Friday 5 September 2014


வ.களத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதே பள்ளியில் படித்த திரு ரஹ்மான் ஆசிரியரின் மகள் சபியா பீவிக்கு நினைவு விழா மேடை திறக்கபட்டது ,அந்த மாணவி  ஒரு வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் இறந்து விட்டது அனைவருக்கும் தெரியும்.,

அரசு பள்ளியில் நினைவு மேடை வைக்கும் அளவுக்கு அந்த மாணவி  அப்படி என்ன சாதனை செய்தார் என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம் ,
 அவரைப் பற்றி பள்ளியில் கேட்டால் முதல் மதிப்பெண் வாங்குபவர்,அமைதியான பெண்,பேச்சு போட்டியில் நன்றாக பேசுபவர் இப்படியெல்லாம் கூறுகிறார்கள்.,

இப்படி பட்ட குணங்களில் இருப்பது நமக்கு ஒன்றும் ஆச்சிரியத்தை வரவைக்க வில்லையே... சாதனையாகவும் தெரியவில்லையே, நன்றாக படிக்கும் மாணவி  என்ற எண்ணம் தோன்றும் அவ்வளவுதான் ,

இதுபோன்று கடந்த சிலவருடங்களாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இறந்துள்ளது அனைவரும் அறிந்தது. அப்படி இருக்க இந்த பெண்ணுக்கு மட்டும் நினைவு மேடை வைப்பது ஏன் என்று தெரியவில்லை? இதை பற்றி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும் அப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிந்திக்காதது ஏன் என்று புரியவில்லை ? 


இந்த நினைவு மண்டப கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது இது தொடர்பாக வ.களத்தூர் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது கல்வெட்டில் மட்டுமே மாணவியின் பெயர் பதிக்கப்படும் எனக்கூறினார். மதரீதியாக பதற்றமான வ.களத்தூரில் அரசு பள்ளியில் மத ரீதியான செயல்கள் நடைபெறாது எனவும் உறுதி அளித்த நிலையில், இஸ்லாமிய சின்னம் இல்லாமல் அமைக்கப்பட்ட மசூதி போல் தோற்றமளிக்கும் விதத்தில் மண்டபம்  கட்டப்பட்டிருக்கிறது. 

இந்த சிறப்பு(..?) மிகுந்த நினைவு மண்டபத்தை இஸ்லாமியரான பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவரை வைத்து திறந்திருப்பதும் , மண்டபம் அமைக்க அரசு பணத்தை செலவு செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதித்திருப்பதும் உள்நோக்கம் கொண்டதோ எனத்தோன்றுகிறது.

வருங்கலங்களின் இதை போன்று வருத்திற்குரிய நிகழ்வு நடைபெற்றால் நினைவு மேடை அமைக்க படுமா ? அப்படியே அமைத்து வந்தால் இப்பள்ளியில் வகுப்பறையை விட நினைவு அறை அதிகமாகி விடும் அப்பொழுது அப்பள்ளி இடுகாடு(சுடுகாடு) போன்று கட்சியளிக்கவும் நேரலாம்...

சபியா பீவி சாலை சரியில்லாத காரணத்தால் தான் மிதி வண்டியில் செல்லும்போது பேருந்தில் தவறி விழுந்து இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்,அப்படி இருக்கும் நிலையில் அப்பள்ளி முன் மிக மோசமான நிலையில் மேடு பள்ளமாக இருக்கும் சாலையை சரி செய்து தனது மகளுக்கு ஏற்பட்ட நிலை இனி யார்க்கும் ஏற்பட கூடாது என்று எண்ணி அச்சாலையை முறையாக சரிசெய்திருந்தால் திரு ரஹ்மான்(சபியா பீவியின் தந்தை ) அவர்கள் அப்பள்ளிக்கு நல்ல ஆசிரியராக மட்டும் அல்ல சபியா பீவிக்கு நல்ல தந்தையாகவும் திகழ்ந்திருப்பர், அனால் அவர் அப்படி செய்யவில்லையே....


இதே போன்று சிலவருடங்களுக்கு முன் அதே பள்ளியில் சிறப்பான ஆசிரியரில் ஒருவராக பணியாற்றிய மதிப்புக்குரிய திருமதி மீனாம்பாள் அவர்கள் சாலை விபத்தில் இறந்தது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அவருக்கு யாரும் நினைவு மேடை கட்டவும் , நினைவு கல் வைக்கவும் முன் வரவில்லை, ஆதலால் இது மத ரீதியான தொடர்பாக  இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது

இப்படி மத ரீதியாக பிளவுபட்டுக்கிடக்கும் வ.களத்தூரில் , அரசு பள்ளியில் தனது பெயரையும் தனது மகளின் பெயரையும் எழுதி மசூதிபோல் நினைவு விழா மேடை அமைப்பது தவறான முன்னுதாரணம் ,இதை ஏன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் செயல்பட்டாரா அல்லது உள்நோக்கத்துடன் செயல்பட்டாரா   என்பது தெரியவில்லை?


 செய்தி மற்றும் பட உதவி- vannarampoondi kalathur

Thursday 4 September 2014


துபாய்: அல்-குவைதா அமைப்பின் கிளையை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம் என அந்த அமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல் குவைதா ஆதரவு பயங்கரவாதியான, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈராக்,சிரியா ஆகிய நாடுகளில் போரை துவக்கி நடத்தி வருகின்றனர்.
தங்களுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்தும், பதிலடி கொடுக்க ஜேம்ஸ் போலே, ஸ்டீபன் சாட்லாப் ஆகிய இரண்டு அமெரிக்க பத்திரிகையாளர்களை கொடூரமாக தலையை துண்டித்து கொன்றதுடன் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய துணைக்கண்டத்தில் கிளை

அல்-குவைதா அமைப்பின் தலைவராக உள்ளவர் அய்மன் அல்- ஜவாகிரி. பின்லாடனின் வலது கரமான இவர். கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசமாபின்லாடன் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜவாகிரி பேச்சின் வீடியோ வெளியானது. 55 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஜவாகிரி பேசியதாவது,

ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட எங்கள் அமைப்பினை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம். தவிர பர்மா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் , இந்தியாவில் அசாம், குஜராத் , காஷ்மீர் ஆகிய இடங்களிலும் கிளையை நிறுவுவோம். ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள அல்குவைதா பிரிவிற்கு ஆசிம் உமர் தலைவராக உள்ளார்.
அதே போன்று இந்திய துணைக்கண்டத்தில் குவைதா -அல்-ஜிகாதி என்ற பெயரில் கிளையை ஏற்படுத்துவோம். இவ்வாறு அந்த வீடியோவில் ஜவாகிரி பேசியுள்ளார்.வீடியோ உண்மையானது தான்: அல்குவைதா வௌியிட்டுள்ள மிரட்டல் வீடியோவின் நம்பக்தன்மை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து உளவுத்துறை நடத்திய ஆய்வில், 55 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ ஆன்லைன் மூலம் வௌியிடப்பட்டுள்ளது என்றும், ஆப்கன் எல்லையில் இது படமாக்கப்பட்டுள்ளது என்றும், வீடியோ உண்மையானது தான் என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஐ.பி, மற்றும் ரா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் அலர்ட்: அல்குவைதா வீடியோ தொடர்பாக நாடு முழுவதும் உளவுத்துறை எ்ச்சரிக்கை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 

-தினமலர்.

