Sunday 28 September 2014



 சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு, கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஈடுபட்ட ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதன் எதிரொலியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான தனியார் பேருந்துகள் மற்றும் கார் வேன், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் சனிக்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டன. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், மாலை 3 மணியிலிருந்து அரசுப் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சாலைகளில் ஆங்காங்கே இறக்கிவிடப்பட்டனர். இதில், அருகிலுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் நடந்தே சென்றனர்.

திருச்சி, துறையூர், ஆத்தூர், சேலம், கடலூர் உள்ளிட்ட வழித்தடங்களை சேர்ந்த பயணிகள் தங்களது பகுதிக்கு செல்ல முடியாமல், குழந்தைகளுடன் பேருந்து நிலையத்திலேயே காத்து கிடந்தனர்.

மேலும் தேநீரகம், உணவகம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். வெளியூரிலிருந்து வந்த, பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் பயணித்த பயணிகள் துறைமங்கலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்திலேயே இறக்கிவிடப்பட்டனர். அப்பகுதியிலும் செயல்பட்டு வந்த கடைகளும் மூடப்பட்டிருந்ததால் பயணிகளும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாகினர்.

இதையறிந்த, அங்குள்ள அரசு குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து சமைத்து அரசு போக்குவரத்து அலுவலக வளாகத்துக்கு வெளியே காத்திருந்த பயணிகளுக்கும், குழந்தைகளுக்கும் இலவசமாக உணவு வழங்கினர்.
ஜெயலலிதா குற்றவாளி என்ற அறிவிப்பு வெளியானவுடன் அ.தி.மு.க.வினர் கருணாநிதி உருவ பொம்மை எறித்து கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
 அங்கிருந்த 50 அடி உயர திமுக கொடி கம்ப த்தை வெட்டி சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து பெரம்பலூரில் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பஸ் நிலையத்தில் குவிந்திருந்த அதிமுகவினர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு, பலக்கரை அருகே உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
 பெரம்பலூரில்



அதிமுகவினர் அழிச்சாட்டியத்தின் காரணமாக  2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடைகள் அடைக்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வியாபாரிகள் அதிமுகவினரின் போராட்டத்துக்கு பயந்து பெரம்பலூரில் உள்ள உணவகங்கள், மருந்துக் கடைகள், பெட்டிக் கடைகள், தேனீரகங்கள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், மினி பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் நடமாட்டமின்றி பெரம்பலூர் நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் நகரின் பிரதான பகுதிகளான பாலக்கரை, பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள், காமராஜர் வளைவு, கடைவீதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment