Saturday 22 February 2014

சத்திரமனை கிராமத்தில் உலர் தீவனக் கிடங்கு அமைக்க, தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது என்றார் பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சத்திரமனை கிராமத்தில், கால்நடை வளர்ப்போர்க்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் பருவ மழையில்லாத மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்க, உலர் வைக்கோல் தீவனத்தை மானிய விலையில் தீவன கிடங்குகளின் மூலம் வழங்க, முதல்கட்டமாக ரூ. 12.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் வறட்சி நிவாரணத் திட்டத்தில் சத்திரமனை கிராமத்தில் உலர் தீவன கிடங்கு அமைக்க ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  கால்நடைகளுக்கு 1 கிலோ வைக்கோல் ரூ. 2 வீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில், ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு வாராந்திர தேவையின் அடிப்படையில், வாரம் ஒரு முறை 105 கிலோ இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கால்நடை வளர்ப்போர் தங்களது குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு 2 போட்டோ, கால்நடைகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகங்களில் அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.  பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் அட்டை மூலம், தீவனக் கிடங்கில் மானிய விலையில் வைக்கோல் பெற்றுக்கொள்ளலாம். சத்திரமனை தீவன கிடங்கு மூலம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், 2-ம் கட்டமாக வி.களத்தூர் கால்நடை மருந்தக வளாகத்தில் அமைக்கப்படும் தீவனக் கிடங்கு மூலம் 29 கிராம ஊராட்சிகளும், கொளக்காநத்தம் கால்நடை மருந்தக வளாகத்தில் அமைக்கப்படும் தீவன கிடங்கு மூலம் 39 கிராம ஊராட்சிகளில் உள்ள கால்நடைகளும் பயன்பெற உள்ளன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பெரம்பலூர் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.பி. மருதராஜா, துணைத் தலைவர் சி. பிச்சைபிள்ளை, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சந்திரசேகர், உதவி இயக்குநர் மனோகரன், வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) ஆல்பிரட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

நன்றி-தினமணி.

Friday 21 February 2014

சென்னை : தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு, 43,051 மையங்கள் மூலம், நாளை 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஜனவரி 19ம் தேதி மற்றும் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.2ம் கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் 2ம் கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் உள்பட 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டாம் தவணையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து டுக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி சார்பில் 2ம் கட்ட தவணையாக நாளை சென்னை முழுவதும் 1,325 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி-தினகரன்

Thursday 20 February 2014

கே.வெங்கடேசு (வலது ஓரமாக)
தமிழ்நாடு அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான மென்பொருள் போட்டிகளில் வ.களத்தூர் கிராமத்தை சேர்ந்த கே.வெங்கடேசு வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் . FACEBOOK ல்அவருக்கு உங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க  https://www.facebook.com/vengatesh.surya

 தினமணியில் செய்தி

 பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை, அறிவியல் கல்லூரியின், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மென்பொருள் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
கே.வெங்கடேசு

திருச்சி மாவட்டம், சிறுகனூர் எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரியில், 54 கல்லூரிகள் பங்கேற்ற மென்பொருள் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை, அறிவியல் கல்லூரி கணினி துறை மாணவர்கள் ஆர். அய்யப்பன், எ. சிவகிரி, கே. அரவிந்த், கே. வெங்கடேசு, பி. ராஜ்குமார், எம். பாலகிருஷ்ணன், என். பிரபா, ஆர். அனிதா, ஆர். ஆனந்தி, தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் ஆர். பிரவீன், எஸ். தீபிகா, எம். ரமேஷ், எஸ். திவ்யா ஆகியோர் பங்கேற்று அட்ஜிப் கேம்ஸ் போட்டிகளில் முதல் பரிசு, வினாடி வினா போட்டியில் இரண்டாம் பரிசு, டீம் வொர்க் போட்டியில் மூன்றாம் பரிசுகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்த போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி ஆசிரியர்களையும், கல்லூரி தாளாளர் கே. வரதராஜன், கல்லூரி முதல்வர் வே. அயோத்தி, துணை முதல்வர் கோ. ரவி, கல்லூரி முதன்மையர் ஏ. சேவியர் அமலதாஸ் ஆகியோர் புதன்கிழமை பாராட்டி பரிசு வழங்கினர்.

நன்றி-தினமணி.

 
கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அகில உலக விஷ்வ ஹிந்து பரிஷித் ஆலோசகரும், கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான ஸ்ரீ வேதாந்தம்.
பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷித் கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்து இயக்க தலைவர்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களின் சந்திப்பை பல ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்து சமயத்தின் பல பிரச்னைகளை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும், இந்து மதத்தலைவர்களும், பூஜாரிகளும் புறக்கணிப்படுகின்றனர். ஆனால், கிறிஸ்துவ அமைப்பு பிஷப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பு பிரநிதிகளை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை ஏற்று ஆதரவு அளித்து வருகிறார். அதேபோல, இனிவரும் காலங்களில் இந்து மதத் தலைவர்களை சந்தித்து இந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த திமுக ஆட்சி காலங்களில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் கிராம பூசாரிகளுக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு, அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டது. ஆனால், 2013-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் மீண்டும் நல வாரியம் அமைக்கப்பட்டு, கிராம பூசாரிகளுக்கான சலுகைகள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்.
வரும் மக்களவை தேர்தலில், இந்து நலனுக்காக பாதுகாப்பு அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க பேரவை முடிவு செய்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில், 2 ஆயிரம் கோவில்கள் வருவாய் உள்ள கோவில்களாகும். இதில், 7 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, மீதமுள்ள கோவில்களை சீரமைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், கிராம பூசாரிகளுக்காக அறிவிக்கப்பட்ட நல வாரியத்தை அமல்படுத்த, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் மாதத்தில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர். 
பேட்டியின்போது, விஷ்வ இந்து பரிசஷ் மாநில தலைவர் ஆளவந்தார், இணை பொதுசெயலர் ஸ்ரீசுவாமி ஆத்மானந்தா, திருப்போரூர் 15-வது பட்டம் சிதம்பர சுவாமி திருமட ஸ்ரீலஸ்ரீ முருகசிவபிராகசம் சுவாமிகள், அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள்,  கிராமக்கோவில் பூசாரிகள் பேரவையின் திருச்சி கோட்ட பொருப்பாளர் பட்டாபி ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி-தினமணி

