Monday 8 September 2014


பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் மேலமாத்தூர் – திட்டக்குடி சாலையில் மருதையான் கோயில் முதல் நல்லறிக்கை கிராமம் வரை ரூ. 15.23 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலைக்கான மேம்பாடு பணியினையும், அந்தூர் கிராமத்தில் ரூ. 4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பாலத்திற்கான இடத்தையும் பார்வையிட்ட கலெக்டர் கூறியதாவது:
வேப்பந்தட்டை முதல் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெய்குப்பை வரை ரூ. 23.27 கோடி மதிப்பிலும், ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் காமராஜர் வளைவிலிருந்து எளம்பலூர் வரை ரூ. 5.46 கோடி மதிப்பீட்டிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
குன்னம் – வேப்பூர் – வயலப்பாடி சாலை ரூ. 18.06 கோடி மதிப்பீட்டிலும் துறையூர் பெரம்பலூர் சாலையில் பாலக்கரை முதல் நான்கு சாலை சந்திப்பு வரை ரூ. 3.39 கோடி மதிப்பீட்டிலும் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆலத்தூர் – செட்டிக்குளம் சாலையில் பொம்மனப்பாடி முதல் செஞ்சேரி வரை ரூ. 13.73 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது.
செட்டிக்குளம் – நக்க சேலம் வரை ரூ. 5.95 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஆய்வுகளின்போது நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர்கள் சுப்பிரமணியன், சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment