோகின்யா இஸ்லாமிய இளைஞர்களும் பயிற்சி பெறுகிறார்க்ள.  2012-ல் போடே பிரதேச பகுதி மாவட்டங்களில்  நடந்த குறைந்த அழுத்தம் கொண்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில், போடே தீவிரவாதிகளின் செயலாக இருக்கும் என புலனாய்வு துறையினர் கருத்து தெரிவித்தார்கள்.  முழுமையான விசாரனையின் போதுதான், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்ற சிமி அமைப்பினரின் செயல் என தெரியவந்த்து.
அஸ்ஸாமில் நடைபெறும் பயங்கரவாத செயல்களில் உல்பாவின் பங்கு முக்கியமானது.  அஸ்ஸாம் மாநிலத்தை தனி நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களையும், பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்திய இயக்கம் உல்பா என்பதாகும்.  உல்பா அமைப்பின் பல்வேறு மட்ட தலைவர்கள் பயிற்சி பெற்ற இடம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானின் எல்லைப் பகுதிகளாகும்.   இவர்களுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யும், அல்-காயிதாவும். உல்பாவின் தலைவன் பரூவா 1992 முதல் அடிக்கடி காரச்சிக்கு சென்று வருபவர்,.  1996-ல் பரூவா காரச்சியில் ஒசாமா பின்லேடனை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சில் அஸ்ஸாம் தனி நாடாக மாற்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   மேலும் சர்வதேச இஸ்லாமிய முன்னணியின் சகோதர அமைப்பான இன்டர்நேஷனல் ஜிகாத் கவுன்சில், தாரிக்-உல்-ஜிகாத், ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி அமைப்புகளின் உதவியும், பயிற்சியும் பெற்ற அமைப்பு உல்பாவாகும்.
ஆகவே அல்-காயிதா வெளியிட்ட சி.டியில் குறிப்பிட்டுள்ளப்படி, அஸ்ஸாம் மாநிலத்தின் மீது இவர்களுக்கு ஒரு கண் எப்போதும் உண்டு என்பதும், ஏற்கனவே பங்களா தேஷ் நாட்டிலிருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள்  அஸ்ஸாமில் ஊடுருவியிருப்பதும், இவர்களுக்கு அல்-காயிதா அமைப்பை ஏற்படுத்த எவ்வித தடங்களும் ஏற்படாது.  பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ உல்பா பயங்கரவாதிகளுக்கு வெளிநாடு செல்ல போலியான பாஸ்போர்டுகளை ஏற்பாடு செய்து தந்தது.
எனவே அல்-காயிதா இந்தியாவில் தனது கால்களை பதிய துவங்கியது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் மீன்டும் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாகும்.  ஆட்சியில் மோடி அரசு துவக்கத்திலேயே இதை வேறோடு பிடுங்கி எறிய வேண்டும்.