Wednesday 3 September 2014

கேரளாவில் சிபிஎம் கட்சியின் தலைவர்களில் ஒருவரின் மகன், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை நல்ல செய்தி
என்று பதிவு செய்திருந்ததால் பெருத்த சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சைக்குரிய பதிவு குறித்து அவருக்கு மிரட்டல் எழவே உடனடியாக பதிவை
அழித்துவிட்டார்.எனினும் ”ஸ்கீரின்சாட்” எடுக்கப்பட்டு இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக பரப்பபட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கதிரூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). என்ற ஆர்.எஸ். எஸ். இயக்க தொண்டர். மர்ம கும்பலால்
படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கண்ணனூரில் படுகொலை
செய்யப்படும் 2-வது இந்து அமைப்பு தொண்டர் மனோஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மனோஜ் கொல்லப்பட்டது குறித்து தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள கேரள சிபிஎம் கட்சியின் தலைவர் பி.ஜெயராஜனின்
மகன் ஜெயின் ராஜ், “இந்த நல்ல செய்தியை கேட்பதற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன். மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்” என்று
தெரிவித்துள்ளார். இந்த பதிவு நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடப்பட்டுள்ளது. பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இதற்கு ஆயிரம் லைக்களுக்கு மேல் கிடைத்துள்ளது.
மேலும், கடந்த 14 வருடங்களுக்கு முன் தனது தந்தை ஒரு குழுவால் தாக்கப்பட்டார் என்றும் அதில் மனோஜும் ஒருவர் என தனது பதிவை
நியாயப்படுத்தும் வகையில் ஜெயின் மற்றொரு பதிவும் இட்டுள்ளார்.
ஜெயின் ராஜ்ஜின் மேற்கண்ட கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஜெயின் ராஜ் தனது பதிவை நீக்கிவிட்டார். எனினும் குறைந்த
நேரத்தில் இந்த பதிவு பேஸ்புக்கில் ஸ்கீரின் சாட் எடுக்கப்பட்டு மிகவும் பிரபலமாக்கப்பட்டுவிட்டது. ஜெயின் ராஜின் இந்த பதிவுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ”கொலை ஒன்றை பற்றி பேஸ்புக்கில் பதிவிடும் நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரின் இந்த பதிவு கொலைக்கான திட்டத்தில் அவரது பங்களிப்பு இருப்பது போல் காட்டுகிறது. கொலைகாரர்களை பாராட்டுவது சகிக்க முடியாத செயல்” என்று பாரதீய ஜனதாவின் கேரள மாநில தலைவர் வி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
http://www.dailythanthi.com/News/India/2014/09/03144402/On-Facebook-Politicians-Son-Calls-Kerala-RSS-Activists.vpf

-
இந்து முன்னணி தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொது விழாவாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது. இந்து சமுதாய ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய நம்பிக்கையை இதன் மூலம் ஏற்படுத்தி வருகிறது. ஆன்மீக விழிப்புணர்வு மூலம் தேசிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் விநாயகர் சதுர்த்தி விழாத் திருவிழாவானது, இன்று தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு திருச்சியில் புதிதாக வைக்கப்படதென 30 விநாயகர்களை காவல்துறை எடுத்துச் சென்று திருமண மண்டபத்தில் வைத்திருந்தது, பெரும் போராட்டம், உண்ணாவிரதம் என இந்து முன்னணியினரும் பொதுமக்களும் வீதிக்கு வந்தபின் காவல்துறை இறங்கி வந்தது.
திருநெல்வேலியில் விசர்ஜன ஊர்வலத்தில் காவல்துறை அதிகாரிகளின் சிலரின் தூண்டுதலால் தடியடி, பலப்பிரயோகம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். அறுபதிற்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். காயமடைந்தோர், கைது செய்யப்பட்டோரை இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் டாக்டர் அரசுராஜா, மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் ஆகியோர் சென்று பார்க்க மருத்துவமனை வந்தபோது, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல்.
சென்னையில் பாடி சுரேஷ் கொலையின் போதும் காவல்துறை இப்படித்தான் நடந்துகொண்டது. பொறுப்பற்றதனத்தாலோ, உள்நோக்கத்தோடு செயல்படுவதாலோ சில காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் யார் என அறிந்து, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழக அரசு நீக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகளை அரசு கண்காணிக்க வேண்டும். வேற்று மதத்தினர் ஆர்ப்பாட்டங்கள், அரசியல்வாதிகளின் போராட்டங்களின் போது நடக்கும் அராஜகங்களை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், இந்துக்களின் விழாக்களில் அமைதியாக செல்லும் மக்கள் மீது தங்களது பலத்தையும், அடக்குமுறைகளையும் ஏவுவது தமிழகத்தின் கண்ணியத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளின் உள்நோக்கத்தையும் புரிந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Tuesday 2 September 2014


பாக்தாத்: ஈராக்கில் மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளர் ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். வீடியோவில் இக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், அமெரிக்க பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே என்பவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும், 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்படும் முன், அந்த அமெரிக்க பத்திரிகையாளர், மேற்காசியாவில் அமெரிக்காவின் செயல்பாட்டை கடுமையாக கண்டித்துள்ளார்.


சிறைபிடிப்பு :

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் பல நகரங்களை கைப்பற்றி, அந்த பகுதியை, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள, அல் குவைதா பயங்கர வாத அமைப்பிலிருந்து பிரிந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிரியா மற்றும் ஈராக் அரசு படைகளுக்கு எதிராக, கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2012 நவம்பரில், சிரியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற,அமெரிக்க, 'பிரிலேன்ஸ்' பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே என்பவரை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சிறை பிடித்தனர். இவர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கொடூரமாக தலை துண்டித்து கொல்லப்பட்டார். இது இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பத்திரிகையாளர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும் காட்சிகள், இணையதளங்களில் வெளியாகியுள்ளன. 'அமெரிக்காவுக்கு ஒரு செய்தி' என்ற தலைப்பில், அந்த படுகொலை வீடியோ வெளியானது. அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.


இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ஸ்டோலோப் (31) என்ற பிரிலேன்ஸ் பத்திரிகையாளர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துருக்கி,சிரியா எல்லையில் செய்தி சேகரிக்க சென்ற போது ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டார். நேற்று இணையதளத்தில் அந்த பத்திரிகையாளர் தலை துண்டிக்கப்பட்டுகொல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அமெரிக்காவில் கிரிமினல் குற்றவாளிகளுக்கு அணிவிக்கப்படும் ஆரஞ்ச் கலர் சீருடை அணிவிக்கப்பட்டு கேமிரா முன் நிறுத்தப்பட்டு ஜேம்ஸ் போலே கொல்லப்பட்டது போன்றே இவரும் கொடூரமாக கொல்லப்பட்டது போன்றே இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

-தினமலர்.

Monday 1 September 2014


இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியானது.
இந்த வாழ்த்து செய்தியை பார்த்த தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பலர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து கருத்தும் வெளியிட்டனர்.
இந்நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்று கூறப்பட்டது. இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து இயக்கங்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:–
இந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல் நாகரீகம் கருதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்தை பொறுத்துக் கொள்ளாமல் வாபஸ் பெற்றது இந்துக்கள் மீதான வன்மமான போக்கையே காட்டுகிறது.
இதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர். இந்த விரோத மனப்பான்மையை உணர்ந்து தி.மு.க.வில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:–
எந்த ஒரு இனம், மொழி, மதத்தை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது நாகரீக சமுதாயத்தில் ஆரோக்கியமான சிறப்பான விசயம்.
விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்பட்ட வாழ்த்தை திரும்பப் பெற்றதன் மூலம் தி.மு.க. இந்து எதிர்ப்பில் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்தனை தலைவர்களின் வீடுகளிலும் பூஜை அறையும் உள்ளது. சாமி படங்களும் உள்ளது. கோவில்களில் அன்னதானம் முதல் அத்தனை திருப்பணிகளையும் செய்கிறார்கள். அப்படி இருந்தும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்ப பெற்றது, ‘இத்தனை நாட்களாக மக்களிடம் காட்டி வந்த இந்து வெறுப்பு உணர்வை தொடர்ந்து கடைபிடிப்பதாக வெளிக்காட்டும் முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.