                  
கூலிக்கு மா(ர்கஸ்)ரடிக்கும் மனிதஉரிமை வியாபாரி
   “கடந்த சில வருடங்களாக அ.மார்க்ஸ் செய்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு– இந்திய எதிர்ப்பு அரசியல் அப்பட்டமான ஒரு கூலித்தொழில். அதில் எந்த விதமான அடிப்படை நேர்மையையும் அவரிடம் எதிர்பார்க்க இயலாது. அவர் மறைமுகமாகச் சார்ந்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கொடுக்கும் துண்டுப்பிரசுரங்களுக்கும் அவரைப்போன்றவர்கள் எழுதும் ஒருபக்கம் சார்ந்த கட்டுரைகளுக்கும் அப்பால் அவர் எதையுமே படிப்பதில்லை. அவரது கருத்துக்கள் இவற்றிலிருந்து பெறப்பட்டவை. நாளிதழ்களை வாசிப்பவர்களுக்கு சாதாரணமாக இவற்றின் உண்மைநிலை தெரியும். ஆனால் தன் கருத்துக்கள் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டால் அ.மார்க்ஸ் அதைப்பற்றிக் கவலைப்படப்போவதும் இல்லை. அடுத்த அவதூறை கிளப்புவார். அதற்கு நாம் பதில் சொல்லப்போனால் அடுத்த அவதூறு”. 


   இது ஜெயமோகன் தனது வலைதளத்தில் மார்க்ஸ் பற்றி குறிப்பிடும் ஒரு விமர்சனம். http://www.jeyamohan.in/?p=799 

    நமது வ.களத்தூரில் சென்றவருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்து-முஸ்லிம் தகராறு தொடர்பாக இதே கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்தான் உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் ஊரை ஒரு வலம்வந்து வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் இந்துக்களின் மீது அபாண்டமாக குற்றம்சுமத்தி  ஒரு அறிக்கை தயாரித்து மாவட்ட ஆட்சியரிடமும் , மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரிடமும் சமர்பித்தனர் . ஊடகங்களுக்கு அறிக்கை தரப்பட்டதுடன், இணையதளங்களிலும் பரப்பப்பட்டது. அதன்மூலம் மதநல்லிணக்கத்தை கேலிக்கூத்தாக்கியதொடு மட்டுமல்லாமல் வ.களத்தூர் இந்துக்கள்தான் பிரச்சினைக்கு முழுமுதற் காரணம் என நிறுவமுயன்றனர். 
  http://vkalathurseithi.blogspot.in/2013/10/blog-post_25.html 

           பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மற்றொரு உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு,  வ.களத்தூரின் உண்மைநிலை என்ன என அறிக்கை தந்ததன் காரணமாக இந்துக்களின் மீதான பழி ஓரளவேனும் துடைக்கப்பட்டது. http://vkalathurseithi.blogspot.in/2013/10/v.html 


       தற்பொழுது இதே மாரடிக்கும் கும்பல்,  இராமநாதபுரத்தில் சமீபத்தில், இஸ்லாமிய ஜிகாதிகளால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் பற்றி உண்மை கண்டறியும் குழு என்றபோர்வையில் ஒரு அறிக்கை தயாரித்து,  அதை வ.களத்தூர் பிரச்சினைகளில் இவர்கள் என்ன செய்தார்களோ அதே  உத்தியை கையாண்டு வன்முறை கும்பலை கட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறை மீது களங்கம் கற்பிக்க முயலுகிறார்கள்.  

பரிந்துரைகள்
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
- See more at: http://www.vkalathur.com/?p=16884#sthash.6cKLWS08.dpuf

 ////////////////
 1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும். - 

2. பழிவாங்கும் நோக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 3. காவல்துறையினர் மதத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதை கண்காணிப்பாளரிடம் நாங்கள் குறிப்பிட்டபோது அவர், தாக்குதல் நடக்கும்போது இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்பதுபோல எதிர்வினையாற்றி, எனினும் அதை விசாரிப்பதாகக் கூறினார். காவல்துறை மத்தியில் உள்ள சார்புத் தன்மையையே இது காட்டுகிறது, புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும் அறிஞருமான மறைந்த பாலகோபால் அவர்கள் கூறியுள்ளதைப்போல காவல்துறை, நீதித்துறை முதலியன சிறுபான்மையினர் மற்றும் அடித்தள மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதற்கு அவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகளின் மீது இத்துறையினர் கொண்டுள்ள வெறுப்பைக் காட்டிலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்களின் மீதுள்ள வெறுப்பே காரணமாகிறது. சச்சார் குழு அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதைப்போல, முஸ்லிம்கள் அதிகமுள்ள இராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் காவலர்களும், அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.

 4. காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். உடைக்கப்பட்ட காமிராக்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

 5. இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் ஒரு குறிபிட்ட கட்டிடத்திலிருந்து கல்லெறிந்தனர் என முஸ்லிம்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டை எங்களின் ஒரு நாள் விசாரணையில் உறுதி செய்ய இயலவில்லை. எனினும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் இப்படியான ஒரு ஐயம் உருவாவது நல்லதல்ல. இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊர்வலத்தினரால் பிடித்துக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்டுதல் அவசியம்.

6. கிழக்குக் கடற்கரை ஓரப்பகுதிகளில், குறிப்பாக இராமநாதபுரத்தில் மதக் கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருப்பது கவலை அளிக்கிறது. இரு சமூக அமைப்புகளும் இது குறித்துப் பொறுப்பாக நடந்துகொள்வதோடு, பிற அரசியல் கட்சிகளும் சமூக இணக்கத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும். -///////////


                  பரிந்துறைகளிலிருந்து ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ளலாம். கலவரம் நடக்க காரணமே,  காவல்துறையும்,  இந்துக்களும்தான் என நிறுவமுயலும் இந்த மா(ர்க்ஸ்)ரடிக்கும் கும்பலின் உள்நோக்கம் தெரிந்துவிடுகிறது. மேலும் நேர்மையான அதிகாரியான திரு.வெள்ளைத்துரை போன்றவர்களை தண்டிக்க கோருவதன்மூலம்,  இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் நமக்கு என்வம்பு என ஒதுங்கிபோகவேண்டும் என விரும்புகிறார்கள். மேலும் இந்த கலவரத்திற்கும் இந்துக்களுக்கும் தொடர்பு இல்லாத நிலையில் அவர்களை உள்ளே இழுத்துவிட்டு மதகலவரமாக இந்த சம்பவத்தை மாற்ற முயலுகிறார்கள்.

               தமிழ்நாட்டில் எங்கு பிரச்சினை நடந்தாலும் இந்த மாரடிக்கும் கும்பல் கூலிக்கு மாரடிக்க கிளம்பிவிடுகிறது. சமூக நல்லிணக்கத்தோடு வாழும் தமிழ் மக்களை இதுபோன்ற கைக்கூலிகள் சாதிரீதியாகவும், மதரீதியாகவும் பிரிக்க முயலும் இந்த கூட்டத்தை இனம் கண்டு களையெடுப்போம்.
பரிந்துரைகள்
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
- See more at: http://www.vkalathur.com/?p=16884#sthash.6cKLWS08.dpuf
பரிந்துரைகள்
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
- See more at: http://www.vkalathur.com/?p=16884#sthash.6cKLWS08.dpuf
பரிந்துரைகள்
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
- See more at: http://www.vkalathur.com/?p=16884#sthash.6cKLWS08.dpuf
பரிந்துரைகள்
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
- See more at: http://www.vkalathur.com/?p=16884#sthash.6cKLWS08.dpuf
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
2. பழிவாங்கும் நோக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. காவல்துறையினர் மதத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதை கண்காணிப்பாளரிடம் நாங்கள் குறிப்பிட்டபோது அவர், தாக்குதல் நடக்கும்போது இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்பதுபோல எதிர்வினையாற்றி, எனினும் அதை விசாரிப்பதாகக் கூறினார். காவல்துறை மத்தியில் உள்ள சார்புத் தன்மையையே இது காட்டுகிறது, புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும் அறிஞருமான மறைந்த பாலகோபால் அவர்கள் கூறியுள்ளதைப்போல காவல்துறை, நீதித்துறை முதலியன சிறுபான்மையினர் மற்றும் அடித்தள மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதற்கு அவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகளின் மீது இத்துறையினர் கொண்டுள்ள வெறுப்பைக் காட்டிலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்களின் மீதுள்ள வெறுப்பே காரணமாகிறது. சச்சார் குழு அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதைப்போல, முஸ்லிம்கள் அதிகமுள்ள இராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் காவலர்களும், அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.
- See more at: http://www.vkalathur.com/?p=16884#sthash.6cKLWS08.dpuf
பரிந்துரைகள்
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
2. பழிவாங்கும் நோக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. காவல்துறையினர் மதத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதை கண்காணிப்பாளரிடம் நாங்கள் குறிப்பிட்டபோது அவர், தாக்குதல் நடக்கும்போது இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்பதுபோல எதிர்வினையாற்றி, எனினும் அதை விசாரிப்பதாகக் கூறினார். காவல்துறை மத்தியில் உள்ள சார்புத் தன்மையையே இது காட்டுகிறது, புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும் அறிஞருமான மறைந்த பாலகோபால் அவர்கள் கூறியுள்ளதைப்போல காவல்துறை, நீதித்துறை முதலியன சிறுபான்மையினர் மற்றும் அடித்தள மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதற்கு அவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகளின் மீது இத்துறையினர் கொண்டுள்ள வெறுப்பைக் காட்டிலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்களின் மீதுள்ள வெறுப்பே காரணமாகிறது. சச்சார் குழு அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதைப்போல, முஸ்லிம்கள் அதிகமுள்ள இராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் காவலர்களும், அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.
4. காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். உடைக்கப்பட்ட காமிராக்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
5. இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் ஒரு குறிபிட்ட கட்டிடத்திலிருந்து கல்லெறிந்தனர் என முஸ்லிம்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டை எங்களின் ஒரு நாள் விசாரணையில் உறுதி செய்ய இயலவில்லை. எனினும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் இப்படியான ஒரு ஐயம் உருவாவது நல்லதல்ல. இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊர்வலத்தினரால் பிடித்துக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்டுதல் அவசியம்.
6. கிழக்குக் கடற்கரை ஓரப்பகுதிகளில், குறிப்பாக இராமநாதபுரத்தில் மதக் கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருப்பது கவலை அளிக்கிறது. இரு சமூக அமைப்புகளும் இது குறித்துப் பொறுப்பாக நடந்துகொள்வதோடு, பிற அரசியல் கட்சிகளும் சமூக இணக்கத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும்.
- See more at: http://www.vkalathur.com/?p=16884#sthash.6cKLWS08.dpuf
பரிந்துரைகள்
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
2. பழிவாங்கும் நோக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. காவல்துறையினர் மதத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதை கண்காணிப்பாளரிடம் நாங்கள் குறிப்பிட்டபோது அவர், தாக்குதல் நடக்கும்போது இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்பதுபோல எதிர்வினையாற்றி, எனினும் அதை விசாரிப்பதாகக் கூறினார். காவல்துறை மத்தியில் உள்ள சார்புத் தன்மையையே இது காட்டுகிறது, புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும் அறிஞருமான மறைந்த பாலகோபால் அவர்கள் கூறியுள்ளதைப்போல காவல்துறை, நீதித்துறை முதலியன சிறுபான்மையினர் மற்றும் அடித்தள மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதற்கு அவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகளின் மீது இத்துறையினர் கொண்டுள்ள வெறுப்பைக் காட்டிலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்களின் மீதுள்ள வெறுப்பே காரணமாகிறது. சச்சார் குழு அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதைப்போல, முஸ்லிம்கள் அதிகமுள்ள இராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் காவலர்களும், அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.
4. காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். உடைக்கப்பட்ட காமிராக்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
5. இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் ஒரு குறிபிட்ட கட்டிடத்திலிருந்து கல்லெறிந்தனர் என முஸ்லிம்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டை எங்களின் ஒரு நாள் விசாரணையில் உறுதி செய்ய இயலவில்லை. எனினும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் இப்படியான ஒரு ஐயம் உருவாவது நல்லதல்ல. இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊர்வலத்தினரால் பிடித்துக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்டுதல் அவசியம்.
6. கிழக்குக் கடற்கரை ஓரப்பகுதிகளில், குறிப்பாக இராமநாதபுரத்தில் மதக் கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருப்பது கவலை அளிக்கிறது. இரு சமூக அமைப்புகளும் இது குறித்துப் பொறுப்பாக நடந்துகொள்வதோடு, பிற அரசியல் கட்சிகளும் சமூக இணக்கத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும்.
- See more at: http://www.vkalathur.com/?p=16884#sthash.6cKLWS08.dpuf
ஊரெல்லாம் ஒரே போஸ்டர் ஏதோ இராமநாதபுரத்தில் அப்பாவி முஸ்லீம்களை போலீசார் கொலை வெறிக் கொண்டு தாக்கியதாக ஒரே ஒப்பாரி. இதைக்கண்டித்து ஆர்பாட்டங்கள் வேறு. கடத்தல்காரன் கொலைகாரன் கொள்ளைக்காரன் இவர்களுக்கு எல்லாம் விஐபி அந்தஸ்து கொடுக்கும் நக்கீரன் பத்திரிக்கை இந்துக்கள் முஸ்லீம்களை தாக்கியதாக குற்றச்சாட்டு வேறு! இப்படியெல்லாம் தமிழகத்தில் நடந்திருக்குமா அதுவும் இந்துக்களின் அடிப்படை வழிப்பாட்டு உரிமைகளைக் கூட தட்டிப் பறிக்கும் திரு. நந்தகுமார் அவர்கள் ஆட்சியாளராக இருக்கும் இராமநாதபுரத்தில் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது? 



18.02.2014 தேதியிட்ட அனைத்து பத்திரிக்கைகளிலும் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) ஊர்வலம் நடத்தியதை தடுத்த போலீசார் மீதும் அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. உண்மை இப்படி இருக்க வீரப்பன் விசுவாசி நக்கீரனுக்கு இந்துக்கள் தாக்குதல் நடத்திய செய்தியை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. கலவர களத்திலிருந்து ஒவ்வொரு செய்திகள் குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சிறப்பு பிரதிநிதி வீர வேலு நாச்சியார் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களையும் பொது மக்களையும் தொடர்புகொண்டு பேசினார். 

17.02.2014 அன்று இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற அடிப்படைவாத முஸ்லீம் அமைப்பினர், இயக்க தினம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கோரினர். கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன், இந்துக்கள் அதிகம் வசிக்கும் குமாரய்யா கோவில் பகுதி அருகிலிருந்து ஊர்வலத்தைத் தொடங்கி, அடிப்படைவாத முஸ்லீம் அமைப்புக்களின் ஆதிக்கம் அதிகமுள்ள சின்னக்கடை வழியாக ஊர்வலப் பாதையை முடிவு செய்திருந்தனர். இந்தச் சதித்திட்டத்தை உணர்ந்த காவல்துறை, பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளித்து, ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது
ஊர்வலம் செல்லமாட்டோம் என்ற நிபந்தனையை ஒத்துக்கொண்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், 17.02.2014 மாலை 4 மணி அளவில், "குமாரய்யா கோவில் அருகிலிருந்து சீருடை அணிந்து, பேண்டு வாத்தியங்களுடன், அணிவகுப்பு நடத்துவோம்’’ என்று பிடிவாதம் பிடித்தனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வேன், கார் போன்ற வாகனங்களில் நீளமான கொம்புகளில் கொடியைக்கட்டிக்கொண்டு சாரை சாரையாக அடிப்படைவாத முஸ்லீம்கள் வந்திறங்கினர். இதில் பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், பள்ளிமாணவ மாணவிகளும் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படும் திட்டத்துடன் அழைத்துவரப்பட்டனர். சிறிது நேரத்தில் இந்தக் கூட்டம் சுமார் 2000த்தை எட்டிவிட்டது. இந்நிலையில், காவல்துறையினர் ஊர்வலக்காரர்களைக் கலைந்து செல்ல வேண்டியபோது, ADSP திரு.வெள்ளத்துரை அவர்கள் மீது வாகனத்தை ஏற்றிக் கொல்ல முயற்சித்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதலிலிருந்து அவர் உயிர் தப்பினார்.


 
இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்குப் பின்னும், காவல்துறையினர் முஸ்லீம் கலகக்காரர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடக்கும்போதே, பி.எப்.ஐ தீவிரவாதிகள் தடையை மீறி ஊர்வலத்தை தொடங்க, வேறுவழியின்றி போலீசார் தடியடி நடத்தினர். ஊர்வலப்பாதையெங்கிலும் மூன்றடி இடைவெளியில் வலுவான கம்பங்களில் பி.எப்.ஐ கொடிகள் கலவரத்திட்டத்துடன் நடப்பட்டிருந்ததாக பாரதி நகரைச் சேர்ந்த சுதாகர் தெரிவித்தார். இவரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்தக் கொடிக்கம்பங்கள் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் ஆயுதமாக மாறியது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்த ஒரு இடிபட்ட கட்டிடம், இவர்களுக்கு கலவரம் செய்ய போதுமான கற்களையும் கொடுத்தது. இதுதவிர மிளகாய்ப் பொடி, இரும்புக் கம்பிகள் போன்றவையும் கலவரக்காரர்களால் பயன்படுத்தப்பட்டது.  

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் சில நிமிடங்கள் போலீசார் திக்குமுக்காடிப் போனார்கள். இந்தத் தாக்குதலில் ஆய்வாளர் திரு.இராஜாமணி உட்பட 16 காவலர்கள் பலத்த காயமுற்றனர். நிலமை கட்டுக்கடங்காமல் போகவே, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளைவீசி கூட்டத்தை கலைத்தனர்.