நன்றி-தமிழ் இந்து.
மூலம்:  Reality Check India  வலைப்பதிவில் வெளியான  கட்டுரை Love Jihad is about airgapping two different legal regimes
தமிழில்: ச.திருமலை
கடவுள் படைத்த இந்த உலகில் லவ் ஜிஹாத் என்றால் என்ன?
எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு முஸ்லீம் அல்லாதவருடன் ஈடுபடும் காதல் லவ் ஜிஹாத் என்று அழைக்கப் படுகிறது.
ஒரு ஹிந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் பையனுக்கும் நிகழும் காதலை லவ் ஜிஹாத் என்று அழைப்பதற்குக் கீழ்க்கண்ட கூடுதல் அம்சங்களும் கருதப் படுகின்றன.
1) ஏமாற்றும் நோக்கம்
2) பெண் வழக்கமாக அதிகம் படித்தவளாகவோ அல்லது நகரப் பகுதியில் வளர்ந்த பெண்ணாகவோ இல்லாமல் இருத்தல்
3) காதலின் மூலமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுதல்
மேற் சொன்ன காரணிகள் தவிர இதில் ஒரு சதித் திட்டம் இருப்பதாகவும் கருதப் படுகிறது. அதாவது மதத் தலைவர்களின் குழுக்கள் வேலை வெட்டி இல்லாமல் திரியும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு பணம், பயிற்சி மற்றும் பிற சலுகைகளை அளித்து சந்தேகம் கொள்ளாத அப்பாவி இந்துப் பெண்களைக் காதல் செய்து கவர்ந்து வருமாறு திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்பது. அப்படி காதல் செய்யப் படும் இந்து மற்றும் கிறிஸ்துவப் பெண்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற வைப்பதே அந்த சதித் திட்டம் என்று குற்றம் சாட்டப் படுகிறது.
இரண்டு இணையான சட்டங்களும் திருமண ஒப்பந்தமும்:
இந்தியாவில் ஒரு தனித்துவமான தனிநபர் சட்டம் இருக்கிறது. அதன் படி முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தின் படியும் இந்துக்கள் இந்து திருமண சட்டப் படியும் தத்தம் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர விசேஷ திருமண சட்டம் ஒன்றும் இருக்கிறது. அதாவது பதிவு திருமணம். அதன் படி எந்த இரு மதங்களிலும் மணமக்கள் திருமணம் செய்து கொண்டு பதிவு திருமணச் சட்டப்படி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வது. கேரள கிறிஸ்துவர்களும் கூட லவ் ஜிஹாதுக்கு தங்கள் பெண்களும் பாதிக்கப் படுவதாகப் புகார் கூறினாலும் கூட எளிமையான புரிதலுக்காக நான் கிறிஸ்துவ சீக்கிய மதங்களை இந்த உதாரணத்தில் இருந்து சற்று விலக்க்கிக் கொள்கிறேன்.
எந்தவிதமான சட்டப் படி திருமணத்தைப் பதிவு செய்திருந்தாலும் திருமணம் என்பது மணமக்களுக்கு இடையேயான ஒரு வித சட்டபூர்வமான ஒப்பந்தம் என்பதாகவே கருதப் படுகிறது. அது ஒன்றே அதை இருவர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் இருந்து வேறு படுத்துகிறது. மேலும் ஒரு திருமண ஒப்பந்தமானது கணவன் மனைவி இருவருக்கும் சில உரிமைகளையும் பாதுகாப்பையும் கடமைகளையும் வலியுறுத்துகிறது.
இந்து திருமணச் சட்டப் படி உரிமைகளும் கடமைகளும் அனேகமாக கணவன் மனைவி இருவருக்குமே பொதுவானவை. ஆனால் ஷரியா சட்டப் படி இருவருக்குமான விதிகள் பொதுவானவை அல்ல. ஷரியா சட்டப் படி ஒரு பெண்ணின் உரிமைகள் வெகுவாக குறைக்கப் படுகின்றன. மதசார்பின்மை என்னும் அரசு என்ற பெயரில் இஸ்லாமியர்களை சமரசப் படுத்தும் நோக்கத்தில் இந்த இரு வேறு விதமான திருமணச் சட்டங்கள் இந்தியாவில் நிலவுகின்றன. இந்தியாவின் முஸ்லீம்களைத் திருப்திப் படுத்த வேண்டிய இடியாப்பச் சிக்கலுக்காக இந்தியாவின் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஏனைய பிற சட்டங்கள் போலவே இதையும் சட்டமாக்கியுள்ளார்கள். ஆனால் எதுவுமே இலவசமாக வருவதில்லை. எல்லாவற்றிற்கும் உண்டான விளைவுகள் இருக்கவே செய்யும்.
islamic-to-torture-a-hindu-infidel-women
தடுமாறும் நீதி அமைப்புகள்:
இப்படி இரு வேறு விதமான திருமண சட்டங்கள் நிலவும் நிலையில், ஒரு சட்டத்தின் படி (ஷரியா) பெண்ணின் உரிமைகள் அதிரடியாகக் குறைக்கப் பட்டுள்ள நிலையில், பெண்கள் கட்டாயப் படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாறும் திருமணங்களின் விளைவுகளும் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. பெரும்பாலான லவ் ஜிஹாத் திருமணங்களில் இந்துப் பெண்களே அதிக அளவில் மதம் மாறி இஸ்லாமிய இளைஞர்களைத் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இந்து ஆணைத் திருமணம் செய்யும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இந்துவாக மணம் மாறிக் கொண்டு இஸ்லாமை விட அதிக அளவிலான உரிமைகளைப் பெறும் வாய்ப்பு ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது.  அத்தகைய திருமணங்கள்  நடைமுறையில் அனேகமாக அதிகம் நடப்பதில்லை (ஒரு சில மிகக் குறைவான விதிவிலக்குகள் இருக்கலாம் – தமிழ் நடிகை குஷ்பு, தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் பாத்திமா பாபு போல).
ஆகவே லவ் ஜிஹாத் திருமணங்களில் பொதுவாக எப்பொழுதுமே இந்துப் பெண்ணே வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றம் செய்யப் பட்டு, அவள் அதுநாள் வரையிலும் அனுபவித்து வந்த பல்வேறு உரிமைகள் பறிக்கப் படுவதே நடைமுறையில் நடக்கிறது. அந்தத் திருமணங்கள் விசேஷ பதிவுத் திருமணச் சட்டத்தின் படி பதிவு செய்யப் படுவதற்குப் பதிலாக ஷரியா சட்டப் படியே வலுக்கட்டாயமாக நடத்தப் படுகின்றன. அதன் படி மதம் மாறுவது கட்டாயமாகின்றது. அப்படி மதம் மாறாவிட்டால் ஷரியா சட்டப் படி அந்தத் திருமணம் செல்லுபடியாகாது. அந்தத் திருமணத்தை ஒரு இஸ்லாமிய மத குருமார் நடத்தித் தர மாட்டார். மணக்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தால் ஒழிய அது இஸ்லாமிய நிக்காஹாக கருதப் படாது. ஆகவே மணப் பெண் முதலில் மதம் மாறிய பின்னரே ஷரியா சட்டப் படியான திருமணம் நடைபெறுகிறது. இதையே பதிவு திருமணச் சட்டப் படி செய்திருந்தால் மணப் பெண் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆக இங்கு திருமணத்தின் முக்கிய நோக்கமே மதம் மாற்றுவது என்பதாகிறது. அதனாலேயே இது லவ் ஜிஹாத் என்று வழங்கப் படுகிறது.
எனது பார்வையில் இந்த பிரச்சினை:
ஒரு இந்துப் பெண் ஷரியா சட்டப் படி திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவள் தன் அடிப்படை உரிமைகளைத் தானே இழந்து விடுகிறாள். ஆக அவள் சம்மதத்துடனேயே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் கூட அது உண்மையாகவே விவரம் தெரிந்து செய்து கொண்ட திருமணமாகக் கருதப் படாது. அவளை அறியாமலேயே முழு விபரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே தன் அடிப்படை உரிமைகளை இந்த ஷரியா திருமணம் மூலமாக இழந்து விடுகிறாள் என்பதே உண்மை நிலவரம்.
விபரம் தெரிந்தும், ஷரியா திருமணத்தில் உள்ள விபரீதத்தை உணர்ந்தும், சம்மதிப்பது குறித்து:
love-jihad


