Friday 18 July 2014


தன்மானம் காத்த அகரம் இந்துகளுக்கு தலைவணங்குகிறோம்.

காட்டுமிராண்டி திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் கட்டியே தீரவேண்டும் என்று தமிழக அரசு தாயத்து கட்டிக்கொண்டு முஸ்லீம்களுக்காக நமாஸ் செய்து வருகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சியில் நிலம் ஒதுக்கி மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. ரோடு போடவும் புதிய பேருந்துகள் விடவும் கழிவறை கட்டவும் பாலம் அமைக்கவும் தடுப்பணைகள் கட்டவும் சுகாதார வசதிகள் கொடுக்கவும் கல்விச்சாலைகள் அமைக்கவும் நிதி இல்லை என்று ஒப்பாரி வைக்கும் அரசுக்கு மணிமண்டபம் அமைக்க மட்டும் எங்கிருந்து பணம் வந்ததோ?


இந்த மணிமண்டபத்தை கட்டியே தீரவேண்டும் என்ற முணைப்புடன் 17.7.2014 அன்று திண்டுக்கல்லில் கோட்டாசிரியர் திரு. உத்தமன் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் திரு. முருகேசன்,  ரெவின்யூ இன்ஸ்பெக்டர் (RI) திரு. சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய குழு அனைத்து கிராம மக்களிடமும் மணிமண்டபம் கட்ட ஆதரவு வேண்டிய கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கிராம மக்களும் இந்த மணிமண்டபம் வரக்கூடாது நாங்கள் உயிரோடு உள்ளவரை இது கட்டப்படக்கூடாது என்று ஒரே குரலில் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த இந்து ஒற்றுமை அரசு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்ததது. இந்த கிராமத்து மக்களின் சமயப்பற்றும் சமுதாய அக்கறையும் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்துக்களுக்கும் இருந்தால் பிரிவினைவாதத்திலிருந்தும், பயங்கரவாதத்திலிருந்தும் மதமாற்றத்திலிருந்தும் சமுதாய கேடுகளிலிருந்தும் நம் நாட்டை காப்பாற்ற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களது போராட்டம் நமது போராட்டம். இந்த போராட்டத்தை நாம் விரிபடுத்தி அதற்கு வலு சேர்க்கவேண்டும். இந்த தன்மானம் காத்த இந்துக்களுக்கு இந்து சமுதாயம் தலைவணங்கி பாராட்டுகளை தெரிவிக்கிறது.

திப்பு சுல்தான் ஹைதர் அலி மணிமண்டப ஆலோசனை கூட்டத்தில் அகரம் பேரூராட்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்துக்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு பதிவிடுகிறோம். 

சுப்பையா கவுண்டர்
திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் துலுக்க அணையை கட்டி தண்ணீரை தடுத்து பஞ்சத்தை ஏற்படுத்தினர்.  அபிராமி அம்மன் சிலையை உடைத்து இன்றுவரை கோவிலில் பூஜை இல்லாமல் செய்துள்ளவன் திப்பு ஹைதர். அதனால் இந்துக்கள் சாமியை கும்பிட முடியாத நிலை தொடர்கிறது.
திப்பு சுல்தானுக்கு மணிமண்டபம் எங்க கிராமத்திற்கு வருவதால் இந்துக்களின் பாரம்பரியமே அழியும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாங்கள் ஆடல் பாடல்களுடன் விழாக்கள் நடத்தும் போது எல்லாம் அவர்களால் பிரச்சினைகள் வரும். வெளிநாடுகளிலிருந்து அவங்களுக்கு நிறைய பணம் வரும் அவங்க எது வேண்டுமென்றாலும் செய்வார்கள்.  அதனால், அய்யா அவர்களை வேண்டிக்கேட்டு கொள்வது என்னவென்றால் கவர்மெண்ட்டுகிட்ட பேசி இதை புரியவைக்கவேண்டும். 

