Tuesday 16 December 2014


பெரம்பலூர்- குரும் பலூரில் நடந்த சனி பெயர்ச்சிவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகாரம் செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி பெயர்ச்சி அடைந்ததை யொட்டி சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.

இதனை முன்னிட்டு மதியம் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், மகாதீப ஆரா தனையும் நடந் தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. பூஜைகளை திருச் செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் கவுரி சங்கர் மற்றும் சிவாச்சாரி யார்கள் நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் திருப்பணிகளை மேற்கொள் ளும் தர்மபரிபாலன சங்க பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் அறங்கா வலர் குழு உறுப்பினர் வைத்தீஸ் வரன், சாய்சங்கீத் ரவி, வள்ளி ராஜேந்திரன், கணேசன் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சனிபெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்து கொண் டனர்.


கச்சேரி பிள்ளையார் கோவில்

பெரம்பலூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி பிள்ளையார் கோவி லில் சனிபெயர்ச்சி விழாவை முன்னிட்டு மதியம் வினாயகர் பூஜை, கலசபூஜை, திரவிய ஹோமம், மூலவருக்கு அபிஷே கம் மற்றும் கலச அபிஷேகம் மகாதீப ஆரா தனை நடந் தது.

பூஜைகளை கோவில் அர்ச்சகர் சஞ்சீவி மற்றும் பிரசாத் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில்

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்ம சம்சவர்த்தினி சமேத பஞ்ச நதீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, கலச பூஜை நவக்கிரக ஹோமபூஜை பூர்ணாகுதி மகாதீப ஆரா தனை நடந்தது.

இதில் குரும்பலூர் பேரூ ராட்சி, பாளையம், மேட்டாங் காடு, ஈச்சம்பட்டி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை களை சிவசுப்ரமணிய சிவம் நடத்திவைத்தார். விழா ஏற் பாடுகளை கிருத்திகை விழாக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்

ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் காமாட்சியம் மன் உடனுறை ஏகாம் பரேஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்கு மகா அபிஷே கத்துடன் தீபாரதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர். சனிபகவானால் பாதிக்கப்படும் ராசிக¢காரர் களுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் மற்றும் வழிபாட் டிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் செட்டிகுளம், பொம் மனப்பாடி, சத்த¤ரமனை, வேலூர், இரூர், பாடாலூர், நாரணமங்கலம், மருதடி, குரூர், புதுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங் கலம், கூத்தனூர், ஆலத் தூர்கேட், உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு மற்றும் பரிகார பூஜை கள் செய்து வழிபாடு நடத் தினர்.

செய்தி-தினத்தந்தி., பட உதவி- வசந்தஜீவா.

0 comments:

Post a Comment