ஷரியா திருமணம் செய்து கொள்ளும் இந்து பெண்கள் அனைவருமே வழக்கமாக தங்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ன என்பதை அறிந்து கொண்ட விபரமறிந்த பெண்களாக இருப்பதில்லை. தங்களது உரிமைகள் குறித்த விபரமின்மை, அறியாமையில் இருக்கும் பெண்களே இந்த ஷரியா திருமணத்தைச் செய்து கொள்கிறார்கள். என்னிடம் இது குறித்து எந்த ஆதாரமும் கிடையாது. இருந்தாலும் இப்படி ஷரியா சட்டப் படி திருமணம் செய்து கொள்ளும் இந்த இளம் இந்துப் பெண்கள் எல்லாம் இது முஸ்லீம்களின் முறைப்படி செய்யப் படும் ஒரு திருமணச் சடங்கு மட்டுமே மற்றபடி தங்கள் அடிப்படை உரிமைகள் எதையும் தாங்கள் இழப்பதில்லை என்று தாங்களாகவே விபரம் தெரியாமல் எண்ணிக் கொள்கிறார்கள் என்று யூகம் செய்கிறேன். அவர்கள் முதலில் உண்மை தெரியாமல் திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். அப்பொழுது அவளது காதலன் ஏற்கனவே திருமணமானவன் என்பதோ அல்லது இன்னொரு திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பவன் என்பதோ அதில் ஷரியா சட்டப்படி எந்தத் தவறும் கிடையாது என்பதையோ இந்த விபரம் புரியாத அப்பாவி இளம் இந்துப் பெண்கள் உணர்வதில்லை. கர்ப்பமாதலோ அல்லது பிள்ளை பெற்றுக் கொள்வதோ பிரச்சினையை இன்னும் சிக்கல் ஆக்கவே செய்கிறது. ஏனென்றால் விவாகரத்துச் செய்வதோ அல்லது திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவதோ இந்த ஷரியா சட்டப்படி அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த வகையான பரிதாபகரமான திருமணங்கள் அனைத்திலும் இதுவே பொதுவான சரடாக, பொதுவான பிரச்சினையாக அமைகிறது. ஆகவே லவ் ஜிஹாத்தில் உள்ள முக்கியமான ஏமாற்று என்னவென்றால் பெண்கள் அவர்கள் அடிப்படை உரிமைகளை இழப்பார்கள் என்ற உண்மை தெரியாமல் ஷரியா திருமணம் செய்து கொள்வதே ஆகும்.
பரிந்துரை:
கலப்பு மதத் திருமணங்களைத் தடை செய்வது என்பது முட்டாள்த்தனமான ஒரு காரியமாக அமைந்து விடும். நான் அதை எந்தவிதத்திலும் மறைமுகமாகக் கூடப் பரிந்துரைக்க விரும்பவில்லை. ஆனால் ஷரியா திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் தங்கள் உரிமைகளை இழப்பது குறித்து சில பரிந்துரைகளைச் செய்ய விரும்புகிறேன்.
ஷரியா சட்டப் படி முஸ்லீமாக மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் அனைவருக்கும் தாங்கள் எந்தவிதமான உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலமாக குறைந்த பட்சம் அவர்களுக்கு தாங்கள் தங்களது அடிப்படை உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்ற குறைந்த பட்ச விபரமாவது தெரிய வரும். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது அவர்களது உரிமை/விருப்பம்.
hindu_women_converting_to_islam