 17.02.2014 அன்று மதியத்திலிருந்தே இந்த முஸ்லீம்களின் கூடுதலும், அவர்களின் செயல்பாடுகளும், ஒரு கலவரச் சூழலை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்ததால், மதிய உணவிற்குப்பின் பெருவாரியான வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை, ஒருசில கடைகள் மட்டுமே திறந்திருந்தன என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் போலீசாரின் தடியடியால் திபு, திபு என்று ஒடிவந்த பி.எப்.ஐ கலவரக்காரர்கள் திறந்திருந்த மெக்கானிக் பட்டறைக்குள் நுழைந்ததை அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஆட்சேபித்தனர். ஆத்திரமுற்ற முஸ்லிம் கலவரக்காரர்கள், கையில் ரட்சையும், நெற்றியில் திலகமும் அணிந்திருந்த பிரவீன் என்ற ஒரு தொழிலாளியை கொடிக்கம்பத்தால் அடிக்கத்தொடங்கினர். இவரை தரையில்போட்டு கொலைவெறியுடன் கழுத்தில் மிதித்தனர். இந்தத் தாக்குதலில் மயங்கிய பிரவீனை டாடா சுமோ வாகனத்தில் தூக்கிப்போட்டுக்கொண்டு முஸ்லீம் கலவரக்காரர்கள் செல்வதைப் பார்த்த காவல் துறையினர் துரத்திச் சென்று அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். 

ramanathapuram pfi praveen victim
மருத்துவமனையிலிருந்து திரு.பிரவீன் தொலைபேசியில் நமக்கு அளித்த பேட்டியில்
// நான் எப்பொழுதும் நெற்றியில் செந்தூரமும், கைகளில் காப்பு கயிறும் அணிந்திருப்பவன். குமாரய்யா கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மெக்கானிக் பட்டறையில் வேலை பார்க்கிறேன். சம்பவம் நடந்தபோது பட்டறையின் உரிமையாளர் சாப்பிட வெளியே சென்றிருந்தார். நாலு மணிவாக்கில் போலீஸ் தடியடி நடத்தியபோது கூட்டத்திலிருந்து ஒடி வந்த ஒரு கும்பல் எங்கள் பட்டறைக்குள் புகுந்தது. அவர்களை வெளியே போகுமாறு சொன்னேன். உடன் அவர்கள் என்னை கடுமையாக தாக்க தொடங்கினார்கள். கும்பலில் இருவர் என் இரு கைகளையும் தப்பி ஓட முடியாமல் பிடித்துக்கொண்டு விட்டனர். கும்பலில் இருந்த மற்றவர்கள் கொடிக் கம்பங்களை கொண்டு தாக்கினார்கள். பட்டறையில் என்னைத் தவிர இன்னும் ஐந்துபேர் இருந்தார்கள் அவர்கள் என்னை அடிக்கவேண்டாம் என்று கூறியும் விடாமல் என்னை முஸ்லிம் கலவரக்காரர்கள் அடித்தனர். மேலும் என்னை அவர்கள் சுமோ வேனில் தூக்கி போட்டுக் கொண்டு சென்று விட்டனர். இதைப் பார்த்த போலீஸார் என்னை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். மதியம் சாப்பிட கடையை மூடி சென்றவர்கள் யாரும் கடை திறக்கவில்லை. இந்து மதச்சின்னங்களை அணிந்து இருந்ததால் என்னை அவர்கள் தாக்கினார்கள்.

இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். கழுத்தை திருப்பவே முடியவில்லை. மருத்துவமனையிலிருந்து நாளை டிஸ்சார்ஜாகும் படி சொல்கிறார்கள். அடித்தவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடி மூலம் தங்கள் முகத்தை மறைத்திருந்தனர் அதனால் அவர்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை.//  என்று தெரிவித்தார். 

இந்த தொலைபேசி உரையாடலின்போது, கூட்டமாக குமாரய்யா கோயில் பகுதியைச் சார்ந்த முஸ்லீம் வியாபாரிகள் மருத்துவமனைக்குள் புகுந்தனர். அவர்கள் பிரவீனிடம் ’’ நீ தனியாக வழக்கு கொடுக்காதே, உனக்காக யாரும் வரமாட்டார்கள் உன் வேலை பாதிக்கப்படும்.” என்று மிரட்டியதை அருகிலிருந்த சுதாகர் நமக்குத் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள், இந்துக்கள் செந்தூரமும், ரட்சையும் அணிவதால் கலவரம் வருகிறது, அதை தடை செய்யுங்கள் என்று உத்திரவிட்டதை நம் வலைத்தளம் ஏற்கனவே பதிவிட்டிருந்தது.  


இந்த ஆணையை நிறைவேற்றுகிறோம் என்று மாணவ மாணவிகளின் கையிலுள்ள கயிற்றை அறுத்த அழகன்குளம் முகமதியா பள்ளி மாணவர்களும் இந்த ஊர்வலத்தில் பள்ளிச் சீருடையுடன் கலந்துகொண்டனர் என்றார் சுதாகர். இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதத்தை திருப்திப்படுத்த இந்துக்களின் அடிப்படை உரிமையைப் பறித்த கலெக்டர் நந்தகுமார், இந்தக் கலவரத்திற்குப்பின் ஒட்டுமொத்தமாக எல்லா இந்துச் சின்னங்களுக்கும் தடைவிதிப்பாரோ? செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கலெக்டர் அலுவலக வளாகத்தில் காவல் நிலையம் தாக்கப்பட்டபோது கூட கண்டுகொள்ளாதவர்தானே இவர் !  

http://vsrc.in/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/item/185-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/itemid-224

இந்தக்கலவரத்தில், தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரியும் திரு.சாமுவேல் அவர்களும் தாக்கப்பட்டார். அழகன்குளம் கிராமத்தில், கோயில் அருகாமையில் பக்ரீத் அன்று முஸ்லீம்கள் பசுவதை செய்தனர். இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்த இந்துக்கள் மீது பொய்வழக்குத் தொடுத்தவர் இந்த சாமுவேல். இப்படிப்பட்ட முஸ்லீம் விசுவாசியைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த வன்முறையாளர்கள்! முஸ்லீம்களின் ஆதரவுக்காக அவர்களை நம்பி சட்டவிரோதமாகவும், தர்ம விரோதமாகவும் செயல்படும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தத் தாக்குதல் பாடமாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.  



இந்தக் கலவரம் தொடர்பாக 1100 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக மாவட்டக் கண்காணிப்பாளர் அவர்கள் பத்திரிகைச் செய்தி விடுத்துள்ளார். இப்படி பெயர் தெரியாத 1000 பேர் என்று போடப்பட்ட வழக்குகள் இன்றுவரை சரியான முறையில் நடத்தப்பட்டதில்லை.
 

பா.ஜ.க தலைவர் திரு.H.இராஜா அவர்கள் 26.10.2012 அன்று இளையங்குடியில் தாக்கப்பட்டபோது இது போல் பெயர் குறிப்பிடப்படாமல் பல நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

//இந்தக்கலவரத்தில் ஈடுபட்ட பலர் வெளிமாவட்டக்காரர்கள்// என்கிறார் பாரதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம். மேலும், இந்த ஊர்வலத்தில் //போர்க்கலைப் பயிற்சிபெற்ற கேரளத்தைச் சார்ந்த பலரும் இருந்தனர் என்கிறார் அவர்.

//முஸ்லீம் தரப்பில் 17 பேர் அடிபட்டு வந்தார்கள். அதில் நாலு பேர் மட்டும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் எங்கள் ஊர் மதுரை எங்களை மதுரைக்கு மாற்றிக்கொடுங்கள் என்று கேட்டு எழுதி வாங்கி கொண்டுபோய்விட்டார்கள். இந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் நிறைய பேர் வெளியூர்கார்கள் தான். கேரளா, மற்றும் மதுரையை சேர்ந்தவர்களும் இருந்தனர். உள்ளூர்க்காரர்கள் மிகக் குறைவுதான். கோரிப்பாளையம், அழகன் குளம், புதுமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்// என்றார் ஒரு மருத்துவமனைப் பணியாளர் .

02.02.2014 அன்று கலெக்டர் அலுவலகம் அருகில் கேணிக்கரைக் காவல் நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்திலும், வெளியூர் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டதை நம் வலைத்தளம் குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். இப்படி, கலவரம் செய்வதற்கென்றே ஒரு படையை திட்டமிட்டு இஸ்லாமியர்கள் எல்லாப் பகுதிகளிலும் ஏற்படுத்தியுள்ளனர். சொந்த ஊரில் கலவரம் செய்ய வெளியாட்களுக்கு திட்டம் போட்டுக் கொடுத்துவிட்டு, ’’எங்களுக்கு எதுவுமே தெரியாது’’ என்று கையை விரித்து விடுவார்கள். கையை விரிக்கும், இவர்கள் வேறு ஊரில் சென்று தாக்குதலில் ஈடுபடுவார்கள்.

இந்த பயங்கரவாதப் பறக்கும் படை (Floating terror group) கலாச்சாரம், 25.10.2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு தாக்குதலிலும், 16.04.2013 அன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் தாக்குதலிலும் தன் முகத்தைக் காட்டியுள்ளது

இந்த முஸ்லிம் பறக்கும் படைகளுக்கு நாடு முழுவதும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே இராமநாதபுரத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஹசன் அலி அவர்கள் ஊரான பெரியபட்டணத்தில் 25.06.2012 ஆம் தேதி ஆயுதப் பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்றனர். கையும் களவுமாக பிடித்தபின்னரும், இவர்கள் மீது எந்த வழக்கும் போடாமல் காவல்துறையினர் விடுவித்ததின் விளைவு, இன்று காவல்துறையினருக்கே காவல் வேண்டிய நிலைக்கு இராமநாதபுரத்தைத் தள்ளிவிட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களை, கேரளத்திலிருந்து வந்த PFI நிறுவனர் பார்த்துச் சென்றதாகச் சொன்னார் திரு.சுதாகர். 


இன்று இராமநாதபுரத்தில், ஒரு சாதாரண முஸ்லீம்கூட பயங்கரவாதத்திலோ, அல்லது அவற்றின் தொடர்பிலோ இருப்பது சகஜமாகிவிட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழிநெடுகிலும் உள்ள இஸ்லாமியர்கள், தங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுத்தனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இராமநாதபுரம், மதுரை ரோட்டில் அமைந்துள்ள பயோனியர் மருத்துவமனை, காயம்பட்டவர்களின் விவரங்களை காவல்துறையினருக்குத் தெரிவிக்காமல் சிகிச்சை கொடுத்து அனுப்பிவைத்தது. இச்செயலைச் செய்தவர் டாக்டர் சையது இப்ராஹிம் என்ற முஸ்லீம் என்றார் பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த திரு.சரவணன்.
பயங்கரவாதம் என்றாலே மக்களின் மனதில் பயங்கர கிலியை ஏற்படுத்துவது அதன் மூலம் பயங்கரவாதிகளின் பிடியில் ஒரு சாமானிய மனிதனையும் அரசாங்கத்தையும் கொண்டு வருவதே இவர்களின் நோக்கமாகும். எந்தவொரு சின்ன பிரச்சினையாக இருந்தாலும்  பெரும் திரளாக கூடுவதும் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கவைப்பதும் அதன் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் இஸ்லாமியர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு புறம் வெடிகுண்டு தாக்குதல் துப்பாக்கி தாக்குதல் மூலமும் மறுபுறம் எண்ணிக்கையை காட்டி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் தந்திரத்தையும் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் innocence of muslims  என்ற திரைப்படம் வெளியிட்ட போது  இந்தியாவில் அது தடை செய்யபட்டிருந்தும் நான்கு நாட்கள் சென்னை அண்ணாசாலையை ஸ்தம்பிக்க வைத்து வெறியாட்டம் ஆடினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்நிலையம் மற்றும் பல கட்டப்பஞ்சாயத்துகளில் முஸ்லீம்கள் அதிகளவில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த அச்சுறுத்தும் திரட்சிக்கு இவர்கள் பொது வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்யும் நிகழ்வுகளே காரணமாகிறது. இந்த PFI  ஊர்வலத்தினால் மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மிகவும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளை திட்டமிட்டு தடையை ஏற்படுத்தி தங்களை அளப்பரிய பெரிய சக்தியாக வெளிக்காட்டுவதால் ஏற்படும் அச்ச உணர்வினை வைத்து லாபம் தேடிக்கொள்கின்றனர் இந்த இஸ்லாமியர்கள். இப்படிப்பட்ட போராட்டங்கள் தான் சுற்றுலா தளமாகிய காஷ்மீரத்தை சுடுக்காடாகியுள்ளது.

1980 களில் காஷ்மீரில் வெகுஜன முஸ்லீமும்கூட இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் ஆதரவளித்தான். அன்றும், முஸ்லீம் ஓட்டுக்காக கடும் நடவடிக்கை எடுக்க அரசு தவறியது. இஸ்லாமிய வன்முறைக்கு பயந்து மண்டியிட்டது. அடிப்படைவாத முஸ்லீம் கோரிக்கைகளை ஏற்று இந்துக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தது. இன்று காஷ்மீரின் நிலை என்ன? இப்போது அதே நிலை நம் இராமநாதபுரத்திற்கும் வந்துவிட்டது.

முஸ்லீம்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதுடன், அதை எதிர்க்கும் தேசபக்தர்கள் மீது பொய் வழக்குப் போடுவது, பாரம்பரியமாக நடக்கும் திருவிழாக்களை இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லித் தடைவிதிப்பது, இந்துச் சின்னங்களை தடை செய்வது என்று படிப்படியாக காஷ்மீர் நிலைக்கே இராமநாதபுரம் மாவட்டத்தைக் கொண்டு சென்று விட்டது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும். இன்று காஷ்மீரில் காவல்துறை செயலற்றுப் போனதுபோல், இங்கும் பல இடங்களில் காவல்துறை கீழ்ப்படுத்தப்பட்டதோடு, ஸ்ரீநகர் வீதிகளில் நடக்கும் காட்சிகள், இராமேஸ்வரம் நெடுஞ்சாலையிலும் அரங்கேற்றப்படுகிறது.

இப்போதாவது விழித்துக்கொண்டு மத்திய மாநில அரசுகள்பயங்கரவாதக் காஷ்மீராக மாறிவரும்  இராமநாதபுரத்தைக்” காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்களா? 

நன்றி-vedic research centre.

Wednesday 19 February 2014


DRO சுப்பிரமணியன்
பெரம்பலூர்: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டு தொடர்ந்து பணியாற்றினால் ஜன., 31ம் தேதிக்குள் அவர்களை கூண்டோடு இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் கடந்த ஜன., 16ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. 3 ஆண்டுகள், அதற்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் அலுவலர்கள் அதிக அளவில் உள்ளனர்.
ஒரே இடத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகு மேல் பணியாற்றுவதால் ஆளுங்கட்சியினருடன் இவர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் பெரம்பலூர் லோக்சபா தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகள் மீறுவதை இந்த அலுவலர்கள் கண்டும்காணாமல் இருக்கும் நிலை ஏற்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள், அதற்கு மேல் பணியாற்றும் அலுவலர்களையும், ஆளுங்கட்சி ஆதரவு அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவுக்கு மதிப்பில்லை. அதிகாரிகள் இடமாற்றத்தில் மெத்தனம் என்ற தலைப்பில் கடந்த 10ம் தேதி காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலைக்கதிர் செய்தி எதிரொலியாக பெரம்பலூர் டி.ஆர்.ஓ., சுப்ரமணியன் கடலூர் மாவட்ட அரசு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராகவும், பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பணியாற்றி வந்த உமாமகேஸ்வரி, வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட பொது மேலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி-தினமலர்.
ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை ஏதோ ராஜீவ் கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது என்று பார்ப்பதைவிட, தாமதமாக வழங்கப்படும் நீதியைப் போலவே, தாமதமாக செயல்படுத்தப்படும் தண்டனையும் அநீதியானது என்கிற பார்வையில்தான் அணுக வேண்டும்.
ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டது என்பது, தமிழகத்துக்கு ஒரு நிரந்தரக் களங்கம் என்பதிலும், அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத, எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாத "துன்பியல் நிகழ்வு' என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அதே நேரத்தில், அந்தப் படுகொலையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்று நீதிமன்றத்தால் கருதப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கவில்லை என்பதையும் தண்டனை அனுபவித்தவர்கள் அனைவருமே அம்புகள் தானே தவிர, எய்தவர்கள் அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் சில அம்சங்கள் பொட்டில் அடித்ததுபோல, தண்டனைக் கைதிகளின் மனநிலையை வெளிச்சம் போடுகிறது.
"தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மீது எந்தவித முடிவும் எடுக்காமல் 11 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஒப்புக் கொள்ள முடியாது. தண்டனை பெற்ற குற்றவாளிகள் சிறையில் மிகழ்ச்சியாக இருப்பதாக மத்திய அரசு கூறும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தண்டனை பெற்ற கைதிகள் தாங்கள் படும் மனவேதனையை நிரூபிக்கத் தேவையில்லை' என்று தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. எப்போது தூக்கு என்று தெரியாமல் நித்திய கண்டம், பூரண ஆயுசாக அவர்கள் தவித்திருக்கும் தவிப்பை, ராஜீவ் காந்தி கொலையை மறந்துவிட்டு நினைத்துப் பார்த்தால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கும் நியாயம் புரியும்.
இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் ஒரு ஆபத்தும் இருக்கிறது. ஆட்சியாளர்களுடனும், வலிமையான அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடைய ஒருவருக்கு கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவரது கருணை மனு வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்பட்டு, இந்தத் தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு வருங்காலத்தில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. காலதாமத்தைக் காரணம் காட்டி ராஜீவ் கொலையைளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, மாநில அரசின் ஒப்புதலுடன் விடுதலை செய்ய வழிகோலும் அதே வேளையில், கருணை மனுவை நிராகரிக்க கால அளவு நிர்ணயிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்பதால், அதுவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"அரசியலமைப்பின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் (குடியரசுத் தலைவர், ஆளுநர்) தகுதியைத் கருத்தில் கொண்டு, கருணை மனுக்கள் மீது அவர்கள் இத்தனை காலத்துக்குள்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற காலவரம்பை அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்கள் வகுக்கவில்லையே தவிர, நியாயமான காலத்துக்குள் அவர்கள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் நியாயமற்ற, விவரிக்க முடியாத, தேவையற்ற தாமதம் ஏற்படுமானால் அப்போது மனுதாரர்களின் கோரிக்கையில் தலையிட வேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு' என்கிறது தீர்ப்பு.
ராஜீவ் கொலை வழக்கு தண்டனையை ஒதுக்கிவைத்துவிட்டு கருணை மனு மீதான காலதாமதத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பாராட்டுகள். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கும் தமிழக அரசின் முடிவும் வரவேற்புக்குரியது.
கடைசியாக ஒரு கேள்வி - ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியே, ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கும்போது, தமிழக அரசின் முடிவு வேதனை அளிக்கிறது என்றும், முன்னாள் பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் பாமர மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறாரே, குடும்பத்திலேயே குழப்பமா?

