Saturday 6 December 2014


பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்த இடமாக கருதப்படும் பிரம்மரிஷி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 32 ஆண்டாவது தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,பின்னர் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறுப்பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைப்பெற்றது........

பட உதவி- வசந்த ஜீவா.

0 comments:

Post a Comment