இந்த உரிமை இழப்புப் படிவம் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் அவசியம். கிராமப்புறப் பெண்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். கிராமப்புற இந்துப் பெண்கள் தாங்கள் இழக்கப் போகும் உரிமைகளை முழுப் புரிதலுடன் அறிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். உதாரணமாக,
அ) இந்தத் திருமணத்தின் மூலமாக உன் அடிப்படை உரிமைகளை இழப்பாய். அது உனக்குத் தெரியுமா? நீ நிச்சயமாக அவற்றை இழக்க விரும்புகிறாயா? ஆம்/இல்லை
ஆ) உன் கணவன் உன் சம்மந்தம் இன்றியே வேறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இந்தச் சட்டம் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா? ஆம்/இல்லை
இ) நீ உன் கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமைகளை இந்தச் சட்டத்தின் படி திருமணம் செய்து கொண்டாய் இழப்பாய். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? ஆம்/இல்லை
என்பன போன்ற எளிய புரிதலைத் தரும் கேள்விகள் அந்த உரிமை இழப்பு ஒப்புதல் படிவத்தில் இருத்தல் வேண்டும்.
பல இந்துப் பெண்கள் முஸ்லீம் ஆண்களை மணந்து கொண்டு சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள். அவர்களது உரிமைகள் பற்றிய புரிதல்களுடன் திருமணம் செய்து அன்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காக எழுதப் பட்டது அல்ல இந்தப் பதிவு.
ஒரு சில பெண்கள் ஷரியா திருமணத்திற்குப் பிறகும் சந்தோஷமாகவும் உரிமைகளை இழக்காமலும் வாழ்கிறார்கள் என்பதற்காக, ஏராளமான விபரம் அறியாத நகர்ப்புற மற்றும் கிராமத்துப் பெண்கள் விபரம் தெரியாமல் தங்கள் உரிமைகளை இழப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு இந்தத் திருமணம் மூலமாக தாங்கள் என்ன இழக்கப் போகிறோம் என்ற விபரங்களைச் சொல்லியே ஆக வேண்டும் . தங்கள் வாழ்வில் எடுக்கப் போகும் முக்கியமான முடிவான திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் தகவல்கள் அளிக்கப் பட வேண்டும். அந்தத் தகவல்கள் பரவலாகவும் எளிமையாகவும் அனைத்து இந்துப் பெண்களும் தெரிந்து கொள்ளும் விதத்தில் பரப்பரப் பட வேண்டும்.
( Idea of India  குழுமத்திலிருந்து உங்களுக்காக வழங்கப் படும் இன்னொரு பதிவு இது). 
இவ பேரு ரூமி நாத். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் பர்க்ஹோல தொகுதி.
இவள் ஹிந்து.  திருமணமானவள். கணவன் குழந்தை உண்டு. கடந்த வருடம் இஸ்லாமியன் ஜாக்கி ஜாகீர் என்பவனுடன் தொடர்பு முகநூல் மூலம் ஏற்பட்டு முதல் கணவன் விவாகரத்து பண்ணும் முன் கல்யாணம் செய்து கொண்டால் அந்த இஸ்லாமியனை.
இவர்களது கல்யாணத்துக்கு உறுதுணையாய் இருந்தது அஸ்ஸாம் அமைச்சர் சித்திக் அஹ்மத். இவள் இஸ்லாமிய மதத்துக்கு தன்னை மாற்றி கொண்டு தன பெயரை ராபியா சுல்தானா இட்டுகொண்டாள். பல எதிர்ப்புகள் இங்கே இருந்ததால் பங்களாதேஷ் சென்று விட்டாள்.
அந்த இஸ்லாமியன் இவள் மூலம் பல பண உதவியை பெற்று கொண்டு இவள் மூலமாக ஹிந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு இவள் அதற்கு உதவி இருக்கிறாள். பின்னர் அவன் இவளை துன்புறுத்த ஆரம்பித்தான் கொடூரமாக.  கடைசியில் 15 லட்சம் ஒரு கார் கேட்டு கொலை செய்ய முயற்சிக்கிறான்..
rumi_nath_love_jihad_victim
இப்பொழுது மீண்டும் இவள் அருணாச்சல் போலீசிடம் தஞ்சம் புகுந்து அவன் மீது குற்ரம் சுமத்தி அவன் ஜெயிலில் இருக்கிறான்.
அந்த இஸ்லாமியன் ஜாகிர் இதற்கு அவன் கூறிய பதில் அனைத்தும் குரான் படி தான் செய்தேன் என்றான். முடிவில் தெரிந்தது அங்கே நடந்தது லவ் ஜிஹாத்.
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால்..ஒரு சாதாரண குடும்பம் இன்று எண்ணற்ற பெண்கள் லவ் ஜிஹாத் வலையில் சிக்கி சீரழிந்து கொண்டு இருகிறார்கள்..இது அதிகாரபூர்வமான உண்மை..கட்டாய மதமாற்றம் மற்றும் பெண் விற்பனை அடிமைகளாக அனுப்ப படுகிறார்கள் இத மூலம்…காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் இந்த அவலம் இருக்கிறது…இதை வெளிப்படையா சொல்ல தயக்கம் காட்டுகிறது அரசு..
இதை வெளிப்படையாக தேசிய அபாயமாக அறிவிக்க அரசும் ஊடகங்களும் முன் வரவேண்டும்..மத சார்பின்மைக்காக வாயை பொத்தி கொண்டு இருப்பது..இன்னும் பல பேர் வாழ்க்கைகள் துளைத்து விடும்…எத்தனை பேர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்பதை வெளியே கொண்டு வரவேண்டும்..விழிப்புணர்வு கொடுக்கவேண்டும்.
- ரத்தினகுமார் வழக்கறிஞர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது

நன்றி-தமிழ் இந்து.

சென்னை, செப். 19–
அம்பத்தூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
சுரேஷ்குமாருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஒரு குழந்தை 6–ம் வகுப்பும், இன்னொரு குழந்தை 4–வது வகுப்பும் படித்து வருகின்றனர். வீட்டு வாடகை மாதம் ரூ.6 ஆயிரம் கொடுத்து வந்தனர்.
சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட பிறகு குடும்பமே தவிப்புக்குள்ளானது. வேலூர் நாராயணிபீடம் நிதி உதவி செய்ததோடு இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்து முன்னணியினர் சுரேஷ்குமார் குடும்பத்துக்கு சொந்த வீடு வாங்கி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்காக நிதி திரட்டி வருகிறார்கள்.
போதிய நிதி இல்லாததால் தற்காலிகமாக குத்தகைக்கு வீடு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நிதி ஆதாரம் கிடைத்ததும் சொந்த வீடு வாங்கப்படும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


-மாலைமலர்.

Wednesday 17 September 2014


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய 16–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இன்று  (வியாழக் கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 16 வது வார்டு அதாவது இனாம் அகரம், திருவாலந்துறை, அயன்பேரையூர் ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்த சின்னம்மாள் கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இந்த பதவிக்கு இடைத்தேர்தல் இன்று  ( வியாழக்கிழமை ) நடக்கிறது.
இதில் அ.தி.மு.க சார்பில் கண்ணகிகுணசேகரன் இரட்டை இலை சின்னத்திலும், தேசிய ஜனநாயக கூட்டனியில் ஐ.ஜே.கே சார்பில் மலையம்மாள் தென்னை மரம் சின்னத்திலும் நேரடியாக போட்டியிடுகிறார்கள். இதனால் இரு கட்சியினரும் கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
நேற்று (செவ்வாய் கிழமை) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஐ.ஜே.கே வேட்பாளர் மலையம்மாளுக்கு ஆதரவு கேட்டு தே.மு.தி.க மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், ஒன்றிய செயலாளர் சிவா.ஐயப்பன், ஐ.ஜே.கே மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் அன்புதுரை, மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

-தினமணி,
           சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு 15.09.2014 அன்று மீண்டும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இப்படி மிரட்டல் கடிதம் வருவது வாடிக்கையாகிவிட்டது.
கடிதத்தில் இந்து மத பிரமுகர்களை தண்டிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அக்கடிதத்தில் பாகிஸ்தான் கொடியை வரைந்துள்ளனர்.
 hm2
hm3
இதை வெறும் ஒரு மிரட்டல் கடிதம் தான் என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் இப்படி மிரட்டல் கடிதம் வருவதும் பின்னர் இந்து மதத் தலைவர்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தமிழகம் ஜிகாதி பயங்கரவாத கூடாரமாக மாறி வருவதையே காட்டுகிறது.
இந்த கடிதத்தின் அடிப்படையின் இந்து முன்னணியின் மாநகர செயலாளர் திரு. S.S. முருகேசன் அவர்கள் புகார் கொடுத்துள்ளார்.
hm1
தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால் காஷ்மீராக தமிழ்நாடு மாறும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்து காவல்துறையும் மத்திய, மாநில அரசுகளிம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே திருநகர் குடியிருப்பு பகுதியில் மின்கசிவின் கானமாக தீ விபத்து 4 குடிசை வீடுகள் உள்பட 7 வீடுகள் முற்றிலும் எரிந்தது.10 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்.