விநாயகர் சிலை ஊர்வலம் (மாதிரி)
 குன்னம்,: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தில் விநா யகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டிற் கு பின்னர் நேற்று சிலையை காவிரியில் கரைத்திட விழா கமிட்டி குழுவினர் மற்றும் பொது மக்கள் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குன்னம் வட்டாட்சியர் மணிவேல், மங்களமேடு டிஎஸ்பி கோ விந்தராசு, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம், ஆர்ஐ இளவரசன், விஏஓ மனோக ரன் மற்றும் போலீசார் பென்னக்கோணம் கிராமத்திற்கு சென்று விநாயகர் சிலையை லப்பைக்குடிக்காடு பேரூராட்சி வழியாக எடுத்து செல்லக் கூடாது, மாற்று வழியில் சிலையை எடுத்து செல்லுங்கள், இல்லையேல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அறிவுறுத்தி, லப்பைக்குடிக்காடு பேரூ ராட்சி வழியாக சிலையை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பென்னக்கோணம் கிராம மக்கள் சிலையுடன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு வருடமும், லப்பைக்குடிக்காடு வழியாக சிலையை கொண்டு செல்ல அனுமதித்து விட்டு தற்போது வேண்டுமென்றே வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பராபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பியதோடு, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி கழிவு நீர் அ¬ னத்தும் பென்னக்கோணம் வழியாக தான் செல்கிறது என கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

-தினகரன்.

பாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியான ’சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்’ அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் ’ஆசிரியர் தினமாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை அனுசரிப்பதுடன் நிறுத்திவிடாமல், ஆசிரியர்கள் போற்றப்படவேண்டும்! வணங்கப்படவேண்டும்!! என்ற நம் நாட்டின் பாரம்பரியப் பண்பாட்டுக்கு உயிர்கொடுக்க மத்திய அரசு இந்த தினத்தை விழாவாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. இதற்கு ”குரு உத்ஸவ்” என்று பெயரிட்டுள்ளது. தர்மமும் நன்றியும் மனசாட்சியும் உள்ள எந்த நபரும் இதை வரவேற்று கொண்டாடுவார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர்? இந்தப் பார்வையில் ஏதாவது நியாயம் உள்ளதா?
போஸ்டர்களிலும் ஃப்லெக்ஸ் பேனர்களிலும் சுவர் விளம்பரங்களிலும், கழகக் கண்மணிகளால் தமிழாகவே(!) சித்தரிக்கப்படும் தமிழினத் தலைவர் கருணாநிதியின் பேச்சைப் பாருங்கள்.
//ஆசிரியர் தினம் என்பதற்குப் பதிலாக "குரு உத்சவ்' என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. ஆசிரியர் தினத்தை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர். அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழிக்காக தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை// - (தினமணி செப்டம்பர் 1 2014)
dinamanai newsitem
http://www.dinamani.com/tamilnadu/2014/09/01/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%86/article2408362.ece
இதில் கவனிக்கவேண்டிய சொற்றொடர் //மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர்//. இதில் ’குரு’ என்ற சொல்லை வடமொழி சொல்லாக சித்திரிக்கிறார் தமிழ் இ(ஈ)னத் தலைவர். சமயம் வந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக செம்மொழி மாநாட்டில், செம்மொழி தமிழுக்கு 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் என்று வரையறை நிர்ணயித்த வ(லொ)ள்ளுவர் ஆயிற்றே இவர்! அந்த செம்மொழி மாநாட்டில் இவரால் ’சுத்த தமிழ்’ என்ற சான்றிதழ் பெற்ற ’புறநானூறு’ என்ன சொல்கிறது?
//முருகற் சீற்றத்து உருகெழு குருசில்// - புறநானூறு பாடல் 16 - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி வரி-12
இப்பாடலில் ’பாண்டரங் கண்ணனாரால்’ பாடப்பெரும் சோழ மன்னன் ’பெருநற்கிள்ளி’, இராச சூயம் என்னும் வேள்வி செய்ததனால் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான். இந்த சோழனின் சீற்றத்தை முருகனுக்கு இணையாக உவமைப்படுத்துகிறார் புலவர்.
இப்பாடலில் //குருசில்// என்ற சொல் தலைவன், அதாவது மன்னன் என்ற பொருளில் இடம் பெறுகிறது.
//முருகற் சீற்றத்து உருகெழு குருசில்// – முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா
’கெழுதகை நண்பரே’ என்று முரசொலியில் எழுதும்போது, கெழு என்பதற்குப் பின் 'குரு' என்ற சொல் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது, புறநானூற்றை முறையாக படித்திருந்தால் தெரிந்திருக்கும்.
இராசசூய வேள்வி செய்ததனால் சோழ மன்னனும் சோழர்குலமும் தமிழை அழித்துவிட்டது அதனால் குருசில் என்ற வடமொழி சொல்லை இந்த பாடலில் புலவர் பயன்படுத்துகிறார் என்று சோழனையும், பாடிய சான்றோனையும் ’சோற்றால் அடித்த பிண்டமே!’ என்று முரசொலியில் முரசு கொட்டாமல் இருந்தால் சரி!.
  purananooru
செம்மொழியில் இடம் பெற்ற இதே புறநானூற்றில் புலவர் கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பாடும் போது
//ஓர்க்கும் உறந்தை யோனே குருசில்// - புறநானூறு 68 (வரி 17-18)
இங்கு ’குருசில்’ என்ற சொல் மன்னன் என்ற பொருளில் இடம் பெறுகிறது.
வடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்தி பாடிய புறநானூற்றுப் பாடலில் குருசில் என்ற சொல் மன்னன் என்று பொருள் படும்படியாக அமைந்துள்ளது.
//வேல் கெழு குருசில்// - புறநானூறு 198 (வரி 10)
(வேலையுடைய தலைவா)
பத்துப்பாட்டு நூற்களுக்கு பின் தோன்றிய நீதி நூல்களை பதினென்கீழ்கணக்கு நூல்கள் என்றழைப்போம். ’நீதி’ என்ற சொல்லின் ‘ந’கர நெடில் குறிலாக ஒலித்து ’நிதி’யாக பைகளிலும் பெட்டிகளிலும் சேர்க்கும் மரபைத் தோற்றுவித்த கருணா(கரன்சி)நிதிக்கு ஆசாரக்கோவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது துரதிருஷ்டம் ஆசாரக்கோவை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
//குரவர் உரையிகந்து செய்யார் விரதம்// - ஆசாரக்கோவை (பாடல் 17, வரி- 1)
நோன்பே எனினும் ஐம்பெருங் குரவர்களாகிய தாய், தந்தை, ஆசிரியர், அரசன், தமையன் முதலியவர்கள் சொல்லைக் கடந்து செய்யார் என்கிறது உரை.
இங்கு ’குரவர்’ என்ற சொல்லுக்கு ஆசிரியர் என்ற பொருளும் உள்ளது.
இளங்கோவடிகளே சிலப்பதிகாரக் காதையை நேரில் வந்து தன்னிடம் சொன்னது போல் கம்பீரமாக மேடைகளில் மேதாவித் தனமாக பேசியும் பூம்புகார் என்று கதை வசனம் எழுதி சினிமாவில் சம்பாதித்தும், பூம்புகார் வணிகர்களை விடப் பல மடங்கு சம்பாதித்த பெருமைக்குச் சொந்தக்காரர் கருணா(கரன்சி)நிதி. சிலப்பதிகாரத்தில் குரு என்ற சொல் இடம்பெற்றிருப்பதை ஏன் தான் கவனிக்கவில்லையோ. சிலப்பதிகாரத்திற்கு ”கண்ணகியின் இடையிலேயும், மாதவியின் இடையிலேயும் கோவலன் கண்ட வித்தியாசம்” என்ற கிளுகிளுப்பான விளக்கம் அளித்தவருக்கு இது எங்கே தெரியப்போகிறது!.
//இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்// - (சிலப்பதிகாரம் நாடுகாண் காதை, வரி 184)
இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்
சிலப்பதிகாரமும் குரவன் என்றால் ஆசிரியர் என்கிறது.
அடியார்க்கு நல்லார் தனது உரையில் ’குரவர்’ என்பதற்கு குருமூர்த்தி என்று குறிப்பிடுகிறார். நம் திருக்குவளை தட்சிணாமூர்த்தி குரவன் என்பதற்கு வேறு ஏதாவது பொருள் வைத்திருக்கிறாரா?
wall-paintings



சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை, குரவன் என்றால் பெற்றோர் என்கிறது
//குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ// - (புறஞ்சேரியிறுத்த காதை வரி 89)
குரு’ என்ற சொல் அரசன், தாய் தந்தையர், ஆசிரியர், தமையன் என்பதைக் குறிக்கும் சொல்லாக விளங்குவது மொழி அறிஞர்களுக்குத் தெரியும். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு, இந்த சொல்லிற்கு மேலும் சில பொருள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது
//குரவனும் நோயும் நிறமும் பாரமும் அரசனும் குரு எனலாகும்// - (பிங்கல நிகண்டு, 10: 370)
இதற்கு தமிழ் இணையதளமான tamilnet.com, Teacher, disease (of the pox or blister type), colour, heaviness and king are termed as Kuru என்ற விளக்கத்தைப் பதிவிட்டுள்ளது. (http://www.tamilnet.com/art.html?catid=98&artid=37228). இந்த தளம் கருணாநிதியின் மொழியில் சொல்லப்போனால் ஆரியக் கலப்பற்ற இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது.
தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளின் கெழுதகை கூட்டாளியான திரு கா.சு. பிள்ளை, ’சமயக் குரவர் நால்வர் வரலாறு’ என்ற புத்தகத்தை எழுதி அதை சென்னை, பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆண்டுப் பிறப்பை மாற்ற கள்ளச் சாட்சியாக கருணாநிதியால் கூண்டில் ஏற்றப்பட்ட மறைமலையடிகளின் கெழுதகை கூட்டாளியான கா.சு. பிள்ளை அவர்கள் குரவர் என்ற சொல்லுக்கு என்ன பொருள் எடுத்துக்கொண்டார் என்பதை இறந்தவர்களையெல்லாம் சாட்சிக்கு அழைக்கும் கருணாநிதி இவர் கல்லறைக்குச் சென்று கேட்டுச் சொல்வாரா?
சமயக்குரவர்கள், சந்தான குரவர்கள் என்று சைவர்களால் அனுதினமும் வணங்கப்படும் ஆசான்கள் தமிழர்கள் இல்லையா? குரவர் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லையா?
samya santhana kuravar



//கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க// (திருவாசகம்)
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க
9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ சமயக்குரவரான மாணிக்கவாசகர் குரு என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இந்த திருவாசகப் பாடல் நமக்குக் காட்டுகிறது.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம் குரு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.
//நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்// - காஞ்சி புராணம் - கடவுள் வாழ்த்து (பாடல் 10, வரி 2)
என் தம்பி சிவாஜி கணேசன் என்று உறவு முறை பாராட்டி, சென்னை காமராசர் சாலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவினார் கருணாநிதி. இந்தச் சிலையை ஜெயலலிதா அரசு மாற்றியபோது கடும் கண்டனத்தைத் தெரிவித்தவரும் கருணாநிதி. சிவாஜி கணேசனுக்கு ‘கலைக் குருசில்’ என்ற பட்டமும் உண்டு. ’குருசில்’ என்ற பட்டம் எந்த மொழியை அடிப்படையாகக் கொண்டது என்று, ‘முத்தமிழ் வித்தவர்” விளக்கம் தருவாரா?
’குரவன்’ என்ற தமிழ்ச் சொல்லே ’குரு’ என்ற வடமொழிச் சொல்லுக்கு வேர் என்று தனித்தமிழ் பேசும் தேவநேயப் பாவாணர் சொல்லியிருப்பது கருணாநிதிக்குத் தெரியவில்லை போலும்! சிவாலயங்களில் பூசனை செய்பவர்களுக்கு ’குருக்கள்’ என்று பெயர். இதுபோலவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூசனை செய்பவர்களுக்கு ’சிவகுராவ்’ என்று பெயர். இதிலிருந்து ’குரு’ என்ற சொல் ஒரே பொருளை குறிக்கும்படியாக வட பாரதத்திலும், தென் பாரதத்திலும் வழங்கப்படுகிறது. ’குரு’ என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. S.இராமசந்திரன் அவர்கள். 
devaneya pavanar
குரு’ என்ற உயரிய சொல்லை உலகுக்குக் கொடுத்தது உன்னதத் தமிழ் என்ற உண்மையை மறைத்த பாதகச்செயலை கருணாநிதி செய்துள்ளார். சங்க காலம் முதல் இன்று வரை பழக்கத்தில் இருந்துவரும் ’குரு’ என்ற தூய தமிழ்ச் சொல்லைத் தமிழிலிருந்து அந்நியப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு கேடு கெட்ட செயலில் இறங்கியுள்ளார். பிரிவினைவாத நோக்கத்திற்காக தாய்மொழியை காவு கொடுக்கும் கயவருக்கு கலைஞர் பட்டமா?
’குரு’ என்ற சொல்லின் மூலம் தமிழ் என்றாலும், குரு- சிஷ்ய பாரம்பரியம் வெறுக்கத்தக்கது அது தமிழுக்கு எதிரானது என்று கருணாநிதி அவர்கள் கருதலாம். கருணாநிதியை பொறுத்தவரை அவரின் வாழ்க்கைமுறையே தமிழ் வாழ்க்கைமுறை. அவரது அகராதியே தமிழ் அகராதி. அதனால் தானோ என்னவோ தமிழே என்று அவரை அவரே அழைத்துக்கொள்கிறார். பாடம் கேட்கப் போன மாணவியிடம் ஆசிரியர் புணர்ந்ததை வைத்து உடம்படு மெய் என்று தொல்காப்பிய பூங்காவில் ஆசிரியர்-மாணவர் உறவுக்கு விளக்கம் கொடுத்தவராயிற்றே! காவலாளி இல்லாத பூங்காக்களில் இரவு நேரங்களில் ஒதுங்குபவர்களை வைத்து கூட்டம் நடத்துபவரின் தொல்காப்பியப் பூங்கா இப்படித்தானே இருக்கும்! இந்த உடம்படு மெய் சூத்திரத்தின் அடிப்படையில் குருவைப் பார்க்கும் கருணாநிதிக்கு, குருவை தெய்வமாகக் கொண்டாடும் மத்திய அரசின் ’குரு உத்ஸவ்’ கசக்கத்தானே செய்யும்!.
கருணாநிதி கொட்டடித்தால் அந்த தமிழ் தாளத்திற்கு அடிப்படைத் தமிழும், பண்பாடும் தெரியாத ஒரு வேதாளக் கூட்டம் உடனே ஆடிவிடும். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவேரா கழுத்தில் இருக்கும் வேதாளம் யார் என்பதற்கான போட்டா போட்டி வேறு! எப்போதெல்லாம் சர்க்கரை நோய் கூடுகிறதோ அப்போதெல்லாம் பாத யாத்திரை செல்லும் திரு.வை.கோ அவர்கள் ஏதோ ’குரு’ என்ற சொல் தமிழுக்கு விரோதமானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சங்கத்தமிழன் என்று சொல்லி தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், இலங்கைத் தமிழருக்கும் சங்கூதும் திருமாவளவன், பழ.நெடுமாறன், போன்றோர் கொதித்தெழுகின்றனர். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ’குரு’ என்ற சொல்லினால் தமிழுக்குத் தீரா இழுக்கும், அழிவும் வருவதை டெலஸ்கோப் மூலம் பார்த்து வானிலை அறிக்கை படித்தனர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் மற்றும் ’சீன்’ சீமானின் அறிவுக்களஞ்சியமான திரு.ஐயநாதன்.
இந்தப் பண்பாட்டுக்காவலர்களையெல்லாம் ஒரு படி மிஞ்சி நின்றார் காங்கிரஸ் தலைவர் திரு.ஞானதேசிகன் அவர்கள். Teachers day என்பதை ‘குரு உத்ஸவ்’ என்று மாற்றியது தமிழ் விரோதம் என்கிறார். I am the last English man to rule India, என்று சொன்ன ஜவகர்லால் நேருவைப் பின்பற்றும் கட்சியினருக்கு ’குரு’ என்ற சொல் கெட்ட வார்த்தை தானே!
nehru edwina
அரசியலுக்காகவும், பிழைப்பிற்காகவும் மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இந்தக் கூட்டங்கள், ஆங்கிலத்திலுள்ள teachers day ஐ ஏற்றுக் கொள்வார்களாம்!, ஆங்கில ஆண்டுப்பிறப்பான ஜனவரியைப் போற்றிக் கொண்டாடுவார்களாம்!, அரேபிய ரம்ஜானைக் கொண்டாடுவார்களாம் !. அரபும், ஆங்கிலமும் மதுரையிலும், குமரிக் கண்டத்திலும், கோபாலபுரத்திலும் தோன்றியது! சங்க இலக்கியங்களும், ஐம்பெருங் காப்பியங்களும் கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தது! என்று இந்தத் தமிழ் கோமாளிகள் அறிவித்து, அரபியையும், ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த 158 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பெரம்பலூர் நகரில் 30 சிலை, பாடாலூர் பகுதியில் 25, மருவத்தூர் பகுதியில் 5, குன்னம் பகுதியில் 2, மங்கலமேடு பகுதியில் 6, அரும்பாவூர் பகுதியில் 5, கை.களத்தூர் பகுதியில் 1 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 74 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஊர்வலத்தை முன்னிட்டு, அனைத்து விநாயகர் சிலைகளும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு செல்வகணபதி கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.