ஊர் மணியக்காரர் சார்பாக வினோத்
திப்பு சுல்தான் ஹைதர் அலி இருவருக்கும் மணிமண்டபம் கட்டக்கூடாது ஏனென்றால் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியா  ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக போராடவில்லை. அவர்கள் மொத்தமாக இந்தியாவை ஆளவேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். மேலும், இவர்கள் இருவராலும் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள். 
அடுத்ததாக, திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் உடனுறை பத்மகீரீஸ்வரர் கோவிலை உடைத்தவர்கள் இந்த திப்பு சுல்தான் ஹைதர் அலியும் தான். திண்டுக்கல் கோட்டை இந்துக்களின் சொத்து தான். இன்னும் இங்குச் சென்று இந்துக்கள் சாமி கும்பிட முடியாத சூழ்நிலைதான் இங்கு உள்ளது. 
பேகம்பூர், பாரப்பட்டி, பள்ளப்பட்டி இந்த மூன்று ஊர்களில் முஸ்லீம்கள் அதிகமாக உள்ளனர், இப்பொழுது மணிமண்டபம் இப்பகுதியில் வருகிறது என்றவுடன் 50 முஸ்லீம்கள் இந்த பகுதியில் வந்து குடியேறியுள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் சுப்ரமணியம் சிவா. அவருக்கு இன்னும் மணிமண்டபம் கட்ட முடியாத நாட்டில் திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் எதற்கு?
இந்த இடத்திலிருந்து தான் நாங்கள் பாரம்பரியமாக முத்தாலம்மன் கோவில் விழாவிற்கு பொங்கல் வைத்து கரகம் எடுத்து கோலகலமாக தாரை தப்படை அடித்து ஊர்வலம் செல்வது வழக்கம். தாரை தப்படை அடித்தாலே அல்லா எழுந்து விடுவார் என்று சொல்பவர்கள் அவர்கள்... ஆகையால் சிறிதும் அவர்களுக்கும் எங்களுக்கும் ஒத்துவராது..
ஒரேடியாக ஒரு சமுதாயத்தினரை குறை சொல்லாதீர், என்று அரசு அதிகாரிகள் இடைமறித்தனர். உடனே இந்துக்கள் அனைவரும் சத்தம் போட்டு ஒரு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமைதி திரும்பியவுடன் வினோத் தொடர்ந்தார்.
அத்வானி யாத்திரையில் குண்டு வெடித்தது உங்களுக்கு நன்றாகவே தெரியும் அந்த தீவிரவாதியை பள்ளிவாசலில் வைத்து தான் பிடித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எந்த நிச்சயத்தில் தீவிரவாதிகள் இங்கு வந்து இங்கு அடைக்கலம் புக மாட்டார்கள் என்று சொல்கிறீர்கள்?

சங்கர் கணேஷ் 
திப்பு சுல்தான் ஹைதர் அலியால் கர்நாடகத்திலிருந்து துரத்தி அடிக்கப்பட்டவர்கள் தான் கவுடர் இன மக்கள். விதல்நாயக்கன்பட்டி, லட்சுமனன் பட்டி, கிரியம்பட்டி, பெரியமல்லனம்பட்டி, சின்னமல்லனம்பட்டிபெரும்பான்மையாக உள்ளவர்கள் கவுடர் இன மக்கள். அவர்களின் குலதெய்வம் எல்லாம் அங்கு தான் உள்ளது. இப்படி திப்பு சுல்தான் ஹைதர் அலியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் இந்த மணிமண்டபம் வருவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 
திப்புசுல்தான் ஹைதர் அலிக்கு அவர்கள் சொந்த ஊரிலியே மணிமண்டபம் கட்டாதபோது திண்டுக்கல்லில் எதற்கு மணிமண்டபம் இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் வந்து போவார்கள். பிறகு இவர்கள் லல்ஜிகாத் என்ற பெயரில் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களை மதம்மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
திண்டுக்கல் சுற்றி பள்ளிவாசல் வழியாக எந்தவிதமான ஊர்வலமும் செல்லமுடியாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே மணிமண்டபம் அமையப்போகிறது என்றவுடனேயே இந்த இடத்தை சுற்றி முஸ்லீம்கள் நிலத்தை வாங்கியுள்ளார்கள். பிறகு மெஜாரிட்டியாக உள்ள நாங்க மைனாரிட்டியாக ஆகிவிடுவோம்.  முஸ்லீம்கள் திப்பு ஹைதர் அலியை தலைவராக சித்தரித்து பேரணி நடத்தியுள்ளனர். இதனால் இளைய சமுதாயத்திற்கு தப்பான ஒரு நபரை தலைவராக காட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போஸ்

