Monday 1 September 2014


விநாயகர் சிலை ஊர்வலம் (மாதிரி)
 குன்னம்,: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தில் விநா யகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டிற் கு பின்னர் நேற்று சிலையை காவிரியில் கரைத்திட விழா கமிட்டி குழுவினர் மற்றும் பொது மக்கள் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குன்னம் வட்டாட்சியர் மணிவேல், மங்களமேடு டிஎஸ்பி கோ விந்தராசு, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம், ஆர்ஐ இளவரசன், விஏஓ மனோக ரன் மற்றும் போலீசார் பென்னக்கோணம் கிராமத்திற்கு சென்று விநாயகர் சிலையை லப்பைக்குடிக்காடு பேரூராட்சி வழியாக எடுத்து செல்லக் கூடாது, மாற்று வழியில் சிலையை எடுத்து செல்லுங்கள், இல்லையேல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அறிவுறுத்தி, லப்பைக்குடிக்காடு பேரூ ராட்சி வழியாக சிலையை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பென்னக்கோணம் கிராம மக்கள் சிலையுடன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு வருடமும், லப்பைக்குடிக்காடு வழியாக சிலையை கொண்டு செல்ல அனுமதித்து விட்டு தற்போது வேண்டுமென்றே வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பராபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பியதோடு, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி கழிவு நீர் அ¬ னத்தும் பென்னக்கோணம் வழியாக தான் செல்கிறது என கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

-தினகரன்.

0 comments:

Post a Comment