நன்றி-தினமணி.

Tuesday 18 February 2014

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூரில் நாளை மறுதினம் (20ம் தேதி) நடைபெற உள்ளது.
 இதுகுறித்து கலெக்டர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நாளை மறுதினம் (20ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண் சம்பந்தமாக நீர்ப்பாசனம், இடுபொருள், வேளாண் இயந்திரம் மற்றும் வேளாண் மேம்பாட்டுத் திட்ட முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவ ட்ட விவசாயிகள் அனை வரும் தவறாது இக்கூட்டத் தில் பங்கேற்பதுடன் தங்கள் பகுதியில் நிலவும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் அதுகுறித்து மனுவாக அளித்து தீர்வு காணலாம் என்றார்.

நன்றி-தினமணி

Sunday 16 February 2014

வ.களத்தூர்ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும்பணி நடைபெற்றது. இன்றுமுதல் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற உள்ளது . வ.களத்தூர் கிராமமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
     
                மேலும், இம்முகாமிற்கு பதிவு செய்யவரும் பொதுமக்கள் அனைவரும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று மற்றும் அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும். 

 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கிராமத்தில் குடியிருப்பு இல்லாதவர்கள், கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக குடியேறியவர்கள், புதியதாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் விபரங்களை பு+ர்த்தி செய்து தாக்கல் செய்திட வேண்டும். மேற்படி புதிய கணக்கெடுப்பு படிவத்தினை தொடர்புடைய வாலிகண்டபுரம்  வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். 

களைகளை கட்டுப்படுத்தும் புதிய தொழில் நுட்பம் விவசாயிகளுக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்தை சேர்ந்த பருத்தி விவசாயிகள் பெரம்பலர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வனிடம், அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் அளித்த மனுவில்:
கடந்த 35 ஆண்டுகளாக பருத்தி விவசாயம் செய்து வருகிறோம். இதில், 2002ம் ஆண்டிலிருந்து பி.டி பருத்தி பயிரிட்டு வருகிறோம். தற்போது பருத்தியில் 2 முறை களை எடுக்க ரூ. 7,000 முதல் ரூ. 8,000 வரை செலவாகிறது. களை எடுப்பதற்கு விவசாய கூலி ஆள்கள் கிடைக்காமல் களைகள் அதிகரிப்பால், மகசூல் இழப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறோம். பி.டி பருத்தியில் களைகளை கட்டுப்படுத்த புதிய தொழில் நுட்பம் உள்ளதாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக அலுவலர்கள் மற்றும் விவசாய அறிஞர்கள் மூலம் அறிந்தோம். இந்த தொழில் நுட்பம் கொண்ட குறிப்பிட்ட களை கொல்லியை பருத்தி வயலில் தெளிக்கும்போது, பருத்திக்கு எவ்வித பாதிப்புமின்றி அனைத்து விதமான களைகளும் அழிந்து, கூடுதல் மகசூல் கிடைப்பது தெரியவந்துள்ளது.
எனவே, வேளாண் வல்லுனர்களையும், தமிழக வேளாண்மை துறை தொழில் நுட்பத்தை வழங்கும் நிறுவனங்களையும் கலந்தாலோசித்து, இதுபோன்ற புதிய வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்க ஆவண செய்து பருத்தி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். 

நன்றி-தினமணி.



பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டமாக அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் நகரில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் கடந்த 1994-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பின்னர், 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி. மணியால் புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 43 வணிக நிறுவனங்களும் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஒப்பந்தம் விடப்பட்டு, அதன்மூலம் நகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது
இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பேருந்து நிலையம், இப்போதும் அதே நிலையில் காணப்படுகிறது.
இங்கு, தனியார் டயர் தொழிற்சாலை, அனைத்து வகையான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், பெரம்பலூர் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிலையம் உள்ளதால் திருச்சி - சென்னை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், சேலம் - அரியலூர் - கும்பகோணம்- தஞ்சாவூர் வழித்தடங்களில் செல்லும் அரசுப் பேருந்துகளும் புறநகர்ப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படுகின்றன. இதனால், புறநகர்ப் பேருந்து நிலையத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதால், ஓட்டுநர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும், ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதாலும், பேருந்து ஓட்டுநர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தங்களது வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல், அவரவர் விருப்பம்போல பேருந்துகளை நிறுத்திச் செல்வதால் பயணிகளும், மற்ற வாகன ஓட்டுநர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, திருச்சி - சென்னை வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்து ஓட்டுநர்களே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, இடப்பற்றாக்குறையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, பேருந்து நிலையம் பின்புறம் காலியாக உள்ள பகுதியை, திருச்சி- சென்னை வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒதுக்கி, வாகன நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி-தினமணி
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப். 26ம் தேதி நடைபெறும் 14-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்க உள்ளார் என்றார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தலைவர் அ. சீனிவாசன்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா பிப். 26ம் தேதி மாலை 5.10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில், தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்று இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர்கள் உள்பட 1,151 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.
இதில், உயிர்வேதியியல் துறை மாணவி சத்யா பல்கலைக் கழக அளவில் முதலிடத்தையும், 62 மாணவிகள் பல்கலைக் கழக அளவில் தர வரிசைகள் பெற்றுள்ளனர். மேலும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
பேட்டியின்போது, செயலர் பி. நீலராஜ், துணைத் தலைவர் சீ. கதிரவன், இயக்குநர்கள் பி. ராஜபூபதி, பி. மணி, நிர்வாக அலுவலர் ஆர். ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.   

நன்றி-தினமணி.