Tuesday 30 September 2014


கை.களத்தூர்- அய்ய னார்பாளையம் இடையே பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் கட்டும் பணி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத் துள்ள கை.களத்தூரிலிருந்து அய்யனார்பாளையம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண் டும் குழியுமாக கிடந்தது. மேலும் இந்த சாலையின் இடையே செல்லும் ஆற்றில் பாலம் ஏதும் இல்லாததால் மழை காலங்களில் கடந்து செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பிரதம மந்திரி கிராம இணைப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப் பட்டது.

துரிதப்படுத்த கோரிக்கை

இந்நிலையில் பணிகள் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும் தார்சாலை அமைக் கும் பணியும், பாலம் கட்டும் பணியும் ஆமை வேகத்திலேயே நடந்து வருகி றது. குறிப்பாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடப்பதால் லேசான மழை பெய்தால் கூட ஆற்று பள்ளத்தில் நீர் தேங்கி போக் குவரத்திற்கு மிகுந்த இடை யூறு ஏற்படு கிறது. இத னால் வாகன ஓட்டிகள் ஆற்றைக் கடக்கும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாகனத்தை ஓட்ட வேண் டிய சூழ்நிலை உள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடக்கும் பாலம் கட்டும் பணியையும், தார் சாலை அமைக்கும் பணியை யும் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் துரிதப்படுத்தி பணிகளை உடனடியாக முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு விட வேண்டும் என அய்யனார்பாளையம் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தினத்தந்தி.

0 comments:

Post a Comment