Wednesday 19 November 2014


பெரம்பலூர் மாவட்டத்தில் அரையாண்டுதேர்வுகள் பிளஸ்2 விற்கு டிசம்பர் மாதம் 10ம்தேதியும், எஸ்எஸ்எல்சிக்கு டிசம்பர் 12ம்தேதியும் தொடங்குகிறது என  மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்(பொ) கலையரசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புக்கான அரை யாண்டுத்தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கி றது. இதன்படி 12ம்தேதி தமிழ்முதல்தாள், 15ம்தேதி தமிழ் இரண்டாம்தாள், 16ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், 17ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், 19ம்தேதி கணிதம், 22ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூகஅறிவியல் பாடங்களுக்குத் தேர்வுகள் நடக்கிறது. காலை 10மணிக்குத் தொடங்கி 12.45மணிவரை நடைபெறும் இந்தத்தேர்வுகளை உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 125பள்ளிகளை சேர்ந்த மாணவியர் எழுதவுள்ளனர்.
அதேபோல பிளஸ்2 அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10ம்தேதி தொட ங்கி 23ம்தேதி வரை நடக்கிறது. இதன்படி 10ம்தேதி தமிழ் முதல்தாள், 11ம் தேதி தமிழ்இரண்டாம்தாள், 12ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், 15ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், 16ம் தேதி வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவி யியல், 17ம் தேதி கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், அரசியல் அறிவியல், நர்சிங், கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையியல் உள்ளிட்டப் பாடங்களுக்கும், 18ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்டப் பாடங்களுக்கும் நடக்கிறது.
19ம்தேதி கணினிஅறிவியல், உயிர்வேதியியல், டைப்ரைட்டிங், புள்ளியியல் பாட ங்களுக்கும், 22ம்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 23ம்தேதி உயிரியியல், தாவ ரவியல், வரலாறு, வணிகக்கணிதம் பாடங்களுக்கும் நடக்கிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி, பகல் 1.15 மணிவரை நடைபெறும் இத்தேர்வுகளை 65 மேல்நிலைப்பள் ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.
 தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமைஆசிரியர்கள் செய்து வருகின்றனர் எனத்தெரிவித் துள்ளார்.

0 comments:

Post a Comment