Thursday 31 July 2014


பெரம்பலூர் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின்மூலம் கிராம வறுமைஒழிப்பு சங்கங்கள் வேப்பூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய மூன்று வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குழுக் களை வலுப்படுத்தி பயிற்சி மற்றும் ஆதாரநிதி வழங்கப்பட்டுவருகிறது.
மாற்றுத்தினாளிகள் மற்றும்நலிவுற் றோர் வாழ் வில் முன்னேற்றமடைய தாங்கள் சிறு தொ ழில் தொடங்க தனி நபர்கடன் வழங்கியும் மாற்று திறனாளிகளுக்கு தேவை யான உதவி உபகரணங்களும் பெற்று தரப் பட்டு வருகி றது. 18வயதுமுதல் 35வயது வரையுள்ள இளைஞர்களுக்கு ஜேசிபி டிரை விங், வெல்டிங், கணினி, டை லரிங், கேட்ட ரிங், சிஎன்சி, கொத்தனார், பிளம் பிங், சென்ட்ரிங், பொக்லிங் டிரைவிங் போன்ற பயிற்சியளித்து பயி ற்சி முடிந்தவுடன் தனியார் நிறுவனங் களில் வேலை வாய்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு கிராம வறுமைஒழிப்பு சங்கங்களின்மூலம் கிராம கற்றல் மையம் அமைக்கப்பட்டு போட்டித் தேர்வாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு, புத்தகம் மற்றும் சிடிக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புது வாழ்வுத் திட்டத்தின்மூலம் தற்பொழுது அந்தூர், வ.களத்தூர், பாடாலூர் ஆகியகிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் மின்ஆளுமைத் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் சேவைமை யம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்மூலம் பொது மக் கள் பயன்பெறும் வகையில் வருமான சான்று, ஜாதிச்சான்று, இருப்பிடச்சான்று, விதவைசான்று மற்றும் முதல் பட்டதாரிக்கானசான்று போன்ற சான்றிதழ்களை இந்த மையத்திலேயே பெற் றுக் கொள்வதற்கான வசதி கள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அந்தூர், வ.களத்தூர், பாடாலூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்சொன்ன சான்றிதழ் வாங்குவதற்காக வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு செல்லவேண்டியதில்லை. பொதுமக்கள் சேவை மையங்களிலேயே பதிவுசெய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த அரியவாய்ப்பினை முறையாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கலெக்டர் (பொ)ராஜன் துரை தெரி வித்துள்ளார்.


-தினகரன்.

0 comments:

Post a Comment