விநாயகர் சதுர்த்தி விழா குழுத் தலைவர் தெ.பெ. வைத்தீஸ்வரன், கெüரவத் தலைவர் கங்காதரன், துணைத் தலைவர்கள் தேவேந்திரன், பிரபு அய்யர், செயலர் சி. நடராஜன், இணைச் செயலர்கள் கதிர்வேல், சி. ராமசாமி, பொருளாளர் சிவபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காமராஜர் வளைவு, சங்குப் பேட்டை, பாலக்கரை, துறைமங்கலம் வழியாக திருச்சிக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டத்தில்: இதேபோல, அரியலூர் நகரில் 4, செந்துறை பகுதியில் 2, கீழப்பழுவூர் பகுதியில் 11, திருமானூர் பகுதியில் 16, வெங்கனூர் பகுதியில் 6, தளவாய் 1, ஜயங்கொண்டம் 14, உடையார்பாளையம் பகுதியில் 6, மீன்சுருட்டி பகுதியில் 3, தா.பழூர் பகுதியில் 5, ஆண்டிமடம் பகுதியில் 5, இரும்புலிக்குறிச்சி பகுதியில் 2, விக்கிரமங்கலம் பகுதியில் 2 என அரியலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அரியலூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் மருதையாற்றிலும், தா.பழூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் திருமானூர் கொள்ளிட ஆற்றிலும், ஜயங்கொண்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அணைக்கரை ஆற்றிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

-தினமணி.


பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த 13 பேர் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, வேனில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். வேனை, விருதுநகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவக்குமார் (45) ஓட்டினார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தனியார் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றபோது, முன்னால் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதியது.
இதில், வேனில் பயணம் செய்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் காளிராஜ் (45), மாரியப்பன் (60), சுதாகரன் (34), சிவக்குமார், பிரபு, மணிகண்டன், கார்த்திக், சதீஷ், ராமச்சந்திரன், உமாராணி உள்ளிட்ட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து சுதாகரன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநர் சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-தினமணி, வசந்த ஜீவா.