திருநகரில் புதன்கிழமை மாலை சின்னையன் மகன் தங்கபாண்டியின் குடிசை வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து, தீ பரவியதில் அருகிலிருந்த தங்கபாண்டி மகன் காளை, ஞானசேகரன் மகன் தம்புராஜ், அங்கமுத்து மகன்கள் மாரியப்பன், பழனி, செல்வக்குமார் மனைவி கற்பகம், மரியன் மனைவி அன்பு உள்ளிட்ட 8 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

இதில், ரொக்கம், நகை, டி.வி, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



படஉதவி- வசந்த ஜீவா, புதியதலைமுறை துரை.

Monday 15 September 2014


பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பருவம் தப்பிப் பெய்தது. வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி யது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துபோய் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தஆண்டு குறிப்பிட்ட பருவங்களில் மழைபெய்தாலாவது இழப்பை ஈடுகட்டும் விதமாக வேளாண் சாகுபடியைத் தொடரலாம் என விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்த ஆண்டு ஆடிப்பட்டத்திற்கு பெய்ய வேண்டிய மழையும் பொய்த்து, குறைவாக ஆவணியில்தான் பெய்துள்ளது. புரட்டாசி பட்டத்திற்கு அதுவும் போதாது. குறிப்பாக சிறுவாச்சூர் உள்ளிட்ட பல கிராமங்களில் போதுமான மழை பெய்யாமல் விவசாயிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மழைவேண்டி வருண பகவானை வேண்டியும் 3 ஆண்டுகளாக மழை பெய்யாத காரணத்தால் பொதுமக்கள் கொடும்பாவி ஒன்றினை தெருத்தெருவாக இழுத்துச்சென்று துன்புறுத்தினாலாவது, அந்தக் கொடும்பாவி வருணபகவானிடம் கெஞ்சிக்கேட்டு மழையை பெற்றுத்தந்துவிடும் என முடிவு செய்தனர். இதன்படி நேற்று அவ்வூர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 10அடி நீளத்திற்கு கொடும்பாவி உருவத்தைத் தயாரித்தனர்.
கருப்புத் துணியை கொடும்பாவிக்கு அணிவித்து கயிறுகட்டி, கொடும்பாவியின் கால்முட்டிகள் தேயத்தேய தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். வழியெங்கும் பெண் களும், ஆண்களும் மார்பில் அடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்தனர். புகழ் பெற்ற மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் செல்லும் வீதிகளில் 3 முறை இழுத்துச்சென்ற கொடும்பாவியை, மேளதாளத்துடன் ஊருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் பாலத்திற்குத் தெற்கே ஓடையில் போட்டு எரித்தனர். அங்கேயும் ஒப்பாரி வைத்தனர்.
சித்ரவதை செய்வதுபோல் நடத்தப்பட்ட இச்சடங்கு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, வருணபகவான் எங்கள் கிராமத்தை 3 ஆண்டுகளாக வஞ்சித்துவிட்டார். நாங்கள் கேட்டு பயனற்றுப் போனதால், கொடும்பாவி உருவத்தை தெருத்தெருவாக கால்முட்டிகள் தேய இழுத்துச்சென்றால், துன்பம் தாங்க முடியாமல் சிறுவாச்சூருக்கு மழையை கொடுத்துவிடுமாறு வருண பகவானிடம் இந்தக் கொடும் பாவி கேட்டு, எப்படியாவது மழையை பெற்றுத்தரும் என நம்புவதாகத் தெரிவித்தனர். இதில் பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 100க்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர்.
இச்சம்பவம் நடந்த அதேநேரத்தில் அதிசயமாக நேற்று பெரம்பலூர் மற்றும் சிறுவாச்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு நல்லமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்ய கொடும்பாவி வருண பகவானி டம் கெஞ்சிக்கேட்கும் என சிறுவாச்சூர் மக்களின் நம்பிக்கையாய் உள்ளது.


செய்தி மற்றும் பட உதவி- வசந்த ஜீவா.