அபிராமி அம்மன் கோவில் கட்டவேண்டாம் என்று சொன்ன MLA திப்புசுல்தான் மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கூறுகிறார். இந்த ஊருக்கு இந்த மணிமண்டபம் தேவையே இல்லை. இந்த கோவில் பூஜை இன்றி இருப்பதால் இந்த ஊரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

முத்து
அகரம், தாடிக்கொம்பில் உள்ள எங்கள் மக்கள் அமைதியாக உள்ளனர். திப்பு ஹைதர் மணிமண்டபம் கலெக்டர் ஆபீஸ் முன்னால் கட்டுவது தான் பாதுகாப்பு. நாங்கள் ஊர்திருவிழா கொண்டாடுவோம் அதெல்லாம் அவர்களுக்கு ஒத்துவராது. 

தள்ளப்பட்டி கிராமம்
முஸ்லீம்களின் கலாச்சாரம் வேறு நம்ம கலாச்சாரம் வேறு அதனால் கலாச்சார சீரழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஊர்காரர்கள் பயப்படுகிறார்கள். 

சுக்காம்பட்டி கிராமம்
அகரம், இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி அதனால் இந்துக்களின் உணர்வுகள் பாதிக்கப்படுகிறது.

திருமலை பாலாஜி
இந்த மணிமண்டபம் வருவதனால் பெரும்பான்மையான மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. முஸ்லீம்கள் இப்போது அங்கு இல்லை. இந்த மணிமண்டபத்தினால் முஸ்லீம் மக்கள் அங்கு வந்து அதிகமாக கூடத்தொடங்குவார்கள் அதனால் பரம்பரையாக இருந்து வரும் மக்களும் அவர்களும் இடையே விரோதம் வரும்.  பயங்கரவாதி என்றால் முஸ்லீமாகத்தான் இருப்பார்கள் அது தான் என் கருத்து. திண்டுக்கல் என்பது கேரளாவிற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு மாவட்டம். கேரளாவைத்தான் அனைத்து இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் மையமாக வைத்து செயல்பட்டு கொண்டு உள்ளது, இது மலைச்சார்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு வந்து மறைந்து இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். 

இரண்டு விசயம் நான் இங்க குறிப்பிடவிரும்புகிறேன். திப்பு ஹைதர் அலி சுதந்திரபோராட்ட வீர்ர்கள் இல்லை என்பதற்கு வரலாற்று சான்றுகள் அடங்கிய புத்தகத்தை கொடுத்துள்ளோம். எம்ஜிஆரின் முன்னோர்கள்  திப்பு ஹைதர் அலியால் அடித்து விரட்டப்பட்டவர்கள் என்பதை ஆரூர்தாஸ் எழுதியுள்ளார்கள். இது இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி. ஏற்கனவே இங்கு மதக்கலவரங்கள் நடந்துள்ளன. 

முடிவாக ஊர்மக்கள் ஒரே குரலில் பின்வருமாறு கூறினார்கள்
முத்தாலம்மன் கோவில் அருகில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. முத்தாலம்மன் கோவில் விழா  ஊர்வலம் பக்கத்தில் உள்ள பூஞ்சோலைக்கு செல்லும் அப்படி செல்லும் போது ஆடல் பாடல்கள், தாரைதப்படையுடன் செல்வது வழக்கம். இது பராம்பரியமாக நடக்கும் திருவிழா. இதற்கு மிக அருகில் 100 அடி இடைவெளி தான் இந்த மணிமண்டபத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது, 

ஒட்டு மொத்த  எங்கள் முடிவு இங்கு மணிமண்டபம் வரக்கூடாது. எங்க எதிர்ப்பு மீறி நிறைவேற்றினால் நாங்கள் எங்கள் கிராம மக்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு எங்களுக்கு மாற்று இடம் தாருங்கள் போய்விடுகிறோம் என்று சொல்லி ஊர்மக்கள் கூட்டத்தை விட்டு அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

- vsrc.in 

0 comments:

Post a Comment