Sunday 31 August 2014

பெருமை மிக்க கலாச்சாரப் பாரம்பரியம்
hrce temple Security
நமது ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அவை நமது பழம்பெருமை வாய்ந்த வேத நாகரீகத்தையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும், கலச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் சின்னங்களாக நெடுதுயர்ந்து நிற்பவை. அவை கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்து வருபவை. பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு மற்றும் வளர்க்கப்பட்டு வரும் வேத ஆகமங்கள், இலக்கியம், கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, இயல், இசை, நாடகம், கால்நடைப் பாதுகாப்பு, என அனைத்துமே ஆலயங்களைச் சார்ந்த கலாச்சாரப் பாரம்பரியம்தான்.
ஆலயங்களில் குடியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது போலவே, அவற்றைச் சார்ந்துள்ள விருக்ஷங்கள், தீர்த்தங்கள் ஆகியவற்றையும் வழிபடுகின்றோம். அத்தெய்வங்களின் வாகனங்களையும் வழிபடுகின்றோம். இருப்பினும், ஆலயத்துள் இருந்துகொண்டு நமக்கு அருள்பாலிக்கும் தெய்வத்திற்குச் சமானமாக நாம் வழிபாட்டு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பிராணி உண்டென்றால் அது பசுத்தாய் மட்டுமே. வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப்பெருமையை நமது சனாதன தர்மம் பசுவுக்கு மட்டும் அளிக்கின்றது.
அன்றைய முடியாட்சி காலத்தில், அரசர்கள் ஒவ்வொரு ஆலயத்தையும் இணைத்து நந்தவனங்களும் பசுமடங்களும் அமைத்திருந்தார்கள். ஆலயவத்திற்கு வந்து இறைவனத் தரிசிப்பவர்கள், பசுமடங்களுக்கும் வந்து ஆவினங்களுக்குப் பூஜைகள் செய்வதும், உணவுகள் வழங்குவதும் வழக்காமக இருந்து வந்தது. ஆலயத்தினுள் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் யாகங்கள் செய்வதற்கான பால், தயிர், வெண்ணை, கோமியம், சாணம், போன்ற பொருட்களைப் பெறுவதற்கும், பஞ்சகவ்யம், விபூதி போன்ற பொருட்களைத் தயாரிப்பதற்கும் பசுமடங்கள் பயன்பட்டு வந்தன.
அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட சீரழிவு
அன்னியர் படையெடுப்பினால் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் அவர்கள் வசம் அடிமைப்பட்டிருந்த போதும், நமது ஆன்மீகப் பாரம்பரியம் மற்றும் பண்பாடு மாற்றம் பெறவில்லை. அவை தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. நமது ஆலயங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும், நமது வழிபாட்டு முறையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆவினங்களைப் போற்றும் நமது பண்பாடும் அழியவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியிலேயே அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டு ஆலயங்கள் பல அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், சுதந்திரம் பெற்ற பிறகு திராவிட அரசுகள் ஏற்பட்ட பிறகுதான் நமது ஆலயங்கள் பெரிதும் சீரழிக்கப்பட்டன. குறிப்பாகச் சொல்லப்போனால், 1967க்குப் பிறகு தொடர்ந்து வரும் திராவிட ஆட்சியாளர்களின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தில் ஆலயங்கள் சீரழிந்தன; ஆலயங்களை இணைந்து இருந்த நீர்நிலைகளும், பசுமடங்களும் சரியான பராமரிப்பின்றி அழிந்தன; தொடர்ந்து அழிந்து வருகின்றன.
உயர்நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில்தான், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, கோயில்களில் உள்ள பசு மடங்களை ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
radharajan
பிராணிகள் நலவிரும்பியும் சமூக ஆர்வலருமான திருமதி ராதா ராஜன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் (WP 28793 & 28794 of 2013) மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். ராதா ராஜன் தன்னுடைய மனுவில், “தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல கோயில்கள் உள்ளன. அங்கு பசுக்கள், கன்றுகளைப் பராமரிப்பதற்கு கோசாலைகள் (பசு மடங்கள்) உள்ளன. மத ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கோயில்களிலேயே நிர்வாகத்தினரால் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோசாலையில் சரியான பராமரிப்பில்லாமல் பசுக்கள் இறந்தது தெரிய வந்தது. கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படும் பசுக்கள் நிர்வாக முறைகேடு, போதிய பராமரிப்பின்மை காரணமாக இது போன்று பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் கோசாலைகளின் பராமரிப்பைக் கண்காணிப்புக் குழு அமைத்து மேற்பார்வையிட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சதீஷ் பராசரன் ஆஜரானார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு வழக்குரைஞர் எஸ்.கந்தசாமி ஆஜராகி அரசாணையைத் தாக்கல் செய்தார். அதில், பசு மடங்களை ஆய்வு செய்ய கால்நடைத் துறை இணை இயக்குநர் எல்.அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அவருடன் சேர்த்து, விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த டாக்டர் சுமதி, மனுதாரர் ராதா ராஜன் ஆகியோரையும் உடன் நியமிக்கப் பரிந்துரை செய்தனர்.
இந்தக் குழு தமிழகத்தில் உள்ள கோயில்களின் பசு மடங்களை ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அக்டோபர் 27-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கின் பின்னணி
hrce gow issue1
சென்ற 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் தருவாயில் புகழ் மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் பசுமடத்தில் பல பசுக்கள் திடீரென்று இறந்து போனதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அக்டோபர் மாதம் 15-ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலா பிராணிகள் காப்பகம் மற்றும் மீட்கும் மையத்திலிருந்து, மருத்துவர்கள் கோவிலின் பசுமடத்திற்குச் சென்று அங்குள்ள பசுக்களைப் பரிசோதனை செய்தனர். அந்தச் சமயத்தில் 105 பசுக்கள் இருந்தன. அவை பக்தர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டன. பெரும்பான்மையான பக்தர்கள் பசுக்களை நன்கொடையாகக் கொடுத்ததுடன் அவற்றைப் பராமரிக்க ரூபாய் 10,000 பணமும் கொடுத்திருக்கின்றனர். கோவிலில் உள்ள பசுக்களும் கன்றுகளும் சரியாகப் பராமரிக்கப் படுவதில்லை என்று பல புகார்கள் எழுந்ததால், சுமார் 50 பிராணிகள் நல ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பசுமடத்தின் சோதனைக்கு உத்தரவிட்டார். அவ்வுத்தரவின் படிதான் மேற்கண்ட பரிசோதனை நடந்தது. பரிசோதனையின் முடிவில் கீழ்காணும் கண்டுபிடிப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டன:
பராமரிப்பு போதவில்லை. அத்தனை பசுக்களையும் கன்றுகளையும் பராமரிக்க ஒரே ஒரு நபரும் அவருக்கு ஒரேயொரு உதவியாளருமாக இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு அளிக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 105 பசுக்கள் கன்றுகளுக்கும் சேர்த்து. ஒரு நாளைக்கு வெறும் 25 கிலோ புண்ணாக்கும், 25 கிலோ உளுந்தும், 25 கிலோ தவிடும் கொஞ்சம் வைக்கோலும் கொடுக்கப்படுகின்றன. அவ்வளவுதான். பச்சைப் புல் கொடுக்கப்படுவதில்லை. இந்த உணவானது 15 பசுக்களுக்கு மட்டுமே போதுமானது.
பசு மடத்தில் தேவைப்படுகின்ற அளவுக்கு இடமிருந்தாலும், மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் பசுக்களைக் காப்பாற்ற பாதுகாப்பு ஏற்படுத்தப்படவில்லை.
பசும்புல் கூட இல்லாமல், வெறும் 15 பசுக்களுக்கு மட்டுமே போதுமான உணவை 105 பசுக்களுக்குக் கொடுத்தால், அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாகக் கொடுத்தால், அவை எப்படி உயிர் வாழும்? 105 பசுக்களுக்கு வெறும் இரண்டு பணியாளர் மட்டுமே இருந்தால் அவர்களால் எப்படி நூறு பசுக்களையும் கவனித்துப் பராமரிக்க முடியும்? கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உள்ள கோவிலின் பசுமடமே இந்த லக்ஷணத்தில் இருந்தால், மற்ற கோவில்களில் உள்ள பசுமடங்களைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இந்தப் பின்னணியில்தான் திருமதி ராதாராஜன் அவர்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கோசாலைகளின் நிலை என்ன, கால்நடைகள் அக்கோசாலைகளில் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன, மாட்டுத் தீவனங்கள் எப்படி கொள்முதல் செய்யப்படுகின்றன, அவைகள் முறையாகக் கோசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு மாடுகளுக்கு உணவளிக்கப்படுகிறதா, என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை அளித்து உத்தரவிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகுதான் உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய, மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகமெங்கும் உள்ள அவலம்
இந்த அவலமான நிலை திருவண்ணாமலையில் மட்டுமல்ல. இது தமிழகமெங்கும் உள்ள பல ஆலயங்களிலும் தொடர்ந்து நிலவி வருவதுதான். பக்தர்கள் இறைவனிடம் பலவிதமான வேண்டுதல்களை சமர்ப்பித்து, ஆலயங்களுக்கு அளிக்கும் பசுக்களைப் பராமரிக்க இந்து அறநிலையத்துறை அலட்சியம் காட்டுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். மற்ற சில முக்கியமான கோவில்களில் நடந்த சில அராஜகங்களையும் பார்க்கலாம்.
5000 பசுக்கள் மாயமான திருச்செந்தூர் கோவில் கோசாலை
கடந்த 2012-ம் வருடம் நவம்பர் மாதம் தணிக்கைத்துறை ஆய்வு செய்யப்பட்டதில், திருச்செந்தூர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய 5000க்கும் மேற்பட்ட பசுக்கள் மாயமானது தெரிய வந்தது. பக்தர்கள் வழங்கிய பசுக்களின் நிலை குறித்து, தணிக்கை செய்யப்பட்டபோது, தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 மாடுகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவை என்னவாயின என்பது குறித்து, எவ்வித ஆவணங்களும் இல்லை. சம்மந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இதற்கான பதில் இல்லை. பக்தர்கள் கொடுக்கும் பசுக்களின் எண்ணிக்கை அளவுக்கு மீறி உயரும்போது அவற்றைப் பராமரிக்க தனியார் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்டு அவை அங்கே பராமரிக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறு செய்வதில் பல விதிமுறை மீறல்கள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. திருச்செந்தூர் கோவிலில் தனியார் கோசாலைகளுக்குக் கொடுக்கப்பட்ட பசுக்கள் பற்றிய முறையான ஆவணங்கள் இல்லை. எனவே, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பசுக்கள், விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. (ஆதாரம்: - தினமலர் – 30 நவம்பர் 2012)
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான மேற்கண்ட கோசாலை, கீழ நாழுமூலைகிணற்றில் உள்ளது. இங்கே 22-10-2010 அன்று புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்துள்ளது. இங்கு பராமரிக்கபட்டு வரும் பசுக்கள் நோய் கண்டால் அதை கவனித்துக்கொள்ள கால்நடை மருத்துவர்களும் இருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த இடங்களை எல்லாம் அடிக்கடி சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் பொலிரோ ஜீப் ஒன்றையும் வாங்கியுள்ளனர். ஆனால் தற்போது அங்கு ஓரு பசுமாடு கூட கிடையாது கோசாலை இருந்த இடம் சீமைக்கருவேலி மரங்கள் உள்ள சோலையாகவும் சமூக விரோதிகள் புழங்கும் இடமாகவும் மாறியுள்ளது. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டும் அந்த பொலிரோ ஜீப்பில் ஜாலியாக சுற்றி வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காகச் செலவான திருக்கோவில் பணம் ஓரு கோடி ரூபாய்கு மேல்! (ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் தகவல்)

