Tuesday 16 December 2014


பெரம்பலூரில் மார்க்கெட் தெருவில் உள்ள கலாம்ஸ் பயிற்சி நிறுவனம் வினய் கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கிவருகிறது. இந்த அறக் கட்டளையின்கீழ் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கல்வி மற்றும் தகவல்மையம் தொடக்கவிழா கலாம்ஸ் இயக்குனர் பாக்யராஜ் தலை மையில் நடந்தது. அரிமா சங்கத்தின் மாவட்ட ஆலோச கர் ராஜாராம் தமிழ்ப்பல்கலைக் கழக கல்வி மற்றும் தகவல்மையத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத் தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐ.ஜே.கே. மாவட்டத்தலைவர் அசோ கன், அரிமா மாவட்ட தலை வர்கள் இமயவரம்பன், பாடா லூர் மதியழகன், செந்தூர் சுகுமார், வட்டாரத் தலைவர் விஷால் சரவணன், பெரம்ப லூர் சங்கத்தலைவர் முத்துக் குமார், துணைத் தலைவர் ஒஜீர், கட்டிட வல்லுனர்கள் சிவராஜ், மோகன்ராஜ், பெரி யார் தொண்டர் லட்சுமணன், எஸ்.எஸ். பல்பொருள் அங்காடி சென்னன், அன்பு சபியுல்லா, நெற்குணம் ர«¢மஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-தினத்தந்தி...

0 comments:

Post a Comment