Friday 19 September 2014


சென்னை, செப். 19–
அம்பத்தூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
சுரேஷ்குமாருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஒரு குழந்தை 6–ம் வகுப்பும், இன்னொரு குழந்தை 4–வது வகுப்பும் படித்து வருகின்றனர். வீட்டு வாடகை மாதம் ரூ.6 ஆயிரம் கொடுத்து வந்தனர்.
சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட பிறகு குடும்பமே தவிப்புக்குள்ளானது. வேலூர் நாராயணிபீடம் நிதி உதவி செய்ததோடு இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்து முன்னணியினர் சுரேஷ்குமார் குடும்பத்துக்கு சொந்த வீடு வாங்கி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்காக நிதி திரட்டி வருகிறார்கள்.
போதிய நிதி இல்லாததால் தற்காலிகமாக குத்தகைக்கு வீடு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நிதி ஆதாரம் கிடைத்ததும் சொந்த வீடு வாங்கப்படும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


-மாலைமலர்.

0 comments:

Post a Comment