நூற்றுக்கணக்கான பசுக்கள் மாயமான ஸ்ரீரங்கம் கோவில் கோசாலை
மற்றொரு புகழ் மிக்க கோவிலான ஸ்ரீரங்கம் கோவிலிலும் நூற்றுக்கணக்கான பசுக்கள் மாயமாகியுள்ளன. பக்தர்களால் கொடுக்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, புதியதாக வந்த பசுக்களுக்கு உணவளிக்காமல் அவற்றை உடல்நலன் குன்றிப்போய் இறக்கச்செய்து, அவை நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டி, அவற்றை சுடுகாட்டிற்கு அனுப்பி, அங்கிருந்து வெட்டப்பட்டு ஸ்ரீரங்கம் முழுவதும் உள்ள பல இறைச்சிக்கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு நாளைக்கு இவ்வாறு இரண்டு அல்லது மூன்று பசுக்கள் அனுப்பப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. சில பசுக்கள் நோய் வந்து இறந்ததாகக் கணக்குக் காட்டப்பட்டாலும், பல பசுக்கள் அந்தக் கணக்கில் கூட இல்லை. (குமுதம் ரிப்போர்ட்டர் – 27-12-2007)
இந்தக் கோவிலிலும் தணிக்கை செய்யப்பட்டபோது ஒரே ஆண்டில் 105 பசுக்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
பழனி ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலை மர்மங்கள்
hrce palani
பழனியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீமனாம்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது பழனி கோவிலிற்குச் சொந்தமான கோசாலை. இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கோசாலையாகும். அதாவது, பல்வேறு கோவில்களில் இடமில்லாத காரணத்தால் எண்ணிக்கை அதிகமாக உள்ள பசுக்களை இங்கே கொண்டுவந்து பராமரிப்பு செய்யப்படுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கோசாலை. கோசாலை இருக்கும் கோவிலுக்குச் சொந்தமான நிலம் 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த மார்ச்சு மாதம் அங்கே ஒன்பதே ஒன்பது (9) மாடுகள் தான் இருந்தன. அந்த 9 பாடுகளில் 3 காளைகள் 6 பசுக்கன்றுகள். 3 காளை மாடுகளில் ஒரு காளை (காங்கேயம் காளை) மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்தக் கோசாலையைப் பராமரிக்க மட்டும் 20 பேர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால் கடந்த 4-ம் தேதி சென்ற போது ஒரே ஒருவர் மட்டும்தான் இருந்தார். கால்நடை அலுவலர் (Cattle Officer) திரு.திருப்பதி அவர்கள் வெளியே சென்றிருந்தார். நமது குழுவினர் கிட்டத்தட்ட 3 மணிநேரங்களுக்கு மேல் அங்கே இருந்த போதும் அவர் வரவில்லை.

அந்த இடம் தண்ணீர் கஷ்டம் மிகுந்த வறட்சியான இடமாக இருக்கிறது. கோசாலையில் நமது குழுவினர் பார்த்தபோது இரண்டு தொட்டிகளில் மட்டும் தண்ணீர் இருந்தது. ஒரு இடத்தில் வைக்கோல் மட்டும் குவிக்கப்பட்டிருந்தது. மற்ற மாட்டு தீவனங்கள் எதுவும் காணோம். பணியில் இருந்தவரிடம் கேட்ட பொழுது, பஞ்சாமிர்தத்திற்குப் பயன்படுத்தும் பழங்களின் தோல்களும், புற்கட்டுகளும் பழனியிலிருந்து கொண்டுவரப்படுகின்றன என்றார். ஆனால் அந்த மாதிரி எதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தானமாகப் பசுக்களை கொடுப்பது வழக்கம். அந்தப் பசுக்களைப் பெற்றுக்கொள்ளும் கோவில் நிர்வாகம் அவற்றைப் பராமரிக்க பக்தர்களிடம் ஒவ்வொரு பசுவிற்கும் ரூ.1000/- கட்டணம் வசூலிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து விட்டன என்று பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்னால் 300 பசுக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அளித்ததாகவும் தெரிய வந்தது.
இது விதி முறைகளுக்குப் புறம்பானது என்பதோடு மட்டுமல்லாமல், இவ்வாறு சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால் முறையான அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி தானமாக வருகின்ற பசுக்களை சுய உதவிக்குழுவினரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்ட பக்ஷத்தில் பக்தர்களிடம் ஏன் ரூ.1000/- பராமரிப்புக் கட்டணம் வாங்க வேண்டும்? அவ்வாறு வாங்கியுள்ள கட்டணப் பணத்திற்கு முறையான கணக்குகள் உண்டா? அந்தப் பணம் வேறு எதற்காகச் செலவிடப்பட்டுள்ளது? சுய உதவிக் குழுவினரிடம் கொடுத்த பிறகு அவர்கள் அப்பசுக்களை என்ன செய்கிறார்கள்? விற்கிறார்களா அல்லது பராமரிக்கிறார்களா? விற்கிறார்கள் என்றால் ஏன்? அவ்வாறு விற்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? அப்படி விற்பவர்களுக்கு ஏன் வழங்க வேண்டும்? இல்லை பராமரிக்கிறார்கள் என்றால் எப்படிப் பராமரிக்கின்றனர்? அவர்கள் பராமரிப்பதைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்கு என்ன விதமான வழிமுறைகள் உள்ளன? போன்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்த லக்ஷணத்தில், 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கோசாலையில், 2011 வரை கோசாலைக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் ஒரு கோடியே நாற்பது லக்ஷம் (ரூ. 1, 39, 27, 176/-) ரூபாய்கள்! கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உடைய கோவில்களில் பக்தர்கள் தானமாகக் கொடுக்கும் பசுக்களையும் கால்நடைகளையும் பராமரிக்க முறையாக கோசாலைகள் அமைத்து நடத்த முடியாத அறநிலையத்துறை ஒன்று இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன?
மீறப்படும் விதிமுறைகள்
அதிக அளவில் பசுக்கள் பக்தர்களால் தானம் செய்யப்படும்போது, அவற்றைப் பராமரிக்க தனியார் நடத்தும் கோசாலைகளுக்கு வழங்கப்படும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இவ்விஷயத்தில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
அறநிலையத்துறை பசுக்களை அனுப்பும் தனியார் கோசாலைகள், அகில இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பதிவு பெற்ற அமைப்புகளாக இருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் பெற்ற பசுக்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

ஒவ்வொரு பசுவும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், செயல் அலுவலர் பெயரில், காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பசுக்கள் இறக்குமானால், கிடைக்கும் காப்பீட்டுத் தொகையில், 70 சதவீதம் கோசாலைகளுக்கும், 30 சதவீதம் கோவிலுக்கும் தரப்பட வேண்டும்.
தனியார் கோசாலைகள், மாடுகள் இறப்பு குறித்து, இணை ஆணையருக்கும், செயல் அலுவலருக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும்.

தனியாருக்கு வழங்கப்பட்ட பசுக்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அறநிலையத்துறை அதிகாரிகள் களஆய்வு செய்ய வேண்டும்.
அறநிலையத்துறை அதிகாரிகள், அகில இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலைகளுக்கு மட்டுமே பசுக்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, அங்கீகரிக்கப்படாத கோசாலைகளுக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களை வழங்கியுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது. மேலும், தனியார் பசுச்சாலைகளுக்கு, வழங்கப்பட்ட பசுக்களை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ள போதும், கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொள்வதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்திய விலங்குகள் நலவாரியத்தால் அங்கீகரிக்கப்படாத தனியார் கோசாலைகளுக்கு, தெரிந்தெ பசுக்களை அனுப்பும் அறநிலையத்துறை அதிகாரிகள், அவற்றின் பராமரிப்பை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது நமது தவறாகத்தான் இருக்க முடியும்.
அழிக்கப்படும் ஆவினங்கள்
hrce gow
ஒரு பக்கம் அறநிலையத்துறையினரின் அலக்ஷியத்தால் ஆவினங்கள் அழிந்துகொண்டிருக்க, மறுபக்கம் இறைச்சிக்காகவும் தோல் பொருட்களைத் தயாரிப்பதற்காகவும் அவை லக்ஷக்கணக்கில் கடத்தி அழிக்கப்படுகின்றன. கர்ப்பிணிப்பசுக்களையும், கன்றுக்குட்டிகளையும் கூட கடத்தல்காரர்கள் இறைச்சிக்காகக் கடத்துகின்றனர்.
பழம்பெருமை வாய்ந்த நமது நாகரீகத்தில் கால்நடைகளுக்கென்று ஒரு சிறப்பிடம் உண்டு. அவை நம்முடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன. பசுவைப் பால் கொடுக்கும் தாயாகப் பாவித்தும், எருதுகளையும் காளைகளையும் உழவுக்குக் கைகொடுக்கும் குடும்ப அங்கத்தினராகவும் கருதி வந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் கால மற்றத்தினாலும், அன்னிய கலாச்சார மோகத்தினாலும், அவற்றை நாம் அன்னியப்படுத்தத் தொடங்கிவிட்டோம். எப்போது டிராக்டர் கண்டுபிடிக்கப்பட்டு பயனுக்கு வரத்தொடங்கியதோ அப்போதே எருதுகளையும் காளைகளையும் நாம் மறக்கத்தொடங்கி விட்டோம். ஆண் கன்றுகளைப் பயனில்லை என்று விற்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம். வாழ்நாளெல்லாம் நமக்குப் பால் கொடுத்துத் தாய்க்குச் சமமாக இருந்த பசுக்களையும், அவைகளின் பால்தரும் சக்தி குறைந்து போனவுடன் நன்றி மறந்து அவற்றையும் அடிமாடுகளாக விற்கத்தொடங்கி விட்டோம். நமது புறக்கணிப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் நம்மாலேயே வேறு பல பிரச்சனைகளையும் கால்நடைகள் சந்திக்கின்றன.
ஆவினங்களை முழுவதுமாகப் புறக்கணிக்கும் அரசு
லக்ஷக்கணக்கான கால்நடைகள் இறைச்சிக்காகவும் தோல் பயன்பாட்டிற்காகவும் கடத்தி அழிக்கப்படுவதை எப்படி கண்டுகொள்வதில்லையோ, அதே போல் அறநிலையத்துறையின் அலக்ஷியத்தால் துன்புற்று அழியும் பசுக்களையும் அரசு கண்டுகொள்வதில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தொடரில், இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின்போது சமர்ப்பிக்கப்பட்ட, 2014-15 ஆண்டுக்கான கொள்கை அறிவிப்பில், “பசு” என்கிற வார்த்தை ஒரு முறை கூட இடம்பெறவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயல்லிதா அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் “பசு” என்கிற வார்த்தை ஒருமுறை கூட இடம் பெறவில்லை.
நம்பிக்கை தரும் உயர் நீதிமன்ற உத்தரவு
அறநிலையத்துறையாலும் அலட்சியப்படுத்தப்பட்டு, அரசாலும் புறக்கணிக்கப்பட்டு துன்பத்தில் உழன்று கிடக்கும் ஆவினங்களக்கு மறுவாழ்வு பெற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளது மூவர் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு. அம்மூவர் குழு இரண்டு மாதங்கள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை அரசு அலக்ஷியம் செய்யாமல், அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பக்ஷத்தில் பொது மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

நன்றி- vsrc


இராமநாதபுரத்தில் 31.08.14 அதிகாலை 1.00 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து இராமேஸ்வரம் வந்த 78 பக்தர்கள் இராமநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டு திருப்புல்லனை வழியாக கண்ணியகுமரி பயணம் செய்த போது எதிர் பாராத விதமாக பேருந்து தீ விபத்துக்குட்பட்டு சின்னபின்னமானது. இதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயெ பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் இராமநாதுபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தென்தமிழக மாநில செயலாளர் ஆடலரசன் மற்றும் சங்க ஸ்வயம் சேவக சகோதரர்கள் விரைந்து சென்று மீட்புப்பணியில் மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துழைத்தனர்

மேலும் படுகாயம் அடைந்த நபர்களை மருத்துவமனை சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வேண்டிய துண்டு மற்றும் உடைகள் வழங்கினர். மேலும் அனைத்து பொருட்களையும் இழந்து பாிதவித்த பக்தர்களுக்கு திருப்புல்லானி ஊராட்சி மன்ற தலைவர் திரு முனியான்டி.மற்றும் பாஜக ஒன்றிய தலைவர் திரு இராமச்சந்திரன் ஆகியோர் அவர்களுக்கு காலை உணவு மற்றும் தேநீர் கொடுத்து உதவினர் மற்றும் திருப்புல்லானி வாழ் மகளீர் அமைப்புகள் அந்த பகதர்களுக்கு புரியாத மொழியில் ஆறுதல் கூறியது அனைவரின் நெஞசையும் நெகிழ வைத்தது.

மேலும் இராமநாதபுரம் வஉசி நகர் விநாயகர் இந்து முன்னணி கமிட்டியை சார்ந்தவாகள் அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் பயணம் செய்வதற்கான் பைகள் போன்றவற்றை மினி லாரி மூலம் தெரு வாழ் பொது மக்களிடம் சேகரித்து கொண்டு வந்து கொடுத்தனர். அரிமா சங்கத்தை சார்ந்த திரு சதிஷ் அவர்கள் மதியஉணவு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இவர்களின் பயண இதரச் செலவிற்காக ரவிசங்கர்ஜி பக்தர் திரு.இராமேஷ் மற்றும் உள்ளுர் சுய உதவிக் குழக்கள் மூலம ரூ 10.000 பணமாக கொடுத்தனர்.

மாவட்ட நிர்வாகம் மூலம் இரண்டு பேருந்துகளில் இவர்களை சென்னைக்கு பேருந்துகளில் அனுப்பி அங்கிருந்து இரயில் மூலம் கொல்கத்தா செல்ல ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆர்.ஆர்.எஸ் தென் மாநில செயலாளர் ஆடவரசன் மற்றும் ஜில்லா சாரிரீக் ப்ரமுக் காஜேந்திரன். மற்றும் ஜில்லா ப்ரச்சார்பரமுக் சுதேசி நா. ஆறுமுகம் ஆகியோருடன் ஸவயம் சேவக சகோதரார்கள் சேர்ந்து செய்தனர்.

நன்றி - ஆறுமுகம் நாகலிங்கம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலானி அருகே மேற்குவங்க சுற்றுலாப் பேருந்தில் தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சனிக்கிழமை மாலை ராமேசுவரம் வந்தது. அங்கிருந்து இரவு கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் திருப்புல்லானி அருகே தாதனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் குளிர்சாதனத்தில் தீப்பற்றியுள்ளது. தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்தது. இதில், பேருந்தில் இருந்த 2 ஆண், 2 பெண் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் முழுமையாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.


வ.களத்தூர் முக்கியஸ்தர் திரு.தங்கவேல் அவர்களின் மகனும் நமது விவேகானந்தர் இளைஞர் மன்ற பொறுப்பாளராகிய செந்தில் திருமணம் இன்று காலை இனிதே நடந்து முடிந்தது...
மணமக்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்...